FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Friday, June 8, 2018

மாற்றுத் திறனாளிகள் கணக்கெடுப்பு துவக்கம்


07.06.2018, சென்னை:''தமிழகத்தில், மாற்றுத் திறனாளிகளை கணக்கெடுக்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது,'' என, சமூக நலத்துறை அமைச்சர், சரோஜா தெரிவித்தார்.

சட்டசபையில் நேற்று நடந்த விவாதம்:
தி.மு.க., - மா.சுப்பிரமணியன்: மாற்றுத் திறனாளிகளுக்கு தனி துறையை, கருணாநிதி ஏற்படுத்தி தந்தார். அப்போது, ஏழு பிரிவுகள் மட்டும், மாற்றுத் திறனாளிகள் பட்டியலில் இருந்தன. தற்போது, மத்திய அரசு சட்டத்தின்படி, 21 பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
பழைய கணக்கெடுப்பின்படி, 11.79 லட்சம் மாற்றுத் திறனாளிகள் மட்டுமே உள்ளனர். புதிய சட்டத்தின்படி கணக்கெடுப்பு நடத்தினால், 50 லட்சம் பேர் இருக்கலாம். அவர்களைக் கண்டறிந்து, நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும்.

தி.மு.க., ஆட்சியில், சென்னை மாநகராட்சி சார்பில், முகாம் நடத்தப்பட்டு, மாற்றுத் திறனாளி சான்றிதழ் வழங்கப்பட்டது. அதேபோல், தமிழகம் முழுவதும் நடத்த வேண்டும். அனைத்து மாற்றுத் திறனாளிகளும் பயன்பெறும் வகையில், மாநில தகவல் மையம் அமைக்க வேண்டும். கூட்டுறவு சங்க இயக்குனர் பதவிக்கு, மாற்றுத் திறனாளிகள் மனு தாக்கல் செய்ய, சட்டத்தில் இடமில்லை என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மின் துறை அமைச்சர் தங்கமணி: ஜெ., உத்தரவின்படி, அனைத்து ஒன்றியங்களிலும், மாற்றுத் திறனாளிகளுக்காக, மருத்துவ முகாம் நடத்தப்பட்டுள்ளது. உதவித்தொகை, 1,000 ரூபாயில் இருந்து, 1,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுகிறது.பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன்: மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான, அனைத்து வசதிகளையும், அரசு செய்து வருகிறது. சாலையை கடக்க, ஒலிப்பான் அமைக்கும் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்: மாற்றுத் திறனாளிகள், ஐ.எப்.எஸ்., அதிகாரியாகும் போது, கூட்டுறவு சங்க இயக்குனராக முடியாதா?
முதல்வர் பழனிசாமி: கூட்டுறவு சங்க இயக்குனர் பதவிக்கு, எழுதப் படிக்க தெரிந்தவர்கள், யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் போட்டியிடுவதில் சிக்கல் உள்ளது. இது தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

சமூக நலத் துறை அமைச்சர் சரோஜா: மாற்றுத் திறனாளிகளை கண்டறிய, வீடு வீடாகச் சென்று, மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும், 20 ஆயிரத்து, 600 மாற்றுத் திறனாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். மாற்றுத் திறனாளிகளை கணக்கெடுக்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.இவ்வாறு விவாதம் நடந்தது.

புதிய அறிவிப்புகள் என்ன
மாற்று திறனாளிகள் நலத்துறை விவாத முடிவில், துறை அமைச்சர் சரோஜா வெளியிட்ட அறிவிப்புகள்:* அனைத்து மாவட்டங்களிலும், இரண்டு ஆண்டுகளுக்குள், சிறப்பு குழந்தைகளுக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையங்கள் துவக்கப்படும். முதற்கட்டமாக, 1.57 கோடி ரூபாய் செலவில், 14 மாவட்டங்களில் துவக்கப்படும்* தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும், மனவளர்ச்சி குன்றியோருக்கான, 42 பராமரிப்பு இல்லங்களில், தேர்வு செய்யப்பட்ட, ஐந்து இல்லங்களுக்கு, உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்* செவித்திறன் குறையுடையோருக்காக இயங்கும், ஒன்பது அரசு சிறப்பு பள்ளிகளில், தலா ஒரு வகுப்பறைகள், ஐந்து லட்சம் ரூபாய் செலவில், 'ஸ்மார்ட்' வகுப்பறைகளாக மாற்றப்படும்* சிறப்பு குழந்தைகளுக்கான, 21 பள்ளிகளில், 85 லட்சம் ரூபாய் செலவில், உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும். மேலும், 20 பள்ளிகளில், 'கம்யூட்டர்' தொழில் பயிற்றுனர்கள் நியமிக்கப்படுவர்* மாற்று திறனாளிகள் நலனுக்காக, சிறப்பு வலைத்தளம் நிறுவப்படும். மாற்று திறனாளிகளுக்கு, சட்ட புத்தங்கள் வாங்கவும், சங்கத்தில் பதிவு செய்யவும் வழங்கப்படும், 3,000 ரூபாய் நிதியுதவி, 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்* மாற்று திறனாளிகளுக்கான சட்ட உரிமைகள் - 2016ன்படி, நியமனங்களில், 4 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க, உகந்த பணியிடங்களை கண்டறிந்து, விரைவில் உத்தரவு வழங்கப்படும்.இவ்வாறு அவர் அறிவித்தார்.

No comments:

Post a Comment