FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Saturday, April 9, 2022

Hearing Aid மூலம் முதன் முறையாக குரலைக் கேட்டு குதூகலிக்கும் குழந்தை...


பிறக்கும் போதே காது கேளாத குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தையின் நிலை மிகவும் பரிதாபமானது. பிறந்த குழந்தைக்கு காது கேட்கவில்லை என்றால், நாளடைவில் வாய் பேச முடியாமல் போய்விடும். இந்நிலையில் பிறந்ததில் இருந்தே காது கேளாமல் இருந்த குழந்தை ஹியரிங் எய்ட் மூலமாக முதன் முறையாக ஒலியை கேட்டு மகிழும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

"ஜாக் முதல் முறையாக கேட்கிறார்" என்ற கேப்ஷன் உடன் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் போன் ‘ஆங்கர்டு ஹியரிங் எய்ட்’ ( BAHA) எனப்படும் செவிப்புலன் உதவி கருவியுடன் ஜாக் என்ற குழந்தை முதன் முறையாக இந்த உலகின் உன்னத ஒலிகளை கேட்டுள்ளது.

வீடியோவில், பெண்மணி ஒருவர் குழந்தை ஜாக்கை தனது கையில் வைத்துள்ளார், குழந்தையின் காதுக்குள் BAHA சாதனம் இணைக்கப்பட்டுள்ளது. அந்த நபர் பேசும்போது, ​​​​ஜாக் தனது தலையை அசைப்பதன் மூலம் குரல்களுக்கு பதிலளிப்பது பதிவாகியுள்ளது. ஜாக்கிற்கு ஒரு காது கேளாமை பிரச்சனை உள்ளது. பொருளாதார ரீதியாக வசதியில்லாத குடும்பத்தைச் சேர்ந்த இந்த குழந்தைக்கு செவித்திறன் மட்டுமல்ல கண்பார்வை குறைபாடும் உள்ளது.

இப்போது இந்த வீடியோவை பார்ப்பது பலருக்கும் மகிழ்ச்சியாக இருந்தாலும், குழந்தை ஆரம்பத்தில் அடைந்த கஷ்டங்கள் அளவிட முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனென்றால் குழந்தை செவித்திறன் மற்றும் பார்வை குறைப்பாடு கொண்டிருப்பதால் வளர்ச்சியில் மந்தமான நிலையில் இருந்துள்ளது.

‘ஆங்கர்டு ஹியரிங் எய்ட்’ ( BAHA) -யைப் பயன்படுத்துவது குழந்தைக்கு ஒரு தற்காலிக தீர்வு என்றும், காது மடல்களுக்கு மேல் பொருத்தப்படும் செவிப்புலன் கருவிகளை பொருத்துவதே அடுத்த இலக்கு என்றும், வீடியோ பகிரப்பட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குழந்தை ஜாக்கின் உள் மற்றும் நடுத்தர காது பகுதிக்கு இடையில் செவித்திறன் பாதிப்பு உள்ளது. இதனால் அவர் கேட்கக்கூடிய சிறந்த செவிப்புலன் விருப்பத்தை தீர்மானிக்க கடினமாக இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

குரல்களைக் கேட்கும் போது குழந்தை ஜாக்கின் முகத்தில் ஏற்படும் மகிழ்ச்சியை பார்க்கும் போது, பார்வையாளர்கள் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்தும் அளவிற்கு உள்ளது. பிஞ்சு குழந்தை இத்தனை நாட்களாக எத்தனை துன்பங்களை தனக்கே அறியாமல் கடந்து வந்திருக்கும் என்பதை அந்த ஒற்றை புன்னகை நமக்கு உணர்த்துகிறது. சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் இந்த வீடியோவை காணும் பலரும், குழந்தைக்காக மகிழ்ச்சி அடைவதாகவும், தங்களது வாழ்த்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

“கடவுள் உங்களை அழகாக ஆசீர்வதிக்கட்டும்” என பதிவிட்டுள்ளார். மற்றொரு நபர் ‘தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக ஜாக் கேட்க முடிந்தது மகிழ்ச்சி’ என பதிவிட்டுள்ளார். இவ்வாறு பலரும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.


No comments:

Post a Comment