FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Friday, July 28, 2023

இனி மாணவர் சேர்க்கையின்போது வாய் பேசாதவர், காது கேளாதவர் எனும் சொற்கள் பயன்படுத்தப்படாது



சென்னை: பல்கலைக்கழகம், கல்லூரி மாணவர் சேர்க்கையின்போது சில சொற்கள் பயன்படுத்தப்படாது என்று பல்கலைக்கழக சட்டத்தில் தமிழக அரசு திருத்தம் செய்துள்ளது.

தமிழகம் முழுவதும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட காது கேளாத,வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். இந்நிலையில், காது கேளாதவர், வாய் பேச முடியாதவர் மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர் ஆகியசொற்கள் மாணவர் சேர்க்கையின்போது பயன்படுத்தக்கூடாது என்று பல்கலைக்கழகம் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. எனவே, பல்கலைக்கழகம், கல்லூரி மாணவர் சேர்க்கையின்போது, மாற்றுத் திறனாளிகள் என மட்டும் குறிப்பிட வேண்டும். தனிப்பட்ட குறையை சுட்டிக்காட்டி அதன் மூலம் நவீன தீண்டாமையை கடைபிடிப்பதை தடுக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்த சட்ட திருத்தம் மூலம் மாணவர் சேர்க்கையின்போதே மாற்றுத் திறனாளி வகையை கேள்வியாக கேட்பது தவிர்க்கப்படும். மாற்றுத் திறனாளிகள் என குறிப்பிட்டே விண்ணப்ப பதிவு, தேர்வுக்கான சலுகை கோருதலை இனிமேல் மேற்கொள்ள முடியும். தமிழகம் முழுவதும் காது கேளாத,வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளிகளின் செவித்திறன்களை பரிசோதனை செய்ய மாவட்டம்தோறும் சிறப்பு பரிசோதனை முகாம்களை நடத்த வேண்டும் என தமிழக அரசு அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment