FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Saturday, November 1, 2014

அங்கன்வாடி பணியிடம் விண்ணப்பிக்க அழைப்பு

31.10.2014,  திருப்பூர் :
அங்கன்வாடி ஊழியர் பணியிடங்களுக்கு, தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கலெக்டர் கோவிந்தராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:

திருப்பூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தில், 14 திட்ட அலுவலகங்களில் காலியாக உள்ள 183 ஊழியர்கள்; 14 குறு அங்கன்வாடி மையங்களில் 196 உதவியாளர் பணியிடங்களுக்கு பெண்கள் மட்டும் நேர்காணல் மூலம் நியமிக்கப்பட உள்ளனர். அங்கன்வாடி பணியாளர் பணிக்கு, குறைந்த பட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி; மலைவாழ் மக்கள் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 25 முதல் 35 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். விதø வ மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர்கள் 40 வயது, மாற்றுத்திறனாளிகள் 25 முதல் 38 வயதுக்குள் இருக்கலாம். திருமணமானவராகவும், விண்ணப்பிக்கும் காலி பணியிட பகுதியில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும். இருப்பிட சான்றாக ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, சொத்து வரி ரசீது, மின் கட்டண ரசீது ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று இருக்க வேண்டும். முன்னுரிமை கோருவதற்கு, உரிய சான்று இருக்க வேண்டும்.

அங்கன்வாடி உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், தமிழில் சரளமாக எழுத படிக்க தெரிந்தவராக இருக்க வேண்டும். 20 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர், மலைவாழ் மக்களுக்கு 45 வயது, மாற்றுத்திறனாளிகள் 43 வயதுக்குள் இருக்கலாம். இன சுழற்சி முறையில் நியமிக்கப்படுவதால், அதே இனத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். இதுகுறித்த விவரங்கள், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை, வரும் 14ம் தேதி வரை அளிக்கலாம். தகுதியானோருக்கு மட்டும், நேர்காணல் கடிதம் அனுப்பப்படும், என, தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment