FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Tuesday, February 16, 2021

செவித்திறன் குறைந்த மாற்றுத் திறனாளிகளுக்கு வரப்பிரசாதம்

14.02.2021
கடந்த 2018ல் உலக சுகாதார அமைப்பு மதிப்பீட்டின் படி இந்தியாவில் 6.30 கோடி மக்கள் குறிப்பிடத்தக்க செவித்திறன் இழப்புடன் வாழ்கின்றனர்.இந்தியாவின் 139 கோடி மக்கள் தொகையை வைத்து பார்க்கும் போது இது ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கை.செவித்திறன் இழந்த மாற்றுத் திறனாளிகளுக்கும் கல்விக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி இன்னும் உள்ளது.

அவர்களின் குழந்தை பருவம் துவங்கி இளமை பருவம் வரை இந்த இடைவெளி தொடர்வது வருத்தமான ஒன்று.புனேவை சேர்ந்த 'ஸ்டார்ட்- அப்' கம்பெனியான 'ப்ளீடெக் இன்னவேஷன்ஸ்' (Bleetech Innovations) நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இந்த இடைவெளியை குறைக்க முயற்சிக்கிறது.

இது ஒரு இலவச செயலி மற்றும் இணையதளம். இந்திய 'சைகை' மொழியில் நிறைய உள்ளடக்கங்களை வழங்குகிறது.புனேவின் எம்.ஐ.டி.யில் 'ப்ராடக் டிசைன்' படிக்கும் போது ஜான்வி ஜோஷி மற்றும் நுபூர் கிர்லோஸ்கர் ஆகியோரால் இந்த 'ஸ்டார்ட் அப்' கம்பெனியான 'ப்ளீடெக்' துவக்கப்பட்டது. அப்போது அவர்கள் ஒரு 'ஸ்மார்ட் வாட்ச்' வடிவமைக்கும் திட்டத்தில் பணியாற்றினர்.

அது செவித்திறன் குறைபாடு உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு அதிர்வுகளின் மூலம் இசையை கேட்க உதவுவதாக இருந்தது. அந்த நேரத்தில் தான் பல செவித்திறன் குறைபாடு கொண்ட மாற்றுத் திறனாளிகளுடன் தொடர்பில் இருக்க நேரிட்டது.'ஒரு சில விதிவிலக்குகளை தவிர இந்தியாவில் உள்ள செவித்திறன் குறைபாடு கொண்ட மாற்றுத் திறனாளிகளுக்கான அனைத்து பள்ளிகளும் 'oralism' என அழைக்கப்படும் பேச்சு மற்றும் உதடு வாசிப்பு முறையை மட்டுமே பயன்படுத்துகின்றன.

அவை சைகை மொழியில் இல்லாதது ஒரு குறை தான்' என்று அவர் கூறுகிறார்.'ப்ளீ' டிவியில் உள்ள உள்ளடக்கம் செய்தி நிதி கல்வியறிவு நடப்பு விவகாரங்கள் தார்மீக கதைகள் ஆங்கில மொழி அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் சுய உதவி போன்ற தலைப்புகள் கொண்ட வீடியோக்கள் பல உள்ளன.இந்த தளம் 1200 குழந்தைகள் உட்பட 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவி திறன் குறைந்த மாற்றுத் திறனாளிகளை அடைந்துள்ளது. 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளித்துள்ளது.

இந்த கொரோனா சமயத்தில் அவர்களால் பள்ளிக்கு செல்லவும் இயலவில்லை.'டிவி' முதலிய பொழுதுபோக்கு சாதனங்களை பார்த்தாலும் அவர்களுக்கு புரிவதில்லை. இதனால் இவர்களின் இந்த இணையதளம் செயலி 'டிவி' ஆகியவை மிகவும் உபயோகமாக இருக்கிறது. இந்த செயலியை உங்களது மொபைலில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்நிறுவனம் சிறந்த 'ஸ்டார்ட் அப்' முயற்சிக்காக பல விருதுகளை பெற்றுள்ளது குறிப்பிடதக்கது. இணையதளம் - https://www.bleetech.in www.bleetv.in சந்தேகங்களுக்கு: இ-மெயில்: sethuraman.sathappan@gmail.com மொபைல் போன்: 98204-51259 இணையதளம்: www.startupandbusinessnews.com
- சேதுராமன் சாத்தப்பன் -



No comments:

Post a Comment