FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Thursday, October 13, 2022

காணாமல் போய் 6 ஆண்டுகளுக்குப் பிறகு; `ஆதார்' உதவியால் குடும்பத்துடன் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர்

 

பீகாரின் ககாரியா மாவட்டத்தில் நவம்பர் 2016-ம் ஆண்டு மாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவன் (15 வயது) காணாமல் போயிருக்கிறான். சிறுவனின் குடும்பத்தினர் அவனைப் பல இடங்களில் தேடியும் அவன் கிடைக்கவில்லை. இந்த நிலையில், அதே ஆண்டு, நவம்பர் மாதம் 28-ம் தேதி நாக்பூர் ரயில் நிலையத்தில் அந்த மாற்றுத்திறனாளி சிறுவனை மீட்ட ரயில் நிலைய அதிகாரிகள், அவனை நாக்பூரில் உள்ள அரசுக் காப்பகத்தில் ஒப்படைத்தனர். காப்பகத்தில் அவருக்கு பிரேம் ரமேஷ் இங்கலே என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த நிலையில், அண்மையில் அந்தப் பெயரிலேயே சிறுவனுக்கு ஆதார் அட்டை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அந்தக் காப்பகத்தின் கண்காணிப்பாளர் விண்ணப்பித்திருக்கிறார்.

ஆனால் அந்தச் சிறுவனின் கைரேகை ஏற்கெனவே ஒரு ஆதாரத்துடன் பொருந்தியதால், புதிய ஆதார் எண்ணை உருவாக்க முடியவில்லை. இதனால் குழப்பம் நீடித்திருக்கிறது. அதையடுத்து, மும்பையிலுள்ள ஆதார் ஆணையத்தின் மண்டலக் கண்காணிப்பாளர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டிருக்கிறார். விசாரணையில், பீகாரின் ககாரியா மாவட்டத்தைச் சேர்ந்த சச்சின் குமார் என்ற பெயருடன் 2016-ம் ஆண்டு ஆதார் எண் பதிவு செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.

அதன் பிறகு நடத்தப்பட்ட விரிவான விசாரணையில், பீகாரில் உள்ள மாற்றுத்திறனாளி சிறுவனான சச்சின் குமார் 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் காணாமல்போயிருந்தது தெரியவந்தது. காது கேளாத, ஊமைச் சிறுவன் என்பதால் அவனால் தன்னுடைய விவரங்களைக் காப்பக அதிகாரிகளிடம் தெரிவிக்க முடியாமல் போனதாகக் கூறப்படுகிறது.

அதையடுத்து, ஆதார் அட்டையில் இருந்த முகவரிக்கு காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில் அவருடைய தாய் மற்றும் உறவினர்கள் நாக்பூருக்கு விரைந்து சச்சின் குமாரை மீட்டு வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு சச்சின் குமார் (21) ஆதார் அட்டையின் உதவியுடன் மீண்டும் தன் குடும்பத்துடன் இணைந்த சம்பவம் அனைவரையும் நெகிழச்செய்திருக்கிறது.



No comments:

Post a Comment