FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Saturday, September 14, 2019

தருமபுரி: தையல் இயந்திரம் பெற மாற்றுத் திறனாளி பெண்கள் விண்ணப்பிக்கலாம்



ஆவின் பால் பொருள் விற்பனை மையம்; பயன்பெற அழைப்பு




ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், 2019-20ம் நிதியாண்டுக்கு கை, கால்கள், காது கேளாத, வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கு, சுய வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில், ஆவின் பால் பொருட்கள் விற்பனை மையம் அமைக்க, ஒருவருக்கு, 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. தகுதி உடைய மாற்றுத்திறனாளிகள், தங்களது ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, தேசிய அடையாள அட்டையுடன், செப்., 25க்குள், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

நாகர்கோவில் அரசு ஐ.டி.ஐ.யில் சேர செவி-பேச்சு திறனற்றோருக்கு வாய்ப்பு



காது கேளாத, வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி பெண் பலாத்கார வழக்கு: இரு வாலிபர்களுக்கு சிறை தண்டனை

14.09.2019, கிருஷ்ணகிரி: மாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில், இருவருக்கு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பஸ்தி பகுதியை சேர்ந்த, 13 வயது சிறுமி காது கேளாத, வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி. இவர், 2013 நவ., 2ல் கடைக்கு சென்றார். அப்போது ஓசூர் பாகலூர் ரோட்டை சேர்ந்த ஆர்.சுரேஷ், 26, பாரதியார் நகரை சேர்ந்த எஸ்.சுரேஷ், 23, ஆகியோர் சிறுமியை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்தனர். அப்போதைய ஓசூர் ஹட்கோ இன்ஸ்பெக்டர் தங்கவேல், எஸ்.ஐ., சாவித்திரி ஆகியோர் விசாரணை நடத்தி, இருவரையும் கைது செய்தனர். அவர்கள் மீது பாலியல் பலாத்காரம் செய்தல், கொலை மிரட்டல், கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நேற்று தீர்ப்பு வழங்கினார். அதன்படி ஆர்.சுரேஷூக்கு ஆயுள் தண்டனையில் பாதி, 5,000 ரூபாய் அபராதம், கட்டத் தவறினால் மூன்று மாத சிறை, கொலை மிரட்டல் பிரிவிற்கு மூன்று ஆண்டு சிறை, 1,000 ரூபாய் அபராதம் விதித்தார். எஸ்.சுரேஷூக்கு ஆயுள் தண்டனையில் பாதி, 6,000 ரூபாய் அபராதம், தவறும் பட்சத்தில் மூன்று மாத சிறை தண்டனை விதித்தார். அரசு தரப்பில் வக்கீல் கலையரசி ஆஜரானார்.

‘காது கேளாத, வாய் பேச முடியாத’ பெண்ணிற்கு நடந்த பயங்கரம்.. ‘நாடகமாடிய மாற்றுத்திறனாளி இளைஞரை’.. மடக்கிப் பிடித்த குடும்பத்தினர்..

07.09.2019
அஹமதாபாத்தில் காது கேளாத, வாய் பேச முடியாத பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த மாற்றுத்திறனாளி இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குஜராத் மாநிலம் அஹமதாபாத் அருகே உள்ள அம்ராய்வாடி என்ற பகுதியைச் சேர்ந்த காது கேளாத, வாய் பேச முடியாத 23 வயது பெண் ஒருவர் கடந்த ஞாயிறன்று வீட்டிலிருந்து காணாமல் போயுள்ளார். இரண்டு நாட்களாக அந்தப் பெண்ணை அவருடைய குடும்பத்தினர் தீவிரமாகத் தேடி வந்துள்ளனர். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த மங்கேஷ் பரத்வாஜ் என்னும் மாற்றுத்திறனாளி இளைஞர் தனது 3 சக்கர வாகனத்தில் அந்தப் பெண்ணை அவருடைய வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். அங்கு பெண்ணின் குடும்பத்தினரிடம் அருகிலுள்ள மைதானம் ஒன்றில் அந்தப் பெண் இருந்ததாகவும், தான் அவரைப் பார்த்து அழைத்து வந்ததாகவும் கூறியுள்ளார்.

ஆனால் அந்தப் பெண்ணின் ஆடைகள் கிழிந்தும், கறைபட்டும் இருந்ததைப் பார்த்த அவருடைய குடும்பத்தினருக்கு மங்கேஷின் நடவடிக்கையில் சந்தேகம் வந்துள்ளது. இதைத்தொடர்ந்து மங்கேஷ் கூறிய மைதானத்திற்கு அவரையும் அந்தப் பெண்ணையும் அழைத்துச் சென்ற குடும்பத்தினர் அங்கிருந்த ஒருவரிடம் தங்கள் பெண்ணை காட்டி, இவரை இங்கு பார்த்திருக்கிறீர்களா எனக் கேட்டுள்ளார்கள்.

அதற்கு அவர் 2 நாட்களுக்கு முன்னால் மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் அந்தப் பெண்ணை அங்கு கூட்டி வந்ததாகக் கூற, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் மங்கேஷிடம் தீவிரமாக விசாரித்துள்ளனர். அதில் மங்கேஷ் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் மங்கேஷைக் கைது செய்துள்ளனர்.