FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Friday, June 8, 2018

மாற்றுத் திறனாளிகள் கணக்கெடுப்பு துவக்கம்


07.06.2018, சென்னை:''தமிழகத்தில், மாற்றுத் திறனாளிகளை கணக்கெடுக்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது,'' என, சமூக நலத்துறை அமைச்சர், சரோஜா தெரிவித்தார்.

சட்டசபையில் நேற்று நடந்த விவாதம்:
தி.மு.க., - மா.சுப்பிரமணியன்: மாற்றுத் திறனாளிகளுக்கு தனி துறையை, கருணாநிதி ஏற்படுத்தி தந்தார். அப்போது, ஏழு பிரிவுகள் மட்டும், மாற்றுத் திறனாளிகள் பட்டியலில் இருந்தன. தற்போது, மத்திய அரசு சட்டத்தின்படி, 21 பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
பழைய கணக்கெடுப்பின்படி, 11.79 லட்சம் மாற்றுத் திறனாளிகள் மட்டுமே உள்ளனர். புதிய சட்டத்தின்படி கணக்கெடுப்பு நடத்தினால், 50 லட்சம் பேர் இருக்கலாம். அவர்களைக் கண்டறிந்து, நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும்.

தி.மு.க., ஆட்சியில், சென்னை மாநகராட்சி சார்பில், முகாம் நடத்தப்பட்டு, மாற்றுத் திறனாளி சான்றிதழ் வழங்கப்பட்டது. அதேபோல், தமிழகம் முழுவதும் நடத்த வேண்டும். அனைத்து மாற்றுத் திறனாளிகளும் பயன்பெறும் வகையில், மாநில தகவல் மையம் அமைக்க வேண்டும். கூட்டுறவு சங்க இயக்குனர் பதவிக்கு, மாற்றுத் திறனாளிகள் மனு தாக்கல் செய்ய, சட்டத்தில் இடமில்லை என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மின் துறை அமைச்சர் தங்கமணி: ஜெ., உத்தரவின்படி, அனைத்து ஒன்றியங்களிலும், மாற்றுத் திறனாளிகளுக்காக, மருத்துவ முகாம் நடத்தப்பட்டுள்ளது. உதவித்தொகை, 1,000 ரூபாயில் இருந்து, 1,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுகிறது.பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன்: மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான, அனைத்து வசதிகளையும், அரசு செய்து வருகிறது. சாலையை கடக்க, ஒலிப்பான் அமைக்கும் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்: மாற்றுத் திறனாளிகள், ஐ.எப்.எஸ்., அதிகாரியாகும் போது, கூட்டுறவு சங்க இயக்குனராக முடியாதா?
முதல்வர் பழனிசாமி: கூட்டுறவு சங்க இயக்குனர் பதவிக்கு, எழுதப் படிக்க தெரிந்தவர்கள், யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் போட்டியிடுவதில் சிக்கல் உள்ளது. இது தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

சமூக நலத் துறை அமைச்சர் சரோஜா: மாற்றுத் திறனாளிகளை கண்டறிய, வீடு வீடாகச் சென்று, மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும், 20 ஆயிரத்து, 600 மாற்றுத் திறனாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். மாற்றுத் திறனாளிகளை கணக்கெடுக்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.இவ்வாறு விவாதம் நடந்தது.

புதிய அறிவிப்புகள் என்ன
மாற்று திறனாளிகள் நலத்துறை விவாத முடிவில், துறை அமைச்சர் சரோஜா வெளியிட்ட அறிவிப்புகள்:* அனைத்து மாவட்டங்களிலும், இரண்டு ஆண்டுகளுக்குள், சிறப்பு குழந்தைகளுக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையங்கள் துவக்கப்படும். முதற்கட்டமாக, 1.57 கோடி ரூபாய் செலவில், 14 மாவட்டங்களில் துவக்கப்படும்* தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும், மனவளர்ச்சி குன்றியோருக்கான, 42 பராமரிப்பு இல்லங்களில், தேர்வு செய்யப்பட்ட, ஐந்து இல்லங்களுக்கு, உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்* செவித்திறன் குறையுடையோருக்காக இயங்கும், ஒன்பது அரசு சிறப்பு பள்ளிகளில், தலா ஒரு வகுப்பறைகள், ஐந்து லட்சம் ரூபாய் செலவில், 'ஸ்மார்ட்' வகுப்பறைகளாக மாற்றப்படும்* சிறப்பு குழந்தைகளுக்கான, 21 பள்ளிகளில், 85 லட்சம் ரூபாய் செலவில், உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும். மேலும், 20 பள்ளிகளில், 'கம்யூட்டர்' தொழில் பயிற்றுனர்கள் நியமிக்கப்படுவர்* மாற்று திறனாளிகள் நலனுக்காக, சிறப்பு வலைத்தளம் நிறுவப்படும். மாற்று திறனாளிகளுக்கு, சட்ட புத்தங்கள் வாங்கவும், சங்கத்தில் பதிவு செய்யவும் வழங்கப்படும், 3,000 ரூபாய் நிதியுதவி, 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்* மாற்று திறனாளிகளுக்கான சட்ட உரிமைகள் - 2016ன்படி, நியமனங்களில், 4 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க, உகந்த பணியிடங்களை கண்டறிந்து, விரைவில் உத்தரவு வழங்கப்படும்.இவ்வாறு அவர் அறிவித்தார்.

No comments:

Post a Comment