FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Tuesday, April 12, 2022

குஜராத்: பலமுறை கூட்டு பாலியல் வன்கொடுமை - காது கேளாத, வாய்பேச முடியாத பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்



09.04.2022  குஜராத் மாநிலத்தில் மாற்றுத் திறனாளி பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தானிலிருந்து புலம்பெயர்ந்த மாற்றுத்திறனாளிப் பெண், குஜராத் மாநிலம் மெஹ்சானாவில், தன் 5 வயது மகன், கணவனுடன் வசித்து வந்தார். காது கேளாத, வாய் பேச முடியாத அந்த பெண்ணை அந்த பகுதியில் வசித்து வந்த 4 பேரால் பலமுறை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். ஆனால் அதைப் பல முறை கணவனிடம் கூற முயன்றும் முடியாமல் தவித்து வந்துள்ளார்.

ஒருகட்டத்தில் தாயின் நிலையை அறிந்துகொண்ட 5 வயது சிறுவன் தன் தாயிக்கு நடக்கும் கொடுமையை தன் தந்தையிடம் கூறியுள்ளார். இதை அறிந்த அந்த 4 பேரும், ``உடனே ஊரை காலி செய்து மீண்டும் ராஜஸ்தான் சென்று விட வேண்டும். இல்லையென்றால் குடும்பத்துடன் கொலை செய்து விடுவோம்" என அந்த குடும்பத்தை மிரட்டியுள்ளனர்.

இந்த நிலையில், உயிருக்குப் பயந்து அங்கிருந்து அந்த குடும்பம் மீண்டும் ராஜஸ்தான் வந்துவிட்டனர். அதன் பின்பு நடந்த சம்பவத்தை ஜீரோ எஃப் ஐ ஆர் விதியின்கீழ் அவரின் கணவர் ராஜஸ்தான் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்தப் புகாரின் அடிப்படையில் விசாரித்த காவல்துறை, ``செவித்திறன் மற்றும் பேச்சுத் திறன் குறைபாடு உள்ள பெண் நான்கு பேரால் பலமுறை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக அந்த நான்கு பேரையும் கைது செய்துள்ளோம்" எனத் தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment