FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Tuesday, February 16, 2021

மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் போன்

16.02.2021
விழுப்புரம் - செவித்திறன் மற்றும் பார்வைதிறன் பாதித்த மாற்றுதிறனாளிகளுக்கு தக்க செயலிகளுடன் கூடிய ஸ்மார்ட் போன் வழங்குவதற்கான நேர்முகத் தேர்வு விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். இதில், பார்வையற்றவர்கள் 232 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது. அவர்களில் 196 பேர் கலந்து கொண்டனர். அதேபோன்று செவித்திறன் பாதித்தவர்கள் 225 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பியதில், 180 பேர் பங்கேற்றனர்.தேர்வுக்குழு உறுப்பினர்களான கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் மாற்றுதிறனாளிகள் நல அலுவலர் குமார், அரசு கல்லுாரி கவுரவ விரிவுரையாளர் சங்கர், வேலா சிறப்பு பள்ளி சிறப்பாசிரியர் பார்த்தசாரதி மற்றும் அலுவலர்கள் இருவர் உள்ளிட்டோர் தேர்வு செய்தனர்.இக்குழு மூலம் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு, விரைவில் தக்க செயலிகளோடு கூடிய ஸ்மார்ட் போன் வழங்கப்பட உள்ளது.


No comments:

Post a Comment