FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Sunday, June 3, 2018

பார்வையற்றோர், காதுகேளாதோர் பள்ளியில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்

02.06.2018, தஞ்சாவூர்
தஞ்சை மேம்பாலம் மருத்துவகல்லூரி சாலையில் அமைந்துள்ள பார்வைத்திறன் குறைவுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் செவித்திறன் குறைவுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் முன்பருவப்பள்ளி முதல் 12-ம் வகுப்பு வரை இருபாலர்களுக்கும் உண்டு, உறைவிடப்பள்ளியாக செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளியில் அரசு வழங்கும் அனைத்து கற்றல் உபகரணங்கள், பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்படுகின்றன. மேலும் மாணவர்களுக்கு சிறப்பாசிரியர்களை கொண்டு சீரியமுறையில் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.

இந்த பள்ளிகளில் சேர விரும்புபவர்கள் தங்களது மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையின் நகல், கல்விச்சான்று, மதிப்பெண் சான்று, மாற்றுச்சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். பார்வைதிறன் பாதிக்கப்பட்ட மாணவ-மாணவிகளாக இருந்தால் தலைமை ஆசிரியை, பார்வைத்திறன் குறைவுடையோருக்கான மேல்நிலைப்பள்ளி, மேம்பாலம் என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். செவித்திறன் மற்றும் வாய்பேச முடியாத மாணவ-மாணவிகளாக இருந்தால் தலைமை ஆசிரியர், செவித்திறன் குறைவுடையோருக்கான மேல்நிலைப்பள்ளி, மேம்பாலம், தஞ்சாவூர் என்ற முகவரியிலும் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு தஞ்சை புதிய கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 04362-236791 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment