FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Saturday, April 9, 2022

காது கேளாதோருக்கான மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்

05.04.2022 மயிலாடுதுறை:
மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட காது கேளாதோர் நலச்சங்க தொடக்க நிகழ்ச்சி மற்றும் முதல் கூட்டம் நடந்தது. விழாவிற்கு தமிழ்நாடு காது கேளாதோர் சங்க கூட்டமைப்பின் தலைவர் ரமேஷ்பாபு தலைமை தாங்கினார். தமிழ்நாடு காது கேளாத மகளிர் சங்க தலைவி காயத்ரி, பொதுச்செயலாளர் செல்வகுமாரி, பொதுக்குழு உறுப்பினர் ஷோபனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நகராட்சி ஆணையர் பாலு மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் காது கேளாதோருக்கான மாதாந்திர உதவித் தொகையை ரூ.ஆயிரத்திலிருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் ஒரு சதவீதம் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். காது கேளாத இளம் பெண்களுக்கு திருமண உதவித்தொகையை ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். காது கேளாத மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகளுக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் பிரகாஷ், பாலாஜி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment