FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Saturday, April 9, 2022

மாற்றுத்திறனாளிகளுக்கு 20ல் விளையாட்டு போட்டி


06.04.2022 காஞ்சிபுரம் : மாற்றுத்திறனாளிகளுக்கு, தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள், வரும் 20 ம் தேதி நடைபெற உள்ளதாக கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:மாற்றுத்திறனாளிகளுக்கு, மாவட்ட அளவிலான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் அறிவிக்கப்பட்டுஉள்ளன.

இதில், ஆண், பெண் என இருபாலரும் பங்கேற்கலாம். காஞ்சிபுரம் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் வரும் 20ம் தேதி காலை 9:00 மணி முதல் நடைபெற உள்ளது.தடகள போட்டியில், கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், பார்வையற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டோர், காது கேளாதோர் ஆகியோர் பங்கேற்பர்.குழு போட்டிகளாக, இறகு பந்து, மேசைப்பந்து, வாலிபால், எறிபந்து, கபடி போன்ற விளையாட்டுகளில் பங்கேற்கலாம்.

மாவட்ட அளவில் வெற்றி பெறும் நபர்கள், மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கலாம். மேலும், விவரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு அலுவலரை நேரிலோ அல்லது 74017 03481 என்ற எண்ணிலோ தொடர்புகொள்ளலாம்.இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.




No comments:

Post a Comment