FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Monday, June 11, 2018

யார் வெல்வார் என குறி சொல்லும் ரஷிய காது கேளாத பூனை

மாஸ்கோ, ஜூன் 10: உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் எந்த அணி வெல்லும் என ரஷ்யாவைச் சேர்ந்த காது கேளாத அச்சிலீஸ் என்ற பெயர் கொண்ட பூனை குறி சொல்ல அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளின் போதும் விலங்குகளைக் கொண்டு பட்டம் வெல்லும் அணி எது என முன்கூட்டியே கணித்து கூறுவது வாடிக்கை.

இதன்படி கடந்த 2010-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் பால் என்ற பெயர் கொண்ட ஆக்டோபஸ் குறி சொல்லியது. ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் வெல்லும் என சரியாக கணித்தது.

அதற்கடுத்து 2014 பிரேசில் கால்பந்து போட்டியின் போது ஐக்கிய அரபு நாட்டில் பாலைவனத்தில் இருந்த ஷாகின் என்ற ஓட்டகம் எந்த அணி வெல்லும் என குறி சொல்லியது. அதன் முன்பு கால்பந்து ஒன்றையும், இரு அணிகளின் கொடிகளையும் வைத்து அது தனது பல்லால் எந்த அணி என கணித்து கூறியது.

அதே போல் தற்போது ரஷிய உலகக் கோப்பை போட்டிக்கும் காது கேளாத அச்சிலீஸ் பூனை அதிகாரப்பூர்வ குறி கூறும் பூனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அச்சிலீஸ் பூனை முன்பு இரு அணிகளின் கொடிகள் அடங்கிய கிண்ணம் வைக்கப்பட்டு எந்த அணி வெல்லும் என அது குறிப்பிடும்.

No comments:

Post a Comment