FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Tuesday, April 19, 2022

மதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் வருகிற 20ந் தேதி நடக்கிறது

16.04.2022 மதுரை
மதுரை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் அலுவலர் லெனின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மதுரை பிரிவு சார்பில் மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் மதுரை ரேஸ் கோர்ஸ் மைதான வளாகத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். விளையாட்டரங்கில் வருகிற 20ந்தேதி நடைபெற உள்ளன.

போட்டியில் பங்கேற்போர் மாற்றுத்திறனாளி களுக்கான தேசிய அடை யாள அட்டையை கண்டிப்பாக கொண்டு வேண்டும். போட்டியில் பங்கேற்க வயது வரம்பு கிடையாது. எந்த பிரிவானாலும் ஒருவர் ஒரு விளையாட்டில் மட்டுமே பங்கேற்க வேண்டும். சக்கர நாற்காலி போட்டியில் பங்கேற்பவர்கள் சக்கர நாற்காலியுடன் வரவேண்டும்.

மாவட்ட அளவிலான தடகளம் மற்றும் குழு போட்டிகளில் முதல் இடத்தை பெறுபவர்கள் மட்டும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க வேண்டும்.- போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும்.

குழு விளையாட்டுப் போட்டிகளில் கை, கால் பாதிக்கப்பட்டோருக்கு (ஆண்கள், பெண்கள்) இறகுப்பந்து போட்டிகள் (ஒற்றையர் மற்றும் இரட்டையர் தலா 5 வீரர்கள்), மேஜைப்பந்து போட்டிகள் (தலா இருவர்), பார்வையற்றோர் (ஆண்கள், பெண்கள்) வாலிபால் போட்டிகள் (தலா 7 வீரர்கள்), மனநலம் பாதிக்கப்பட்டோர் (ஆண்கள், பெண்கள்) எறிபந்து போட்டிகள் (தலா 7வீரர்கள்), காது கேளாதோர் (ஆண்கள், பெண்கள்) கபடி போட்டிகள் (தலா 7 வீரர்கள்) பங்கேற்கலாம்.


 


No comments:

Post a Comment