FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Tuesday, April 19, 2022

மதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் வருகிற 20ந் தேதி நடக்கிறது

16.04.2022 மதுரை
மதுரை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் அலுவலர் லெனின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மதுரை பிரிவு சார்பில் மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் மதுரை ரேஸ் கோர்ஸ் மைதான வளாகத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். விளையாட்டரங்கில் வருகிற 20ந்தேதி நடைபெற உள்ளன.

போட்டியில் பங்கேற்போர் மாற்றுத்திறனாளி களுக்கான தேசிய அடை யாள அட்டையை கண்டிப்பாக கொண்டு வேண்டும். போட்டியில் பங்கேற்க வயது வரம்பு கிடையாது. எந்த பிரிவானாலும் ஒருவர் ஒரு விளையாட்டில் மட்டுமே பங்கேற்க வேண்டும். சக்கர நாற்காலி போட்டியில் பங்கேற்பவர்கள் சக்கர நாற்காலியுடன் வரவேண்டும்.

மாவட்ட அளவிலான தடகளம் மற்றும் குழு போட்டிகளில் முதல் இடத்தை பெறுபவர்கள் மட்டும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க வேண்டும்.- போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும்.

குழு விளையாட்டுப் போட்டிகளில் கை, கால் பாதிக்கப்பட்டோருக்கு (ஆண்கள், பெண்கள்) இறகுப்பந்து போட்டிகள் (ஒற்றையர் மற்றும் இரட்டையர் தலா 5 வீரர்கள்), மேஜைப்பந்து போட்டிகள் (தலா இருவர்), பார்வையற்றோர் (ஆண்கள், பெண்கள்) வாலிபால் போட்டிகள் (தலா 7 வீரர்கள்), மனநலம் பாதிக்கப்பட்டோர் (ஆண்கள், பெண்கள்) எறிபந்து போட்டிகள் (தலா 7வீரர்கள்), காது கேளாதோர் (ஆண்கள், பெண்கள்) கபடி போட்டிகள் (தலா 7 வீரர்கள்) பங்கேற்கலாம்.


 


No comments:

Post a Comment