FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Monday, June 11, 2018

யார் வெல்வார் என குறி சொல்லும் ரஷிய காது கேளாத பூனை

மாஸ்கோ, ஜூன் 10: உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் எந்த அணி வெல்லும் என ரஷ்யாவைச் சேர்ந்த காது கேளாத அச்சிலீஸ் என்ற பெயர் கொண்ட பூனை குறி சொல்ல அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளின் போதும் விலங்குகளைக் கொண்டு பட்டம் வெல்லும் அணி எது என முன்கூட்டியே கணித்து கூறுவது வாடிக்கை.

இதன்படி கடந்த 2010-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் பால் என்ற பெயர் கொண்ட ஆக்டோபஸ் குறி சொல்லியது. ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் வெல்லும் என சரியாக கணித்தது.

அதற்கடுத்து 2014 பிரேசில் கால்பந்து போட்டியின் போது ஐக்கிய அரபு நாட்டில் பாலைவனத்தில் இருந்த ஷாகின் என்ற ஓட்டகம் எந்த அணி வெல்லும் என குறி சொல்லியது. அதன் முன்பு கால்பந்து ஒன்றையும், இரு அணிகளின் கொடிகளையும் வைத்து அது தனது பல்லால் எந்த அணி என கணித்து கூறியது.

அதே போல் தற்போது ரஷிய உலகக் கோப்பை போட்டிக்கும் காது கேளாத அச்சிலீஸ் பூனை அதிகாரப்பூர்வ குறி கூறும் பூனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அச்சிலீஸ் பூனை முன்பு இரு அணிகளின் கொடிகள் அடங்கிய கிண்ணம் வைக்கப்பட்டு எந்த அணி வெல்லும் என அது குறிப்பிடும்.

No comments:

Post a Comment