FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Saturday, September 14, 2019

காது கேளாத, வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி பெண் பலாத்கார வழக்கு: இரு வாலிபர்களுக்கு சிறை தண்டனை

14.09.2019, கிருஷ்ணகிரி: மாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில், இருவருக்கு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பஸ்தி பகுதியை சேர்ந்த, 13 வயது சிறுமி காது கேளாத, வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி. இவர், 2013 நவ., 2ல் கடைக்கு சென்றார். அப்போது ஓசூர் பாகலூர் ரோட்டை சேர்ந்த ஆர்.சுரேஷ், 26, பாரதியார் நகரை சேர்ந்த எஸ்.சுரேஷ், 23, ஆகியோர் சிறுமியை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்தனர். அப்போதைய ஓசூர் ஹட்கோ இன்ஸ்பெக்டர் தங்கவேல், எஸ்.ஐ., சாவித்திரி ஆகியோர் விசாரணை நடத்தி, இருவரையும் கைது செய்தனர். அவர்கள் மீது பாலியல் பலாத்காரம் செய்தல், கொலை மிரட்டல், கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நேற்று தீர்ப்பு வழங்கினார். அதன்படி ஆர்.சுரேஷூக்கு ஆயுள் தண்டனையில் பாதி, 5,000 ரூபாய் அபராதம், கட்டத் தவறினால் மூன்று மாத சிறை, கொலை மிரட்டல் பிரிவிற்கு மூன்று ஆண்டு சிறை, 1,000 ரூபாய் அபராதம் விதித்தார். எஸ்.சுரேஷூக்கு ஆயுள் தண்டனையில் பாதி, 6,000 ரூபாய் அபராதம், தவறும் பட்சத்தில் மூன்று மாத சிறை தண்டனை விதித்தார். அரசு தரப்பில் வக்கீல் கலையரசி ஆஜரானார்.

No comments:

Post a Comment