FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Friday, June 8, 2018

மாற்றுத் திறனாளிகள் கணக்கெடுப்பு துவக்கம்


07.06.2018, சென்னை:''தமிழகத்தில், மாற்றுத் திறனாளிகளை கணக்கெடுக்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது,'' என, சமூக நலத்துறை அமைச்சர், சரோஜா தெரிவித்தார்.

சட்டசபையில் நேற்று நடந்த விவாதம்:
தி.மு.க., - மா.சுப்பிரமணியன்: மாற்றுத் திறனாளிகளுக்கு தனி துறையை, கருணாநிதி ஏற்படுத்தி தந்தார். அப்போது, ஏழு பிரிவுகள் மட்டும், மாற்றுத் திறனாளிகள் பட்டியலில் இருந்தன. தற்போது, மத்திய அரசு சட்டத்தின்படி, 21 பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
பழைய கணக்கெடுப்பின்படி, 11.79 லட்சம் மாற்றுத் திறனாளிகள் மட்டுமே உள்ளனர். புதிய சட்டத்தின்படி கணக்கெடுப்பு நடத்தினால், 50 லட்சம் பேர் இருக்கலாம். அவர்களைக் கண்டறிந்து, நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும்.

தி.மு.க., ஆட்சியில், சென்னை மாநகராட்சி சார்பில், முகாம் நடத்தப்பட்டு, மாற்றுத் திறனாளி சான்றிதழ் வழங்கப்பட்டது. அதேபோல், தமிழகம் முழுவதும் நடத்த வேண்டும். அனைத்து மாற்றுத் திறனாளிகளும் பயன்பெறும் வகையில், மாநில தகவல் மையம் அமைக்க வேண்டும். கூட்டுறவு சங்க இயக்குனர் பதவிக்கு, மாற்றுத் திறனாளிகள் மனு தாக்கல் செய்ய, சட்டத்தில் இடமில்லை என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மின் துறை அமைச்சர் தங்கமணி: ஜெ., உத்தரவின்படி, அனைத்து ஒன்றியங்களிலும், மாற்றுத் திறனாளிகளுக்காக, மருத்துவ முகாம் நடத்தப்பட்டுள்ளது. உதவித்தொகை, 1,000 ரூபாயில் இருந்து, 1,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுகிறது.பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன்: மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான, அனைத்து வசதிகளையும், அரசு செய்து வருகிறது. சாலையை கடக்க, ஒலிப்பான் அமைக்கும் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்: மாற்றுத் திறனாளிகள், ஐ.எப்.எஸ்., அதிகாரியாகும் போது, கூட்டுறவு சங்க இயக்குனராக முடியாதா?
முதல்வர் பழனிசாமி: கூட்டுறவு சங்க இயக்குனர் பதவிக்கு, எழுதப் படிக்க தெரிந்தவர்கள், யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் போட்டியிடுவதில் சிக்கல் உள்ளது. இது தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

சமூக நலத் துறை அமைச்சர் சரோஜா: மாற்றுத் திறனாளிகளை கண்டறிய, வீடு வீடாகச் சென்று, மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும், 20 ஆயிரத்து, 600 மாற்றுத் திறனாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். மாற்றுத் திறனாளிகளை கணக்கெடுக்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.இவ்வாறு விவாதம் நடந்தது.

புதிய அறிவிப்புகள் என்ன
மாற்று திறனாளிகள் நலத்துறை விவாத முடிவில், துறை அமைச்சர் சரோஜா வெளியிட்ட அறிவிப்புகள்:* அனைத்து மாவட்டங்களிலும், இரண்டு ஆண்டுகளுக்குள், சிறப்பு குழந்தைகளுக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையங்கள் துவக்கப்படும். முதற்கட்டமாக, 1.57 கோடி ரூபாய் செலவில், 14 மாவட்டங்களில் துவக்கப்படும்* தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும், மனவளர்ச்சி குன்றியோருக்கான, 42 பராமரிப்பு இல்லங்களில், தேர்வு செய்யப்பட்ட, ஐந்து இல்லங்களுக்கு, உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்* செவித்திறன் குறையுடையோருக்காக இயங்கும், ஒன்பது அரசு சிறப்பு பள்ளிகளில், தலா ஒரு வகுப்பறைகள், ஐந்து லட்சம் ரூபாய் செலவில், 'ஸ்மார்ட்' வகுப்பறைகளாக மாற்றப்படும்* சிறப்பு குழந்தைகளுக்கான, 21 பள்ளிகளில், 85 லட்சம் ரூபாய் செலவில், உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும். மேலும், 20 பள்ளிகளில், 'கம்யூட்டர்' தொழில் பயிற்றுனர்கள் நியமிக்கப்படுவர்* மாற்று திறனாளிகள் நலனுக்காக, சிறப்பு வலைத்தளம் நிறுவப்படும். மாற்று திறனாளிகளுக்கு, சட்ட புத்தங்கள் வாங்கவும், சங்கத்தில் பதிவு செய்யவும் வழங்கப்படும், 3,000 ரூபாய் நிதியுதவி, 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்* மாற்று திறனாளிகளுக்கான சட்ட உரிமைகள் - 2016ன்படி, நியமனங்களில், 4 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க, உகந்த பணியிடங்களை கண்டறிந்து, விரைவில் உத்தரவு வழங்கப்படும்.இவ்வாறு அவர் அறிவித்தார்.

No comments:

Post a Comment