FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Tuesday, November 4, 2014

மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளை மார்ச் மாதத்துக்குள் ஏற்படுத்த வேண்டும்

மும்பை,02 November 2014,
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள், நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களிலும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

இதுகுறித்து, அனைத்து கல்வி நிலையங்களுக்கும் உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்று மகாராஷ்டிர மாநிலத்திலும், மத்திய அரசில் உள்ள மாற்றுத் திறனாளிகள் துறைகளின் தலைமை ஆணையர்களுக்கு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

சாய்வுதள படிக்கட்டுகள், மின்தூக்கிகள், கழிப்பறைகள், சக்கர நாற்காலிகள்
உள்ளிட்டவை மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளில் அடங்கும்.

இந்த உத்தரவு, கல்வி நிலையங்களோடு சார்ந்த தேர்வு மையங்கள், அலுவலகங்கள் உள்ளிட்ட கட்டடங்களுக்கும் பொருந்தும் என்றும் தங்கள் உத்தரவையடுத்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கை, அடுத்த மாதம் 15-ம் தேதிக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

மகாராஷ்டிர மாநிலம், புணேவைச் சேர்ந்த ஆகாங்க்ஷா வர்தமான் கோலே என்ற மாற்றுத் திறனாளி மாணவி தாக்கல் செய்த மனு மீது மும்பை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி மோஹித் ஷா தலைமையிலான அமர்வு மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தது.

புணேயில் உள்ள கல்லூரியில் பயிலும் ஆகாங்க்ஷா வர்தமான் கோலே, "எனது கல்லூரியில் இந்த மாதம் 7-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளன.

ஆனால், மாற்றுத் திறனாளி என்ற வகையில், கல்லூரியில் உரிய வசதிகள் இல்லாத நிலையில் என்னால் தேர்வு எழுத இயலாது. எனவே, இதுகுறித்து உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்' என்று கோரியிருந்தார்.

மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்து, 2001 ஜூலை 11, 2012 பிப்ரவரி 9 ஆகிய தேதிகளில் அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் பல்கலைக்கழக மானியக் குழு பிறப்பித்த உத்தரவு, 2012 டிசம்பர் 8-ஆம் தேதியிட்ட மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் ஆணை ஆகியவற்றை மனுதாரர் மேற்கோள் காட்டினார்.

அதையடுத்து, அவரது கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், மனுதாரர் தேர்வு எழுதுவதற்கான உரிய வசதிகளை கல்லூரி நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.'

No comments:

Post a Comment