FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Saturday, November 1, 2014

அங்கன்வாடி பணியிடம் விண்ணப்பிக்க அழைப்பு

31.10.2014,  திருப்பூர் :
அங்கன்வாடி ஊழியர் பணியிடங்களுக்கு, தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கலெக்டர் கோவிந்தராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:

திருப்பூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தில், 14 திட்ட அலுவலகங்களில் காலியாக உள்ள 183 ஊழியர்கள்; 14 குறு அங்கன்வாடி மையங்களில் 196 உதவியாளர் பணியிடங்களுக்கு பெண்கள் மட்டும் நேர்காணல் மூலம் நியமிக்கப்பட உள்ளனர். அங்கன்வாடி பணியாளர் பணிக்கு, குறைந்த பட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி; மலைவாழ் மக்கள் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 25 முதல் 35 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். விதø வ மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர்கள் 40 வயது, மாற்றுத்திறனாளிகள் 25 முதல் 38 வயதுக்குள் இருக்கலாம். திருமணமானவராகவும், விண்ணப்பிக்கும் காலி பணியிட பகுதியில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும். இருப்பிட சான்றாக ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, சொத்து வரி ரசீது, மின் கட்டண ரசீது ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று இருக்க வேண்டும். முன்னுரிமை கோருவதற்கு, உரிய சான்று இருக்க வேண்டும்.

அங்கன்வாடி உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், தமிழில் சரளமாக எழுத படிக்க தெரிந்தவராக இருக்க வேண்டும். 20 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர், மலைவாழ் மக்களுக்கு 45 வயது, மாற்றுத்திறனாளிகள் 43 வயதுக்குள் இருக்கலாம். இன சுழற்சி முறையில் நியமிக்கப்படுவதால், அதே இனத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். இதுகுறித்த விவரங்கள், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை, வரும் 14ம் தேதி வரை அளிக்கலாம். தகுதியானோருக்கு மட்டும், நேர்காணல் கடிதம் அனுப்பப்படும், என, தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment