FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Tuesday, November 4, 2014

மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளை மார்ச் மாதத்துக்குள் ஏற்படுத்த வேண்டும்

மும்பை,02 November 2014,
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள், நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களிலும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

இதுகுறித்து, அனைத்து கல்வி நிலையங்களுக்கும் உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்று மகாராஷ்டிர மாநிலத்திலும், மத்திய அரசில் உள்ள மாற்றுத் திறனாளிகள் துறைகளின் தலைமை ஆணையர்களுக்கு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

சாய்வுதள படிக்கட்டுகள், மின்தூக்கிகள், கழிப்பறைகள், சக்கர நாற்காலிகள்
உள்ளிட்டவை மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளில் அடங்கும்.

இந்த உத்தரவு, கல்வி நிலையங்களோடு சார்ந்த தேர்வு மையங்கள், அலுவலகங்கள் உள்ளிட்ட கட்டடங்களுக்கும் பொருந்தும் என்றும் தங்கள் உத்தரவையடுத்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கை, அடுத்த மாதம் 15-ம் தேதிக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

மகாராஷ்டிர மாநிலம், புணேவைச் சேர்ந்த ஆகாங்க்ஷா வர்தமான் கோலே என்ற மாற்றுத் திறனாளி மாணவி தாக்கல் செய்த மனு மீது மும்பை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி மோஹித் ஷா தலைமையிலான அமர்வு மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தது.

புணேயில் உள்ள கல்லூரியில் பயிலும் ஆகாங்க்ஷா வர்தமான் கோலே, "எனது கல்லூரியில் இந்த மாதம் 7-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளன.

ஆனால், மாற்றுத் திறனாளி என்ற வகையில், கல்லூரியில் உரிய வசதிகள் இல்லாத நிலையில் என்னால் தேர்வு எழுத இயலாது. எனவே, இதுகுறித்து உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்' என்று கோரியிருந்தார்.

மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்து, 2001 ஜூலை 11, 2012 பிப்ரவரி 9 ஆகிய தேதிகளில் அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் பல்கலைக்கழக மானியக் குழு பிறப்பித்த உத்தரவு, 2012 டிசம்பர் 8-ஆம் தேதியிட்ட மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் ஆணை ஆகியவற்றை மனுதாரர் மேற்கோள் காட்டினார்.

அதையடுத்து, அவரது கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், மனுதாரர் தேர்வு எழுதுவதற்கான உரிய வசதிகளை கல்லூரி நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.'

No comments:

Post a Comment