FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Saturday, April 9, 2022

Hearing Aid மூலம் முதன் முறையாக குரலைக் கேட்டு குதூகலிக்கும் குழந்தை...


பிறக்கும் போதே காது கேளாத குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தையின் நிலை மிகவும் பரிதாபமானது. பிறந்த குழந்தைக்கு காது கேட்கவில்லை என்றால், நாளடைவில் வாய் பேச முடியாமல் போய்விடும். இந்நிலையில் பிறந்ததில் இருந்தே காது கேளாமல் இருந்த குழந்தை ஹியரிங் எய்ட் மூலமாக முதன் முறையாக ஒலியை கேட்டு மகிழும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

"ஜாக் முதல் முறையாக கேட்கிறார்" என்ற கேப்ஷன் உடன் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் போன் ‘ஆங்கர்டு ஹியரிங் எய்ட்’ ( BAHA) எனப்படும் செவிப்புலன் உதவி கருவியுடன் ஜாக் என்ற குழந்தை முதன் முறையாக இந்த உலகின் உன்னத ஒலிகளை கேட்டுள்ளது.

வீடியோவில், பெண்மணி ஒருவர் குழந்தை ஜாக்கை தனது கையில் வைத்துள்ளார், குழந்தையின் காதுக்குள் BAHA சாதனம் இணைக்கப்பட்டுள்ளது. அந்த நபர் பேசும்போது, ​​​​ஜாக் தனது தலையை அசைப்பதன் மூலம் குரல்களுக்கு பதிலளிப்பது பதிவாகியுள்ளது. ஜாக்கிற்கு ஒரு காது கேளாமை பிரச்சனை உள்ளது. பொருளாதார ரீதியாக வசதியில்லாத குடும்பத்தைச் சேர்ந்த இந்த குழந்தைக்கு செவித்திறன் மட்டுமல்ல கண்பார்வை குறைபாடும் உள்ளது.

இப்போது இந்த வீடியோவை பார்ப்பது பலருக்கும் மகிழ்ச்சியாக இருந்தாலும், குழந்தை ஆரம்பத்தில் அடைந்த கஷ்டங்கள் அளவிட முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனென்றால் குழந்தை செவித்திறன் மற்றும் பார்வை குறைப்பாடு கொண்டிருப்பதால் வளர்ச்சியில் மந்தமான நிலையில் இருந்துள்ளது.

‘ஆங்கர்டு ஹியரிங் எய்ட்’ ( BAHA) -யைப் பயன்படுத்துவது குழந்தைக்கு ஒரு தற்காலிக தீர்வு என்றும், காது மடல்களுக்கு மேல் பொருத்தப்படும் செவிப்புலன் கருவிகளை பொருத்துவதே அடுத்த இலக்கு என்றும், வீடியோ பகிரப்பட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குழந்தை ஜாக்கின் உள் மற்றும் நடுத்தர காது பகுதிக்கு இடையில் செவித்திறன் பாதிப்பு உள்ளது. இதனால் அவர் கேட்கக்கூடிய சிறந்த செவிப்புலன் விருப்பத்தை தீர்மானிக்க கடினமாக இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

குரல்களைக் கேட்கும் போது குழந்தை ஜாக்கின் முகத்தில் ஏற்படும் மகிழ்ச்சியை பார்க்கும் போது, பார்வையாளர்கள் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்தும் அளவிற்கு உள்ளது. பிஞ்சு குழந்தை இத்தனை நாட்களாக எத்தனை துன்பங்களை தனக்கே அறியாமல் கடந்து வந்திருக்கும் என்பதை அந்த ஒற்றை புன்னகை நமக்கு உணர்த்துகிறது. சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் இந்த வீடியோவை காணும் பலரும், குழந்தைக்காக மகிழ்ச்சி அடைவதாகவும், தங்களது வாழ்த்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

“கடவுள் உங்களை அழகாக ஆசீர்வதிக்கட்டும்” என பதிவிட்டுள்ளார். மற்றொரு நபர் ‘தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக ஜாக் கேட்க முடிந்தது மகிழ்ச்சி’ என பதிவிட்டுள்ளார். இவ்வாறு பலரும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.


No comments:

Post a Comment