FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Sunday, June 3, 2018

பார்வையற்றோர், காதுகேளாதோர் பள்ளியில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்

02.06.2018, தஞ்சாவூர்
தஞ்சை மேம்பாலம் மருத்துவகல்லூரி சாலையில் அமைந்துள்ள பார்வைத்திறன் குறைவுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் செவித்திறன் குறைவுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் முன்பருவப்பள்ளி முதல் 12-ம் வகுப்பு வரை இருபாலர்களுக்கும் உண்டு, உறைவிடப்பள்ளியாக செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளியில் அரசு வழங்கும் அனைத்து கற்றல் உபகரணங்கள், பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்படுகின்றன. மேலும் மாணவர்களுக்கு சிறப்பாசிரியர்களை கொண்டு சீரியமுறையில் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.

இந்த பள்ளிகளில் சேர விரும்புபவர்கள் தங்களது மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையின் நகல், கல்விச்சான்று, மதிப்பெண் சான்று, மாற்றுச்சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். பார்வைதிறன் பாதிக்கப்பட்ட மாணவ-மாணவிகளாக இருந்தால் தலைமை ஆசிரியை, பார்வைத்திறன் குறைவுடையோருக்கான மேல்நிலைப்பள்ளி, மேம்பாலம் என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். செவித்திறன் மற்றும் வாய்பேச முடியாத மாணவ-மாணவிகளாக இருந்தால் தலைமை ஆசிரியர், செவித்திறன் குறைவுடையோருக்கான மேல்நிலைப்பள்ளி, மேம்பாலம், தஞ்சாவூர் என்ற முகவரியிலும் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு தஞ்சை புதிய கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 04362-236791 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment