FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Tuesday, November 4, 2014

மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளை மார்ச் மாதத்துக்குள் ஏற்படுத்த வேண்டும்

மும்பை,02 November 2014,
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள், நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களிலும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

இதுகுறித்து, அனைத்து கல்வி நிலையங்களுக்கும் உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்று மகாராஷ்டிர மாநிலத்திலும், மத்திய அரசில் உள்ள மாற்றுத் திறனாளிகள் துறைகளின் தலைமை ஆணையர்களுக்கு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

சாய்வுதள படிக்கட்டுகள், மின்தூக்கிகள், கழிப்பறைகள், சக்கர நாற்காலிகள்
உள்ளிட்டவை மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளில் அடங்கும்.

இந்த உத்தரவு, கல்வி நிலையங்களோடு சார்ந்த தேர்வு மையங்கள், அலுவலகங்கள் உள்ளிட்ட கட்டடங்களுக்கும் பொருந்தும் என்றும் தங்கள் உத்தரவையடுத்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கை, அடுத்த மாதம் 15-ம் தேதிக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

மகாராஷ்டிர மாநிலம், புணேவைச் சேர்ந்த ஆகாங்க்ஷா வர்தமான் கோலே என்ற மாற்றுத் திறனாளி மாணவி தாக்கல் செய்த மனு மீது மும்பை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி மோஹித் ஷா தலைமையிலான அமர்வு மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தது.

புணேயில் உள்ள கல்லூரியில் பயிலும் ஆகாங்க்ஷா வர்தமான் கோலே, "எனது கல்லூரியில் இந்த மாதம் 7-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளன.

ஆனால், மாற்றுத் திறனாளி என்ற வகையில், கல்லூரியில் உரிய வசதிகள் இல்லாத நிலையில் என்னால் தேர்வு எழுத இயலாது. எனவே, இதுகுறித்து உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்' என்று கோரியிருந்தார்.

மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்து, 2001 ஜூலை 11, 2012 பிப்ரவரி 9 ஆகிய தேதிகளில் அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் பல்கலைக்கழக மானியக் குழு பிறப்பித்த உத்தரவு, 2012 டிசம்பர் 8-ஆம் தேதியிட்ட மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் ஆணை ஆகியவற்றை மனுதாரர் மேற்கோள் காட்டினார்.

அதையடுத்து, அவரது கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், மனுதாரர் தேர்வு எழுதுவதற்கான உரிய வசதிகளை கல்லூரி நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.'

No comments:

Post a Comment