FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Friday, July 28, 2023

இனி மாணவர் சேர்க்கையின்போது வாய் பேசாதவர், காது கேளாதவர் எனும் சொற்கள் பயன்படுத்தப்படாது



சென்னை: பல்கலைக்கழகம், கல்லூரி மாணவர் சேர்க்கையின்போது சில சொற்கள் பயன்படுத்தப்படாது என்று பல்கலைக்கழக சட்டத்தில் தமிழக அரசு திருத்தம் செய்துள்ளது.

தமிழகம் முழுவதும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட காது கேளாத,வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். இந்நிலையில், காது கேளாதவர், வாய் பேச முடியாதவர் மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர் ஆகியசொற்கள் மாணவர் சேர்க்கையின்போது பயன்படுத்தக்கூடாது என்று பல்கலைக்கழகம் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. எனவே, பல்கலைக்கழகம், கல்லூரி மாணவர் சேர்க்கையின்போது, மாற்றுத் திறனாளிகள் என மட்டும் குறிப்பிட வேண்டும். தனிப்பட்ட குறையை சுட்டிக்காட்டி அதன் மூலம் நவீன தீண்டாமையை கடைபிடிப்பதை தடுக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்த சட்ட திருத்தம் மூலம் மாணவர் சேர்க்கையின்போதே மாற்றுத் திறனாளி வகையை கேள்வியாக கேட்பது தவிர்க்கப்படும். மாற்றுத் திறனாளிகள் என குறிப்பிட்டே விண்ணப்ப பதிவு, தேர்வுக்கான சலுகை கோருதலை இனிமேல் மேற்கொள்ள முடியும். தமிழகம் முழுவதும் காது கேளாத,வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளிகளின் செவித்திறன்களை பரிசோதனை செய்ய மாவட்டம்தோறும் சிறப்பு பரிசோதனை முகாம்களை நடத்த வேண்டும் என தமிழக அரசு அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment