FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Thursday, October 13, 2022

காணாமல் போய் 6 ஆண்டுகளுக்குப் பிறகு; `ஆதார்' உதவியால் குடும்பத்துடன் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர்

 

பீகாரின் ககாரியா மாவட்டத்தில் நவம்பர் 2016-ம் ஆண்டு மாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவன் (15 வயது) காணாமல் போயிருக்கிறான். சிறுவனின் குடும்பத்தினர் அவனைப் பல இடங்களில் தேடியும் அவன் கிடைக்கவில்லை. இந்த நிலையில், அதே ஆண்டு, நவம்பர் மாதம் 28-ம் தேதி நாக்பூர் ரயில் நிலையத்தில் அந்த மாற்றுத்திறனாளி சிறுவனை மீட்ட ரயில் நிலைய அதிகாரிகள், அவனை நாக்பூரில் உள்ள அரசுக் காப்பகத்தில் ஒப்படைத்தனர். காப்பகத்தில் அவருக்கு பிரேம் ரமேஷ் இங்கலே என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த நிலையில், அண்மையில் அந்தப் பெயரிலேயே சிறுவனுக்கு ஆதார் அட்டை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அந்தக் காப்பகத்தின் கண்காணிப்பாளர் விண்ணப்பித்திருக்கிறார்.

ஆனால் அந்தச் சிறுவனின் கைரேகை ஏற்கெனவே ஒரு ஆதாரத்துடன் பொருந்தியதால், புதிய ஆதார் எண்ணை உருவாக்க முடியவில்லை. இதனால் குழப்பம் நீடித்திருக்கிறது. அதையடுத்து, மும்பையிலுள்ள ஆதார் ஆணையத்தின் மண்டலக் கண்காணிப்பாளர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டிருக்கிறார். விசாரணையில், பீகாரின் ககாரியா மாவட்டத்தைச் சேர்ந்த சச்சின் குமார் என்ற பெயருடன் 2016-ம் ஆண்டு ஆதார் எண் பதிவு செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.

அதன் பிறகு நடத்தப்பட்ட விரிவான விசாரணையில், பீகாரில் உள்ள மாற்றுத்திறனாளி சிறுவனான சச்சின் குமார் 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் காணாமல்போயிருந்தது தெரியவந்தது. காது கேளாத, ஊமைச் சிறுவன் என்பதால் அவனால் தன்னுடைய விவரங்களைக் காப்பக அதிகாரிகளிடம் தெரிவிக்க முடியாமல் போனதாகக் கூறப்படுகிறது.

அதையடுத்து, ஆதார் அட்டையில் இருந்த முகவரிக்கு காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில் அவருடைய தாய் மற்றும் உறவினர்கள் நாக்பூருக்கு விரைந்து சச்சின் குமாரை மீட்டு வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு சச்சின் குமார் (21) ஆதார் அட்டையின் உதவியுடன் மீண்டும் தன் குடும்பத்துடன் இணைந்த சம்பவம் அனைவரையும் நெகிழச்செய்திருக்கிறது.



சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி தற்கொலை - என்ன நடந்தது?!

05.10.2022
உத்தரப்பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் 17 வயது காது கேளாத, வாய் பேச முடியாத சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக, 21 வயது இளைஞர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட அந்த இளைஞர் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, காவல்துறை அவரைத் தேடிவந்தது. அவர் அலிகார் நகரில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது.

இது தொடர்பாக காவல்துறை, "பாலியல் வன்கொடுமை குற்றவாளி அலிகாரில் மறைந்திருந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை தன் சகோதரருடன் சென்றிருக்கிறார். பின்னர் அவர் ராஜ்புரா பகுதியிலுள்ள கிராமத்தில் இருக்கும் தன் சகோதரியின் வீட்டுக்குச் சென்றார். அங்கு தங்கியிருந்த அவர் திடீரென வாந்தி எடுக்கத் தொடங்கியிருக்கிறார். உடனே, அவர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை இறந்தார். உடலை பிரேத பரிசோதனை செய்ததில் அவர் விஷம் அருந்தியிருப்பதாகத் தெரியவந்திருக்கிறது.

குற்றம்சாட்டப்பட்டவரின் சகோதரர் கூறுகையில், ``என் சகோதரர் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு தொடர்பாக பயந்துகொண்டிருந்தார். அதனால், நாங்கள் பாதிக்கப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்துவைக்க சிறுமியின் குடும்பத்தினரைச் சமாதானப்படுத்த முயன்றோம். ஆனால் அவர்கள் மறுத்து, காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார்கள்.

போலீஸ் நடவடிக்கை மற்றும் சிறைத் தண்டனைக்கு பயந்து விஷத்தை உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்' எனத் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக தீவிரமாக விசாரித்துவருகிறோம்" எனத் தெரிவித்திருக்கிறது. காவல்துறை நடவடிக்கைக்கு பயந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.