FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Saturday, November 1, 2014

அங்கன்வாடி பணியிடம் விண்ணப்பிக்க அழைப்பு

31.10.2014,  திருப்பூர் :
அங்கன்வாடி ஊழியர் பணியிடங்களுக்கு, தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கலெக்டர் கோவிந்தராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:

திருப்பூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தில், 14 திட்ட அலுவலகங்களில் காலியாக உள்ள 183 ஊழியர்கள்; 14 குறு அங்கன்வாடி மையங்களில் 196 உதவியாளர் பணியிடங்களுக்கு பெண்கள் மட்டும் நேர்காணல் மூலம் நியமிக்கப்பட உள்ளனர். அங்கன்வாடி பணியாளர் பணிக்கு, குறைந்த பட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி; மலைவாழ் மக்கள் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 25 முதல் 35 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். விதø வ மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர்கள் 40 வயது, மாற்றுத்திறனாளிகள் 25 முதல் 38 வயதுக்குள் இருக்கலாம். திருமணமானவராகவும், விண்ணப்பிக்கும் காலி பணியிட பகுதியில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும். இருப்பிட சான்றாக ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, சொத்து வரி ரசீது, மின் கட்டண ரசீது ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று இருக்க வேண்டும். முன்னுரிமை கோருவதற்கு, உரிய சான்று இருக்க வேண்டும்.

அங்கன்வாடி உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், தமிழில் சரளமாக எழுத படிக்க தெரிந்தவராக இருக்க வேண்டும். 20 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர், மலைவாழ் மக்களுக்கு 45 வயது, மாற்றுத்திறனாளிகள் 43 வயதுக்குள் இருக்கலாம். இன சுழற்சி முறையில் நியமிக்கப்படுவதால், அதே இனத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். இதுகுறித்த விவரங்கள், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை, வரும் 14ம் தேதி வரை அளிக்கலாம். தகுதியானோருக்கு மட்டும், நேர்காணல் கடிதம் அனுப்பப்படும், என, தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment