FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Saturday, November 1, 2014

அங்கன்வாடி பணியிடம் விண்ணப்பிக்க அழைப்பு

31.10.2014,  திருப்பூர் :
அங்கன்வாடி ஊழியர் பணியிடங்களுக்கு, தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கலெக்டர் கோவிந்தராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:

திருப்பூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தில், 14 திட்ட அலுவலகங்களில் காலியாக உள்ள 183 ஊழியர்கள்; 14 குறு அங்கன்வாடி மையங்களில் 196 உதவியாளர் பணியிடங்களுக்கு பெண்கள் மட்டும் நேர்காணல் மூலம் நியமிக்கப்பட உள்ளனர். அங்கன்வாடி பணியாளர் பணிக்கு, குறைந்த பட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி; மலைவாழ் மக்கள் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 25 முதல் 35 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். விதø வ மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர்கள் 40 வயது, மாற்றுத்திறனாளிகள் 25 முதல் 38 வயதுக்குள் இருக்கலாம். திருமணமானவராகவும், விண்ணப்பிக்கும் காலி பணியிட பகுதியில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும். இருப்பிட சான்றாக ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, சொத்து வரி ரசீது, மின் கட்டண ரசீது ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று இருக்க வேண்டும். முன்னுரிமை கோருவதற்கு, உரிய சான்று இருக்க வேண்டும்.

அங்கன்வாடி உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், தமிழில் சரளமாக எழுத படிக்க தெரிந்தவராக இருக்க வேண்டும். 20 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர், மலைவாழ் மக்களுக்கு 45 வயது, மாற்றுத்திறனாளிகள் 43 வயதுக்குள் இருக்கலாம். இன சுழற்சி முறையில் நியமிக்கப்படுவதால், அதே இனத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். இதுகுறித்த விவரங்கள், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை, வரும் 14ம் தேதி வரை அளிக்கலாம். தகுதியானோருக்கு மட்டும், நேர்காணல் கடிதம் அனுப்பப்படும், என, தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment