FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Saturday, April 9, 2022

மாற்றுத்திறனாளிகளுக்கு 20ல் விளையாட்டு போட்டி


06.04.2022 காஞ்சிபுரம் : மாற்றுத்திறனாளிகளுக்கு, தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள், வரும் 20 ம் தேதி நடைபெற உள்ளதாக கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:மாற்றுத்திறனாளிகளுக்கு, மாவட்ட அளவிலான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் அறிவிக்கப்பட்டுஉள்ளன.

இதில், ஆண், பெண் என இருபாலரும் பங்கேற்கலாம். காஞ்சிபுரம் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் வரும் 20ம் தேதி காலை 9:00 மணி முதல் நடைபெற உள்ளது.தடகள போட்டியில், கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், பார்வையற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டோர், காது கேளாதோர் ஆகியோர் பங்கேற்பர்.குழு போட்டிகளாக, இறகு பந்து, மேசைப்பந்து, வாலிபால், எறிபந்து, கபடி போன்ற விளையாட்டுகளில் பங்கேற்கலாம்.

மாவட்ட அளவில் வெற்றி பெறும் நபர்கள், மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கலாம். மேலும், விவரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு அலுவலரை நேரிலோ அல்லது 74017 03481 என்ற எண்ணிலோ தொடர்புகொள்ளலாம்.இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.




No comments:

Post a Comment