FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Friday, July 28, 2023

இனி மாணவர் சேர்க்கையின்போது வாய் பேசாதவர், காது கேளாதவர் எனும் சொற்கள் பயன்படுத்தப்படாது



சென்னை: பல்கலைக்கழகம், கல்லூரி மாணவர் சேர்க்கையின்போது சில சொற்கள் பயன்படுத்தப்படாது என்று பல்கலைக்கழக சட்டத்தில் தமிழக அரசு திருத்தம் செய்துள்ளது.

தமிழகம் முழுவதும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட காது கேளாத,வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். இந்நிலையில், காது கேளாதவர், வாய் பேச முடியாதவர் மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர் ஆகியசொற்கள் மாணவர் சேர்க்கையின்போது பயன்படுத்தக்கூடாது என்று பல்கலைக்கழகம் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. எனவே, பல்கலைக்கழகம், கல்லூரி மாணவர் சேர்க்கையின்போது, மாற்றுத் திறனாளிகள் என மட்டும் குறிப்பிட வேண்டும். தனிப்பட்ட குறையை சுட்டிக்காட்டி அதன் மூலம் நவீன தீண்டாமையை கடைபிடிப்பதை தடுக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்த சட்ட திருத்தம் மூலம் மாணவர் சேர்க்கையின்போதே மாற்றுத் திறனாளி வகையை கேள்வியாக கேட்பது தவிர்க்கப்படும். மாற்றுத் திறனாளிகள் என குறிப்பிட்டே விண்ணப்ப பதிவு, தேர்வுக்கான சலுகை கோருதலை இனிமேல் மேற்கொள்ள முடியும். தமிழகம் முழுவதும் காது கேளாத,வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளிகளின் செவித்திறன்களை பரிசோதனை செய்ய மாவட்டம்தோறும் சிறப்பு பரிசோதனை முகாம்களை நடத்த வேண்டும் என தமிழக அரசு அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment