FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Thursday, November 13, 2014

மாற்று திறனாளி பெண்ணிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்த கண்டக்டருக்கு ரூ. 27000 அபராதம்

 08.11.2014, விழுப்புரம்:
அரசு பேருந்தில் பயணம் செய்த மாற்றுத்திறனாளியிடம் முழு கட்டணம் வசூலித்த நடத்துனர் மாற்றுத்திறனாளிக்கு இழப்பீடு வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.விழுப்புரம் அருகே ஆசூரை சேர்ந்தவர் ராஜாராம் மகள் ராஜேஸ்வரி (21), மாற்றுத் திறனாளி. கடந்த 2011ம் ஆண்டு ஜூலை 8ம் தேதி திருப்பதியில் இருந்து விழுப்புரத்திற்கு தமிழ்நாடு அரசு பேருந்து விழுப்புரம் கோட்டத்தை சேர்ந்த பஸ்சில் வந்துள்ளார். புதுச்சேரி அருகே அரியூரைச் சேர்ந்த சம்பத் நடத்துனராக இருந்துள்ளார். பேருந்தில் ஏறியதும் ராஜேஸ்வரி தனக்கு அரசால் வழங்கப்பட்ட மாற்றுத்திறனாளி அடையாள அட்டையை காண்பித்து, நான்கில் ஒரு பங்கு கட்டணத்தை கொடுத்துள்ளார்.

அதனை ஏற்க மறுத்த நடத்துனர் இப்பேருந்தில் முழுகட்டணம் தான் வசூலிக்கப்படும் என்று கூறி திருப்பதியிலிருந்து விழுப்புரம் செல்ல மொத்த கட்டணத்தொகை ரூ.198ஐ வசூலித்துள்ளார். ஆனால் அரசாணைப்படி மாற்றுத்திறனாயிளிடம் நான்கில் ஒரு பங்காக ரூ.49.50 பைசா வசூலிக்க வேண்டும். ஆரசாணையை மீறி கூடுதலாக ரூ.148.50 வசூலித்துள்ளார். இதையடுத்து ராஜேஸ்வரி வக்கீல் மூலம் விழுப்புரம் நுகர்வோர் கோர்ட்டில் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தார். அரசு விதிகளை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தது மட்டுமல்லாமல் சக பயணிகள் முன்னிலையில் இழிவாக பேசியதால் மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக அந்த மனுவில் கூறியிருந்தார். மூன்று ஆண்டுகளாக நடந்து வந்த இவ்வழக்கில் நேற்று நீதிபதி கணேசன் தீர்ப்பு கூறினார்.

அதில் நடத்துனர் சம்பத்துக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடும், வழக்கு செலவுத்தொகையாக ரூ.2 ஆயிரம் என மொத்தம் ரூ.27 ஆயிரம் ராஜேஸ்வரிக்கு வழங்க வேண்டும். கூடுதலாக வசூலித்த டிக்கெட் கட்டணம் ரூ.148.50 பைசாவையும் இரண்டு மாதத்திற்குள் திருப்பி கொடுக்க வேண்டும். இதனை விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடத்துனர் சம்பத்தின் மாத சம்பளத்தில் பிடித்து ராஜேஸ்வரிக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

No comments:

Post a Comment