FLASH NEWS: உங்கள் சுதந்திரம் உங்களுக்கே திருப்பி தரப்படும்... புதிய கட்சியை தொடங்கி எலான் மஸ்க் அறிவிப்பு ***** ஈரானில் சர்வதேச விமானங்கள் மீண்டும் இயக்கம் ***** அமெரிக்காவில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு ***** ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில்... இந்தியா-டிரினிடாட் அண்டு டுபாகோ இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ***** உக்ரைன் மீது ஒரே நாளில் 550 டிரோன்களை ஏவிய ரஷியா ***** இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500 சதவீதம் வரி.. அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் ***** ஜப்பானில் 2 வாரங்களில் 900 முறை நிலநடுக்கம் ***** அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம் ***** காஷ்மீரில் அமர்நாத் பக்தர்கள் சென்ற 5 பஸ்கள் அடுத்தடுத்து மோதல்; 36 பேர் காயம் ***** தொழிலாளர்களின் பணி நேரம் 10 மணி நேரமாக அதிகரிப்பு -தெலுங்கானா அரசு உத்தரவு ***** கேரளாவில் 2 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள்; 3 மாவட்டங்களில் உஷார் நிலை *****

Tuesday, April 19, 2022

மதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் வருகிற 20ந் தேதி நடக்கிறது

16.04.2022 மதுரை
மதுரை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் அலுவலர் லெனின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மதுரை பிரிவு சார்பில் மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் மதுரை ரேஸ் கோர்ஸ் மைதான வளாகத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். விளையாட்டரங்கில் வருகிற 20ந்தேதி நடைபெற உள்ளன.

போட்டியில் பங்கேற்போர் மாற்றுத்திறனாளி களுக்கான தேசிய அடை யாள அட்டையை கண்டிப்பாக கொண்டு வேண்டும். போட்டியில் பங்கேற்க வயது வரம்பு கிடையாது. எந்த பிரிவானாலும் ஒருவர் ஒரு விளையாட்டில் மட்டுமே பங்கேற்க வேண்டும். சக்கர நாற்காலி போட்டியில் பங்கேற்பவர்கள் சக்கர நாற்காலியுடன் வரவேண்டும்.

மாவட்ட அளவிலான தடகளம் மற்றும் குழு போட்டிகளில் முதல் இடத்தை பெறுபவர்கள் மட்டும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க வேண்டும்.- போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும்.

குழு விளையாட்டுப் போட்டிகளில் கை, கால் பாதிக்கப்பட்டோருக்கு (ஆண்கள், பெண்கள்) இறகுப்பந்து போட்டிகள் (ஒற்றையர் மற்றும் இரட்டையர் தலா 5 வீரர்கள்), மேஜைப்பந்து போட்டிகள் (தலா இருவர்), பார்வையற்றோர் (ஆண்கள், பெண்கள்) வாலிபால் போட்டிகள் (தலா 7 வீரர்கள்), மனநலம் பாதிக்கப்பட்டோர் (ஆண்கள், பெண்கள்) எறிபந்து போட்டிகள் (தலா 7வீரர்கள்), காது கேளாதோர் (ஆண்கள், பெண்கள்) கபடி போட்டிகள் (தலா 7 வீரர்கள்) பங்கேற்கலாம்.


 


No comments:

Post a Comment