FLASH NEWS: உங்கள் சுதந்திரம் உங்களுக்கே திருப்பி தரப்படும்... புதிய கட்சியை தொடங்கி எலான் மஸ்க் அறிவிப்பு ***** ஈரானில் சர்வதேச விமானங்கள் மீண்டும் இயக்கம் ***** அமெரிக்காவில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு ***** ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில்... இந்தியா-டிரினிடாட் அண்டு டுபாகோ இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ***** உக்ரைன் மீது ஒரே நாளில் 550 டிரோன்களை ஏவிய ரஷியா ***** இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500 சதவீதம் வரி.. அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் ***** ஜப்பானில் 2 வாரங்களில் 900 முறை நிலநடுக்கம் ***** அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம் ***** காஷ்மீரில் அமர்நாத் பக்தர்கள் சென்ற 5 பஸ்கள் அடுத்தடுத்து மோதல்; 36 பேர் காயம் ***** தொழிலாளர்களின் பணி நேரம் 10 மணி நேரமாக அதிகரிப்பு -தெலுங்கானா அரசு உத்தரவு ***** கேரளாவில் 2 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள்; 3 மாவட்டங்களில் உஷார் நிலை *****

Saturday, April 9, 2022

மாற்றுத்திறனாளிகளுக்கு 20ல் விளையாட்டு போட்டி


06.04.2022 காஞ்சிபுரம் : மாற்றுத்திறனாளிகளுக்கு, தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள், வரும் 20 ம் தேதி நடைபெற உள்ளதாக கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:மாற்றுத்திறனாளிகளுக்கு, மாவட்ட அளவிலான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் அறிவிக்கப்பட்டுஉள்ளன.

இதில், ஆண், பெண் என இருபாலரும் பங்கேற்கலாம். காஞ்சிபுரம் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் வரும் 20ம் தேதி காலை 9:00 மணி முதல் நடைபெற உள்ளது.தடகள போட்டியில், கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், பார்வையற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டோர், காது கேளாதோர் ஆகியோர் பங்கேற்பர்.குழு போட்டிகளாக, இறகு பந்து, மேசைப்பந்து, வாலிபால், எறிபந்து, கபடி போன்ற விளையாட்டுகளில் பங்கேற்கலாம்.

மாவட்ட அளவில் வெற்றி பெறும் நபர்கள், மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கலாம். மேலும், விவரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு அலுவலரை நேரிலோ அல்லது 74017 03481 என்ற எண்ணிலோ தொடர்புகொள்ளலாம்.இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.




No comments:

Post a Comment