FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Saturday, September 14, 2019

காது கேளாத, வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி பெண் பலாத்கார வழக்கு: இரு வாலிபர்களுக்கு சிறை தண்டனை

14.09.2019, கிருஷ்ணகிரி: மாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில், இருவருக்கு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பஸ்தி பகுதியை சேர்ந்த, 13 வயது சிறுமி காது கேளாத, வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி. இவர், 2013 நவ., 2ல் கடைக்கு சென்றார். அப்போது ஓசூர் பாகலூர் ரோட்டை சேர்ந்த ஆர்.சுரேஷ், 26, பாரதியார் நகரை சேர்ந்த எஸ்.சுரேஷ், 23, ஆகியோர் சிறுமியை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்தனர். அப்போதைய ஓசூர் ஹட்கோ இன்ஸ்பெக்டர் தங்கவேல், எஸ்.ஐ., சாவித்திரி ஆகியோர் விசாரணை நடத்தி, இருவரையும் கைது செய்தனர். அவர்கள் மீது பாலியல் பலாத்காரம் செய்தல், கொலை மிரட்டல், கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நேற்று தீர்ப்பு வழங்கினார். அதன்படி ஆர்.சுரேஷூக்கு ஆயுள் தண்டனையில் பாதி, 5,000 ரூபாய் அபராதம், கட்டத் தவறினால் மூன்று மாத சிறை, கொலை மிரட்டல் பிரிவிற்கு மூன்று ஆண்டு சிறை, 1,000 ரூபாய் அபராதம் விதித்தார். எஸ்.சுரேஷூக்கு ஆயுள் தண்டனையில் பாதி, 6,000 ரூபாய் அபராதம், தவறும் பட்சத்தில் மூன்று மாத சிறை தண்டனை விதித்தார். அரசு தரப்பில் வக்கீல் கலையரசி ஆஜரானார்.

No comments:

Post a Comment