FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Thursday, November 13, 2014

மாற்று திறனாளி பெண்ணிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்த கண்டக்டருக்கு ரூ. 27000 அபராதம்

 08.11.2014, விழுப்புரம்:
அரசு பேருந்தில் பயணம் செய்த மாற்றுத்திறனாளியிடம் முழு கட்டணம் வசூலித்த நடத்துனர் மாற்றுத்திறனாளிக்கு இழப்பீடு வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.விழுப்புரம் அருகே ஆசூரை சேர்ந்தவர் ராஜாராம் மகள் ராஜேஸ்வரி (21), மாற்றுத் திறனாளி. கடந்த 2011ம் ஆண்டு ஜூலை 8ம் தேதி திருப்பதியில் இருந்து விழுப்புரத்திற்கு தமிழ்நாடு அரசு பேருந்து விழுப்புரம் கோட்டத்தை சேர்ந்த பஸ்சில் வந்துள்ளார். புதுச்சேரி அருகே அரியூரைச் சேர்ந்த சம்பத் நடத்துனராக இருந்துள்ளார். பேருந்தில் ஏறியதும் ராஜேஸ்வரி தனக்கு அரசால் வழங்கப்பட்ட மாற்றுத்திறனாளி அடையாள அட்டையை காண்பித்து, நான்கில் ஒரு பங்கு கட்டணத்தை கொடுத்துள்ளார்.

அதனை ஏற்க மறுத்த நடத்துனர் இப்பேருந்தில் முழுகட்டணம் தான் வசூலிக்கப்படும் என்று கூறி திருப்பதியிலிருந்து விழுப்புரம் செல்ல மொத்த கட்டணத்தொகை ரூ.198ஐ வசூலித்துள்ளார். ஆனால் அரசாணைப்படி மாற்றுத்திறனாயிளிடம் நான்கில் ஒரு பங்காக ரூ.49.50 பைசா வசூலிக்க வேண்டும். ஆரசாணையை மீறி கூடுதலாக ரூ.148.50 வசூலித்துள்ளார். இதையடுத்து ராஜேஸ்வரி வக்கீல் மூலம் விழுப்புரம் நுகர்வோர் கோர்ட்டில் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தார். அரசு விதிகளை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தது மட்டுமல்லாமல் சக பயணிகள் முன்னிலையில் இழிவாக பேசியதால் மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக அந்த மனுவில் கூறியிருந்தார். மூன்று ஆண்டுகளாக நடந்து வந்த இவ்வழக்கில் நேற்று நீதிபதி கணேசன் தீர்ப்பு கூறினார்.

அதில் நடத்துனர் சம்பத்துக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடும், வழக்கு செலவுத்தொகையாக ரூ.2 ஆயிரம் என மொத்தம் ரூ.27 ஆயிரம் ராஜேஸ்வரிக்கு வழங்க வேண்டும். கூடுதலாக வசூலித்த டிக்கெட் கட்டணம் ரூ.148.50 பைசாவையும் இரண்டு மாதத்திற்குள் திருப்பி கொடுக்க வேண்டும். இதனை விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடத்துனர் சம்பத்தின் மாத சம்பளத்தில் பிடித்து ராஜேஸ்வரிக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

No comments:

Post a Comment