FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Tuesday, February 16, 2021

செவித்திறன் குறைந்த மாற்றுத் திறனாளிகளுக்கு வரப்பிரசாதம்

14.02.2021
கடந்த 2018ல் உலக சுகாதார அமைப்பு மதிப்பீட்டின் படி இந்தியாவில் 6.30 கோடி மக்கள் குறிப்பிடத்தக்க செவித்திறன் இழப்புடன் வாழ்கின்றனர்.இந்தியாவின் 139 கோடி மக்கள் தொகையை வைத்து பார்க்கும் போது இது ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கை.செவித்திறன் இழந்த மாற்றுத் திறனாளிகளுக்கும் கல்விக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி இன்னும் உள்ளது.

அவர்களின் குழந்தை பருவம் துவங்கி இளமை பருவம் வரை இந்த இடைவெளி தொடர்வது வருத்தமான ஒன்று.புனேவை சேர்ந்த 'ஸ்டார்ட்- அப்' கம்பெனியான 'ப்ளீடெக் இன்னவேஷன்ஸ்' (Bleetech Innovations) நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இந்த இடைவெளியை குறைக்க முயற்சிக்கிறது.

இது ஒரு இலவச செயலி மற்றும் இணையதளம். இந்திய 'சைகை' மொழியில் நிறைய உள்ளடக்கங்களை வழங்குகிறது.புனேவின் எம்.ஐ.டி.யில் 'ப்ராடக் டிசைன்' படிக்கும் போது ஜான்வி ஜோஷி மற்றும் நுபூர் கிர்லோஸ்கர் ஆகியோரால் இந்த 'ஸ்டார்ட் அப்' கம்பெனியான 'ப்ளீடெக்' துவக்கப்பட்டது. அப்போது அவர்கள் ஒரு 'ஸ்மார்ட் வாட்ச்' வடிவமைக்கும் திட்டத்தில் பணியாற்றினர்.

அது செவித்திறன் குறைபாடு உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு அதிர்வுகளின் மூலம் இசையை கேட்க உதவுவதாக இருந்தது. அந்த நேரத்தில் தான் பல செவித்திறன் குறைபாடு கொண்ட மாற்றுத் திறனாளிகளுடன் தொடர்பில் இருக்க நேரிட்டது.'ஒரு சில விதிவிலக்குகளை தவிர இந்தியாவில் உள்ள செவித்திறன் குறைபாடு கொண்ட மாற்றுத் திறனாளிகளுக்கான அனைத்து பள்ளிகளும் 'oralism' என அழைக்கப்படும் பேச்சு மற்றும் உதடு வாசிப்பு முறையை மட்டுமே பயன்படுத்துகின்றன.

அவை சைகை மொழியில் இல்லாதது ஒரு குறை தான்' என்று அவர் கூறுகிறார்.'ப்ளீ' டிவியில் உள்ள உள்ளடக்கம் செய்தி நிதி கல்வியறிவு நடப்பு விவகாரங்கள் தார்மீக கதைகள் ஆங்கில மொழி அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் சுய உதவி போன்ற தலைப்புகள் கொண்ட வீடியோக்கள் பல உள்ளன.இந்த தளம் 1200 குழந்தைகள் உட்பட 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவி திறன் குறைந்த மாற்றுத் திறனாளிகளை அடைந்துள்ளது. 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளித்துள்ளது.

இந்த கொரோனா சமயத்தில் அவர்களால் பள்ளிக்கு செல்லவும் இயலவில்லை.'டிவி' முதலிய பொழுதுபோக்கு சாதனங்களை பார்த்தாலும் அவர்களுக்கு புரிவதில்லை. இதனால் இவர்களின் இந்த இணையதளம் செயலி 'டிவி' ஆகியவை மிகவும் உபயோகமாக இருக்கிறது. இந்த செயலியை உங்களது மொபைலில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்நிறுவனம் சிறந்த 'ஸ்டார்ட் அப்' முயற்சிக்காக பல விருதுகளை பெற்றுள்ளது குறிப்பிடதக்கது. இணையதளம் - https://www.bleetech.in www.bleetv.in சந்தேகங்களுக்கு: இ-மெயில்: sethuraman.sathappan@gmail.com மொபைல் போன்: 98204-51259 இணையதளம்: www.startupandbusinessnews.com
- சேதுராமன் சாத்தப்பன் -



No comments:

Post a Comment