FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Tuesday, November 4, 2014

மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளை மார்ச் மாதத்துக்குள் ஏற்படுத்த வேண்டும்

மும்பை,02 November 2014,
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள், நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களிலும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

இதுகுறித்து, அனைத்து கல்வி நிலையங்களுக்கும் உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்று மகாராஷ்டிர மாநிலத்திலும், மத்திய அரசில் உள்ள மாற்றுத் திறனாளிகள் துறைகளின் தலைமை ஆணையர்களுக்கு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

சாய்வுதள படிக்கட்டுகள், மின்தூக்கிகள், கழிப்பறைகள், சக்கர நாற்காலிகள்
உள்ளிட்டவை மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளில் அடங்கும்.

இந்த உத்தரவு, கல்வி நிலையங்களோடு சார்ந்த தேர்வு மையங்கள், அலுவலகங்கள் உள்ளிட்ட கட்டடங்களுக்கும் பொருந்தும் என்றும் தங்கள் உத்தரவையடுத்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கை, அடுத்த மாதம் 15-ம் தேதிக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

மகாராஷ்டிர மாநிலம், புணேவைச் சேர்ந்த ஆகாங்க்ஷா வர்தமான் கோலே என்ற மாற்றுத் திறனாளி மாணவி தாக்கல் செய்த மனு மீது மும்பை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி மோஹித் ஷா தலைமையிலான அமர்வு மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தது.

புணேயில் உள்ள கல்லூரியில் பயிலும் ஆகாங்க்ஷா வர்தமான் கோலே, "எனது கல்லூரியில் இந்த மாதம் 7-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளன.

ஆனால், மாற்றுத் திறனாளி என்ற வகையில், கல்லூரியில் உரிய வசதிகள் இல்லாத நிலையில் என்னால் தேர்வு எழுத இயலாது. எனவே, இதுகுறித்து உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்' என்று கோரியிருந்தார்.

மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்து, 2001 ஜூலை 11, 2012 பிப்ரவரி 9 ஆகிய தேதிகளில் அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் பல்கலைக்கழக மானியக் குழு பிறப்பித்த உத்தரவு, 2012 டிசம்பர் 8-ஆம் தேதியிட்ட மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் ஆணை ஆகியவற்றை மனுதாரர் மேற்கோள் காட்டினார்.

அதையடுத்து, அவரது கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், மனுதாரர் தேர்வு எழுதுவதற்கான உரிய வசதிகளை கல்லூரி நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.'

No comments:

Post a Comment