FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Sunday, May 17, 2026

மௌனமாய் பேசும் உலகம்! | நட்சத்திரக் குழந்தைகள் 12



வாயுள்ள பிள்ளை மட்டுமல்ல, சைகை மொழி பேசும் பிள்ளையும் வழக்கில் வெல்லும் என நிரூபித்தவர் செவித்திறன் குறைபாடுடைய வழக்கறிஞர் சாரா சன்னி. உச்ச நீதிமன்றத்தில் சைகை மொழியில் முதன்முதலில் சாரா வாதாட, சைகை மொழிபெயர்ப்பாளர் சாராவின் வாதத்தை மொழிபெயர்த்த வரலாற்றுச் சிறப்புமிக்க காட்சி 2023 செப்டம்பரில் நிகழ்ந்தது.

அன்று சைகை மொழி தொடர்புமொழியாக மட்டுமல்லாமல் காதுகேளாதோரின் வாழ்வில் புது விடியலையும் கொண்டுவந்தது. ஒரு சராசரி நபரால் 0-25 டெசிபல் ஒலிகளைக் கேட்க இயலும். அதற்கு மேல் ஒலியைக் கேட்க இயலாமல் போகும்போது மென்மையான காது கேளாமையில் (26-40 டெசிபல்) தொடங்கி முழுமை யான கேட்டல் திறன் இழப்பு (91 டெசிபல்) வரை ஏற்படக்கூடும்.

காது கேளாதோரின் தந்தை

காது கேளாதோரின் அனுபவங்களைப் பிரதிபலிக்க கை அசைவுகள், விரல் அமைப்புகள், முகபாவனைகள், உடல் நிலைகள் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பால் உருவாவது சைகை மொழி. தனித்துவமான இலக்கணம், சொற்கள், வாக்கிய அமைப்பு (Syntax) ஆகியவை கொண்ட ஒரு முழுமையான மொழி அமைப்பு இது.

பேசும் மொழிக்கு ஏற்ப இலக்கண அமைப்பும் மாறுபடும், ஒவ்வொரு நாட்டின் சைகை மொழியும் தனித்துவமானது. ஆதிகாலத்தில், கைகளின் அசைவுகள், முகபாவனைகள் மூலம் தொடர்புகொள்வது மனிதர்களின் இயல்பான தொடர்பு முறையாக இருந்தது.

பொ.ஆ.மு. (கி.மு.) 5ஆம் நூற்றாண்டி லேயே சாக்ரடீஸ், கை சைகைகள் மூலம் காது கேளாதோர் தொடர்புகொண்டதைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். ஸ்பெயினில் மதகுருக்கள், மௌன விரதத்தின்போது பயன்படுத்தப்பட்ட கைச்சைகை களை மாற்றி அமைத்து, காது கேளாத மாணவர் களுக்குக் கற்பிக்கத் தொடங்கினர்.

பின்னர், ஜுவான் பாப்லோ போனெட் 1620இல், உலகின் முதல் கை விரல் எழுத்துமுறை (manual alphabet system) குறித்த நூலை வெளியிட்டார். பிரான்சில், ‘காது கேளாதோரின் தந்தை’ என்ற ழைக்கப்பட்ட அப்பே சார்ல்ஸ்-மிஷேல் த லெப், காது கேளாதோருக்கான முதல் இலவச பொதுப் பள்ளியை நிறுவினார்.

சைகைகளைத் தொகுத்து அகராதி உருவாக்கி, இயல்பான சைகைகளுடன் இணைத்து அவர் கற்பித்தார். 1981இல் இந்திய சைகை மொழி அகராதி முதன்முதலில் வெளிவந்தது. பின்னர், 2011இல் இந்திய சைகை மொழி ஆராய்ச்சி - பயிற்சி மையம் நிறுவப்பட்டது.

கட்டாயமாக்கும் சட்டம்

காது கேளாதோரின் வாழ்க்கையில் கல்வி, வேலை, சமூக உரிமை, சுயநிறைவு ஆகியவற்றை உருவாக் கும் அடிப்படையாகச் சைகை மொழி உள்ளது. சைகை மொழி மூலம் கணிதம், அறிவியல் போன்ற பாடங்களைக் கற்பிக்கும்போது, கருத்து அடிப்படை யிலான புரிதல் மாணவர்களுக்கு மேம்படுகிறது.

காது கேளாதோருக்கு அரசுத் தகவல்கள், அறிவிப்புகள், சேவைகள் அனைத்தும் சைகை மொழியில் அணுகக்கூடியதாக இருக்க வேண்டும் என்கிறது சட்டம்.

பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், நீதிமன்றங்கள் என எல்லா இடங்களிலும் சைகை மொழி ஆதரவு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

அரசு விழாக்கள், நிகழ்ச்சிகளில் சைகை மொழி மொழிபெயர்ப்பாளர்கள் இருப்பது கட்டாயமாக்கப் பட்டுள்ளது. அரசு, சில தனியார் ஊடகங்களும் சைகை மொழி விளக்கத்துடன் செய்திகளை ஒளிபரப்புகின்றன.

சவால்களும் வழிகளும்

திறமையான சைகை மொழிபெயர்ப்பாளர்கள் பற்றாக்குறை இன்றுவரை இருப்பதால் மருத்துவம், நீதித்துறை, அரசு அலுவலகங்கள் போன்ற முக்கிய துறைகளில் அணுகல் சிரமமாக உள்ளது. அரசு சேவைகளில் சட்ட ரீதியான ஏற்பாடுகள் இருந்தாலும், அவை முழுமையாக நடைமுறைக்கு வராததும் ஒரு பெரிய குறையாக உள்ளது.

இத்தகைய சவால்களை சமாளிக்க, பல்வேறு முன்னேற்ற நடவடிக்கைகள் அவசியமாகின்றன. பள்ளிகளில் சைகை மொழியை ஒரு பாடமாக

அறிமுகப்படுத்துவது, காது கேளாத மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து மாணவர்களுக் கும் உள்ளடக்கிய கல்வியை உருவாக்கும்.

ஆசிரியர்களுக்கு சைகை மொழிப் பயிற்சி வழங்கப்பட வேண்டும், ஊடகங்களில் சைகை மொழியின் பயன்பாட்டை அதிகரிப்பது, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை அதிகரிக்கும்.

மேலும், அரசு சேவை களில் சைகை மொழி வசதிகளைக் கட்டாயமாக்கி, அனைத்து துறைகளிலும் அணுகல் சமத்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும். இதனுடன், மக்களுக் கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டால், சைகை மொழி ஒரு பரவலான சமூக இயக்கமாக வளர முடியும்.



No comments:

Post a Comment