FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Monday, June 11, 2018

யார் வெல்வார் என குறி சொல்லும் ரஷிய காது கேளாத பூனை

மாஸ்கோ, ஜூன் 10: உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் எந்த அணி வெல்லும் என ரஷ்யாவைச் சேர்ந்த காது கேளாத அச்சிலீஸ் என்ற பெயர் கொண்ட பூனை குறி சொல்ல அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளின் போதும் விலங்குகளைக் கொண்டு பட்டம் வெல்லும் அணி எது என முன்கூட்டியே கணித்து கூறுவது வாடிக்கை.

இதன்படி கடந்த 2010-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் பால் என்ற பெயர் கொண்ட ஆக்டோபஸ் குறி சொல்லியது. ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் வெல்லும் என சரியாக கணித்தது.

அதற்கடுத்து 2014 பிரேசில் கால்பந்து போட்டியின் போது ஐக்கிய அரபு நாட்டில் பாலைவனத்தில் இருந்த ஷாகின் என்ற ஓட்டகம் எந்த அணி வெல்லும் என குறி சொல்லியது. அதன் முன்பு கால்பந்து ஒன்றையும், இரு அணிகளின் கொடிகளையும் வைத்து அது தனது பல்லால் எந்த அணி என கணித்து கூறியது.

அதே போல் தற்போது ரஷிய உலகக் கோப்பை போட்டிக்கும் காது கேளாத அச்சிலீஸ் பூனை அதிகாரப்பூர்வ குறி கூறும் பூனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அச்சிலீஸ் பூனை முன்பு இரு அணிகளின் கொடிகள் அடங்கிய கிண்ணம் வைக்கப்பட்டு எந்த அணி வெல்லும் என அது குறிப்பிடும்.

No comments:

Post a Comment