FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Saturday, July 29, 2023

வாய் பேச முடியாத, காது கேட்காத 6 வயதுக்கு கீழ் உள்ள குழந்தை களுக்கு காது அறுவை சிகிச்சை



தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் பாலாஜி நாதன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :- 

தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் காது, மூக்கு ,தொண்டை அறுவை சிகிச்சை பிரிவில் பிறவியிலேயே வாய் பேச முடியாத, காது கேட்காத 6 வயதுக்கு கீழ் உள்ள குழந்தை களுக்கு காது அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. காது கேளாத குழந்தைகளால் பேசவும் இயலாது. 

இந்த குழந்தைகளை ஆரம்ப கட்டத்திலே கண்டறிந்து அதற்கு முறையான சிகிச்சை அளிப்பது அவசியம். இதற்கு அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வாகும். இந்த அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் செய்வதற்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை செலவாகும்.

ஆனால் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 50-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளோம். அவர்கள் நலமுடன் உள்ளனர். 

அறுவை சிகிச்சை செய்த பிறகு குழந்தைகளுக்கு பேச்சு பயிற்சி என்பது முக்கியமாகும். அதனை முறைப்படி செய்யும் போது மட்டுமே குழந்தைகளால் பேச இயலும். எனவே பொதுமக்கள் இது போன்ற வாய்ப்புகளை பயன்படுத்தி வாய் பேச முடியாத, காது கேளாத குழந்தைகளுக்கு பேச்சு மற்றும் செவித்திறன் பெற்று பயன்பெற வேண்டும்.






No comments:

Post a Comment