FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Tuesday, February 15, 2022

புதுக்கோட்டை நகராட்சியில் தி.மு.க. போட்டி வேட்பாளராக களம் இறங்கிய வாய்பேச முடியாத பெண்


12.02.2022
புதுக்கோட்டை:
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு போட்டி வேட்பாளர்களும், சுயேட்சை வேட்பாளர்களும் களம் இறங்கி உள்ளனர். புதுக்கோட்டை நகராட்சி 31-வது வார்டில் வாய்பேச முடியாத, காது கேட்காத மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் நம்பிக்கையுடன் களம் இறங்கியுள்ளார்.

புதுக்கோட்டை போஸ் நகர் 9-வது வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். வாய்பேச முடியாத, காது கேட்காத மாற்றுத்திறனாளி. இவரது மனைவி சரிதா (வயது 36). 8-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். டெய்லராக வேலை பார்த்து வருகிறார்.
இவரது கணவர் அங்குள்ள ஒரு தனியார் சோப்பு கம்பெனியில் கூலி தொழிலாளியாக இருக்கிறார். இரு வேறு சமூகத்தை சேர்ந்த இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

சுப்பிரமணியன் குடும்பத்தினர் பாரம்பரியமாக தி.மு.க.வில் இருக்கிறார்கள். இதையடுத்து சரிதா கட்சி சார்பில் போட்டியிட மனு அளித்து நேர்காணலிலும் பங்கேற்றார். ஆனால் இறுதியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. வேறு வேட்பாளர் தி.மு.க. சார்பில் நிறுத்தப்பட்டார். இருப்பினும் நம்பிக்கை இழக்காத சரிதா சுயேட்சையாக 31-வது வார்டில் போட்டியிடுகிறார்.

தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக சரிதாவின் கொழுந்தனார் மணி (கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி) கூறியதாவது:-

எனது அண்ணி சரிதா திறமையானவர். மக்களுடன் சகஜமாக பழகுவார். மக்களுக்கு எந்த பிரச்சினை என்றாலும் முன்னால் போய் நிற்பார். காது கேட்காத வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி என்றாலும் சைகை மூலம் அவரிடம் பேச வேண்டியதில்லை. நமது வாய் அசைவினை வைத்தே நாம் என்ன பேசுகிறோம் என் பதை தீர்க்கமாக உணர்ந்து கொள்வார்.

வாய்பேச முடியாத, காது கேட்காதவர் வெற்றி பெற்றால் மக்கள் பிரச்சினைகளை எவ்வாறு கேட்டு, நகரட்சியில் குரல் கொடுப்பார்கள் என சிலர் கேட்கிறார்கள். அதற்கும் அண்ணி (சரிதா) விடை கொடுத்துள்ளார்.

எழுத்துப்பூர்வமாக நகராட்சியில் வாதாடி மக்கள் பிரச்சினைகளை, தேவைகளை பூர்த்தி செய்வேன் என்கிறார். வாக்குறுதிகளுடன், இதனையும் துண்டு பிரசுரமாக அச்சிட்டு வாக்காளர்களுக்கு வினியோகிக்கிறோம். அரசியல் கட்சிகள் பணத்தால் ஜெயித்து விடலாம் என கருதுகிறார்கள். இந்த வார்டில் 80 மாற்றுத்திறனாளிகள் இருக்கிறார்கள்.

அண்ணன் மாற்று சமூகத்தை சேர்ந்த அண்ணியை கரம் பிடித்ததால் இருவேறு சமூகத்திலும் ஏராளமான சொந்த பந்தங்கள் இருக்கிறார்கள். சரிதாவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.


No comments:

Post a Comment