FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Thursday, November 13, 2014

மாற்று திறனாளி பெண்ணிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்த கண்டக்டருக்கு ரூ. 27000 அபராதம்

 08.11.2014, விழுப்புரம்:
அரசு பேருந்தில் பயணம் செய்த மாற்றுத்திறனாளியிடம் முழு கட்டணம் வசூலித்த நடத்துனர் மாற்றுத்திறனாளிக்கு இழப்பீடு வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.விழுப்புரம் அருகே ஆசூரை சேர்ந்தவர் ராஜாராம் மகள் ராஜேஸ்வரி (21), மாற்றுத் திறனாளி. கடந்த 2011ம் ஆண்டு ஜூலை 8ம் தேதி திருப்பதியில் இருந்து விழுப்புரத்திற்கு தமிழ்நாடு அரசு பேருந்து விழுப்புரம் கோட்டத்தை சேர்ந்த பஸ்சில் வந்துள்ளார். புதுச்சேரி அருகே அரியூரைச் சேர்ந்த சம்பத் நடத்துனராக இருந்துள்ளார். பேருந்தில் ஏறியதும் ராஜேஸ்வரி தனக்கு அரசால் வழங்கப்பட்ட மாற்றுத்திறனாளி அடையாள அட்டையை காண்பித்து, நான்கில் ஒரு பங்கு கட்டணத்தை கொடுத்துள்ளார்.

அதனை ஏற்க மறுத்த நடத்துனர் இப்பேருந்தில் முழுகட்டணம் தான் வசூலிக்கப்படும் என்று கூறி திருப்பதியிலிருந்து விழுப்புரம் செல்ல மொத்த கட்டணத்தொகை ரூ.198ஐ வசூலித்துள்ளார். ஆனால் அரசாணைப்படி மாற்றுத்திறனாயிளிடம் நான்கில் ஒரு பங்காக ரூ.49.50 பைசா வசூலிக்க வேண்டும். ஆரசாணையை மீறி கூடுதலாக ரூ.148.50 வசூலித்துள்ளார். இதையடுத்து ராஜேஸ்வரி வக்கீல் மூலம் விழுப்புரம் நுகர்வோர் கோர்ட்டில் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தார். அரசு விதிகளை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தது மட்டுமல்லாமல் சக பயணிகள் முன்னிலையில் இழிவாக பேசியதால் மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக அந்த மனுவில் கூறியிருந்தார். மூன்று ஆண்டுகளாக நடந்து வந்த இவ்வழக்கில் நேற்று நீதிபதி கணேசன் தீர்ப்பு கூறினார்.

அதில் நடத்துனர் சம்பத்துக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடும், வழக்கு செலவுத்தொகையாக ரூ.2 ஆயிரம் என மொத்தம் ரூ.27 ஆயிரம் ராஜேஸ்வரிக்கு வழங்க வேண்டும். கூடுதலாக வசூலித்த டிக்கெட் கட்டணம் ரூ.148.50 பைசாவையும் இரண்டு மாதத்திற்குள் திருப்பி கொடுக்க வேண்டும். இதனை விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடத்துனர் சம்பத்தின் மாத சம்பளத்தில் பிடித்து ராஜேஸ்வரிக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

No comments:

Post a Comment