FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Tuesday, February 16, 2021

செவித்திறன் குறைந்த மாற்றுத் திறனாளிகளுக்கு வரப்பிரசாதம்

14.02.2021
கடந்த 2018ல் உலக சுகாதார அமைப்பு மதிப்பீட்டின் படி இந்தியாவில் 6.30 கோடி மக்கள் குறிப்பிடத்தக்க செவித்திறன் இழப்புடன் வாழ்கின்றனர்.இந்தியாவின் 139 கோடி மக்கள் தொகையை வைத்து பார்க்கும் போது இது ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கை.செவித்திறன் இழந்த மாற்றுத் திறனாளிகளுக்கும் கல்விக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி இன்னும் உள்ளது.

அவர்களின் குழந்தை பருவம் துவங்கி இளமை பருவம் வரை இந்த இடைவெளி தொடர்வது வருத்தமான ஒன்று.புனேவை சேர்ந்த 'ஸ்டார்ட்- அப்' கம்பெனியான 'ப்ளீடெக் இன்னவேஷன்ஸ்' (Bleetech Innovations) நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இந்த இடைவெளியை குறைக்க முயற்சிக்கிறது.

இது ஒரு இலவச செயலி மற்றும் இணையதளம். இந்திய 'சைகை' மொழியில் நிறைய உள்ளடக்கங்களை வழங்குகிறது.புனேவின் எம்.ஐ.டி.யில் 'ப்ராடக் டிசைன்' படிக்கும் போது ஜான்வி ஜோஷி மற்றும் நுபூர் கிர்லோஸ்கர் ஆகியோரால் இந்த 'ஸ்டார்ட் அப்' கம்பெனியான 'ப்ளீடெக்' துவக்கப்பட்டது. அப்போது அவர்கள் ஒரு 'ஸ்மார்ட் வாட்ச்' வடிவமைக்கும் திட்டத்தில் பணியாற்றினர்.

அது செவித்திறன் குறைபாடு உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு அதிர்வுகளின் மூலம் இசையை கேட்க உதவுவதாக இருந்தது. அந்த நேரத்தில் தான் பல செவித்திறன் குறைபாடு கொண்ட மாற்றுத் திறனாளிகளுடன் தொடர்பில் இருக்க நேரிட்டது.'ஒரு சில விதிவிலக்குகளை தவிர இந்தியாவில் உள்ள செவித்திறன் குறைபாடு கொண்ட மாற்றுத் திறனாளிகளுக்கான அனைத்து பள்ளிகளும் 'oralism' என அழைக்கப்படும் பேச்சு மற்றும் உதடு வாசிப்பு முறையை மட்டுமே பயன்படுத்துகின்றன.

அவை சைகை மொழியில் இல்லாதது ஒரு குறை தான்' என்று அவர் கூறுகிறார்.'ப்ளீ' டிவியில் உள்ள உள்ளடக்கம் செய்தி நிதி கல்வியறிவு நடப்பு விவகாரங்கள் தார்மீக கதைகள் ஆங்கில மொழி அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் சுய உதவி போன்ற தலைப்புகள் கொண்ட வீடியோக்கள் பல உள்ளன.இந்த தளம் 1200 குழந்தைகள் உட்பட 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவி திறன் குறைந்த மாற்றுத் திறனாளிகளை அடைந்துள்ளது. 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளித்துள்ளது.

இந்த கொரோனா சமயத்தில் அவர்களால் பள்ளிக்கு செல்லவும் இயலவில்லை.'டிவி' முதலிய பொழுதுபோக்கு சாதனங்களை பார்த்தாலும் அவர்களுக்கு புரிவதில்லை. இதனால் இவர்களின் இந்த இணையதளம் செயலி 'டிவி' ஆகியவை மிகவும் உபயோகமாக இருக்கிறது. இந்த செயலியை உங்களது மொபைலில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்நிறுவனம் சிறந்த 'ஸ்டார்ட் அப்' முயற்சிக்காக பல விருதுகளை பெற்றுள்ளது குறிப்பிடதக்கது. இணையதளம் - https://www.bleetech.in www.bleetv.in சந்தேகங்களுக்கு: இ-மெயில்: sethuraman.sathappan@gmail.com மொபைல் போன்: 98204-51259 இணையதளம்: www.startupandbusinessnews.com
- சேதுராமன் சாத்தப்பன் -



No comments:

Post a Comment