![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgLyiE_UIpEVwIRo47UwDKLnrPcHrpi5H76QNxGfvtYo65KX6EojUp0sw5GO19Yrzq3CMvuW667LwfdY8SagwTskFuYkXq12lo_9LSUuPdDXxAUOOrbBgLmkDCXgA5A1C3oiU2xpOOarDOVNC2w5bp5Yy3oZHkVA4JzfovuRXUQ3Kb1miHLWrnXImSRLw/w640-h320/Tamil_News_4_5_2022_91274661.jpg)
05.04.2022 மாமல்லபுரம்: காஞ்சிபுரம் அடுத்த சதாவரம் பகுதியில் தமிழ்நாடு அரசு காது கேளாதோர் உயர்நிலைப்பள்ளி இயங்குகிறது. இங்கு, 1 முதல் 10ம் வகுப்பு வரை காது கேளாதோர், வாய் பேச முடியாத மாணவ, மாணவிகள் 40க்கும் மேற்பட்டோர் படிக்கின்றனர். நேற்று காலை மாற்றுத்திறனாளி மாணவர்கள், சுற்றுலா நகரமான மாமல்லபுரம் வந்தனர். அங்கு, புராதன சின்னங்களான வெண்ணெய் உருண்டை பாறை, அர்ச்சுணன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோயில் ஆகியவற்றை சுற்றிப் பார்த்து மகிழ்ந்தனர்.
மாமல்லபுரம் பஸ் நிலையம் அருகே தலசயன பெருமாள் கோயிலில், அரசின் அன்னதான திட்டம் மூலம் 50க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு தினமும் மதிய உணவு அளிக்கப்படுகிறது. இதையொட்டி, கோயில் நிர்வாகம் சார்பில், காது கேளாத, வாய் பேச முடியாத மாணவர்கள் வருகையொட்டி கூடுதலாக 50 பேருக்கு மதிய உணவு ஏற்பாடு செய்து, உணவு வழங்கப்பட்டது. இதற்கு, மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் பள்ளி ஆசிரியை மதிய உணவு வழங்கிய கோயில் நிர்வாகத்துக்கு நன்றி தெரிவித்தனர்.
மாமல்லபுரம் பஸ் நிலையம் அருகே தலசயன பெருமாள் கோயிலில், அரசின் அன்னதான திட்டம் மூலம் 50க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு தினமும் மதிய உணவு அளிக்கப்படுகிறது. இதையொட்டி, கோயில் நிர்வாகம் சார்பில், காது கேளாத, வாய் பேச முடியாத மாணவர்கள் வருகையொட்டி கூடுதலாக 50 பேருக்கு மதிய உணவு ஏற்பாடு செய்து, உணவு வழங்கப்பட்டது. இதற்கு, மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் பள்ளி ஆசிரியை மதிய உணவு வழங்கிய கோயில் நிர்வாகத்துக்கு நன்றி தெரிவித்தனர்.
No comments:
Post a Comment