FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Sunday, May 17, 2026

செவித்திறன் குறையுடையோருக்கான அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை

12.05.2026
தர்மபுரியில் செயல்பட்டு வரும், செவித்திறன் குறைபாடுடையோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை குறித்து, மாவட்ட கலெக்டர் சதீஸ், வெளியிட்டுள்ள அறிக்கை:

தர்மபுரி அருகே, இலக்கியம்பட்டியில் செவித்திறன் குறைபாடுடையோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் படிக்கும் செவித்திறன் குறைபாடுடைய மாணவ, மாணவியருக்கு, ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை சீருடை, பாடப் புத்தகங்கள், பாட குறிப்பேடுகள் மற்றும் கல்வி உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.

அனைத்து மாணவ, மாணவியருக்கும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. மாணவ, மாணவியர் தங்கி படிக்க, இலவச உணவுடன் கூடிய, தனித்தனி விடுதி வசதி உள்ளது. சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்களால், திறன் வகுப்பறைகள் மற்றும் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்களின் மூலம், பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

மாலையில் மாணவ, மாணவியர் விளையாட விளையாட்டு மைதானம் மற்றும் சிறுவர் பூங்கா போன்ற வசதி உள்ளது. 2026 2027ம் ஆண்டிற்கான மாணவ, மாணவியர் சேர்க்கை நடந்து வருகிறது. செவித்திறன் குறைபாடுடைய மாணாக்கர்களை இப்பள்ளியில் சேர்க்கலாம்.

மேலும் விபரங்களுக்கு, செவித்திறன் குறைபாடுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி, இலக்கியம்பட்டி, தர்மபுரி - 5, என்ற முகவரியில் நேரில் அணுகலாம் அல்லது பள்ளி தலைமை ஆசிரியர் மொபைல், 94884 73760 என்ற எண்ணை தொடர்பு கொண்டு விபரம் கேட்டறியலாம்.









No comments:

Post a Comment