FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Tuesday, February 16, 2021

வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளிக்கு வாழ்க்கை

16.02.2021
திருநங்கை ஒருவரால் தத்தெடுத்து வளர்க்கப்பட்ட, மாற்றுத்திறனாளிக்கு, வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தந்து, அவருக்கு திருமணமும் செய்து வைக்க, 'சகோதரன்' அமைப்பு முயற்சி மேற்கொண்டுள்ளது.திருநங்கையரின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், திருநங்கையர் சிலரால், 'சகோதரன்' அமைப்பு இயங்கி வருகிறது. அந்த அமைப்பைச் சேர்ந்தவர், திருங்நங்கை சக்திதேவி, 36. இவர், வாய் பேச முடியாத, காது கேளாத, சரவணன் என்ற இளைஞரை, ஆறு ஆண்டுகளுக்கு முன் தத்தெடுத்து, சொந்த மகனாகக் கருதி வளர்த்து வருகிறார். தற்போது, 26 வயதாகும் சரவணன், கைத்தொழில் சிலவற்றை கற்றுள்ளார். அவருக்கு, உரிய வேலை வாய்ப்பு பெற்று தரவும், திருமணம் செய்து வைக்கவும் சக்திதேவி திட்டமிட்டுஉள்ளார். இதற்காக, கீழ்ப்பாக்கத்தில் இயங்கி வரும், 'சகோதரன்' அமைப்பும் முயற்சி மேற்கொண்டுள்ளது.''சரவணனுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தரவும், அவருக்கு வாழ்க்கை துணை அமைத்து தருவதில் உதவவும் விரும்புவோர், 95000 57212 மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம்,'' என, அந்த அமைப்பை சேர்ந்த திருநங்கை சுதா தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment