FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Saturday, April 9, 2022

Hearing Aid மூலம் முதன் முறையாக குரலைக் கேட்டு குதூகலிக்கும் குழந்தை...


பிறக்கும் போதே காது கேளாத குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தையின் நிலை மிகவும் பரிதாபமானது. பிறந்த குழந்தைக்கு காது கேட்கவில்லை என்றால், நாளடைவில் வாய் பேச முடியாமல் போய்விடும். இந்நிலையில் பிறந்ததில் இருந்தே காது கேளாமல் இருந்த குழந்தை ஹியரிங் எய்ட் மூலமாக முதன் முறையாக ஒலியை கேட்டு மகிழும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

"ஜாக் முதல் முறையாக கேட்கிறார்" என்ற கேப்ஷன் உடன் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் போன் ‘ஆங்கர்டு ஹியரிங் எய்ட்’ ( BAHA) எனப்படும் செவிப்புலன் உதவி கருவியுடன் ஜாக் என்ற குழந்தை முதன் முறையாக இந்த உலகின் உன்னத ஒலிகளை கேட்டுள்ளது.

வீடியோவில், பெண்மணி ஒருவர் குழந்தை ஜாக்கை தனது கையில் வைத்துள்ளார், குழந்தையின் காதுக்குள் BAHA சாதனம் இணைக்கப்பட்டுள்ளது. அந்த நபர் பேசும்போது, ​​​​ஜாக் தனது தலையை அசைப்பதன் மூலம் குரல்களுக்கு பதிலளிப்பது பதிவாகியுள்ளது. ஜாக்கிற்கு ஒரு காது கேளாமை பிரச்சனை உள்ளது. பொருளாதார ரீதியாக வசதியில்லாத குடும்பத்தைச் சேர்ந்த இந்த குழந்தைக்கு செவித்திறன் மட்டுமல்ல கண்பார்வை குறைபாடும் உள்ளது.

இப்போது இந்த வீடியோவை பார்ப்பது பலருக்கும் மகிழ்ச்சியாக இருந்தாலும், குழந்தை ஆரம்பத்தில் அடைந்த கஷ்டங்கள் அளவிட முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனென்றால் குழந்தை செவித்திறன் மற்றும் பார்வை குறைப்பாடு கொண்டிருப்பதால் வளர்ச்சியில் மந்தமான நிலையில் இருந்துள்ளது.

‘ஆங்கர்டு ஹியரிங் எய்ட்’ ( BAHA) -யைப் பயன்படுத்துவது குழந்தைக்கு ஒரு தற்காலிக தீர்வு என்றும், காது மடல்களுக்கு மேல் பொருத்தப்படும் செவிப்புலன் கருவிகளை பொருத்துவதே அடுத்த இலக்கு என்றும், வீடியோ பகிரப்பட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குழந்தை ஜாக்கின் உள் மற்றும் நடுத்தர காது பகுதிக்கு இடையில் செவித்திறன் பாதிப்பு உள்ளது. இதனால் அவர் கேட்கக்கூடிய சிறந்த செவிப்புலன் விருப்பத்தை தீர்மானிக்க கடினமாக இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

குரல்களைக் கேட்கும் போது குழந்தை ஜாக்கின் முகத்தில் ஏற்படும் மகிழ்ச்சியை பார்க்கும் போது, பார்வையாளர்கள் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்தும் அளவிற்கு உள்ளது. பிஞ்சு குழந்தை இத்தனை நாட்களாக எத்தனை துன்பங்களை தனக்கே அறியாமல் கடந்து வந்திருக்கும் என்பதை அந்த ஒற்றை புன்னகை நமக்கு உணர்த்துகிறது. சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் இந்த வீடியோவை காணும் பலரும், குழந்தைக்காக மகிழ்ச்சி அடைவதாகவும், தங்களது வாழ்த்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

“கடவுள் உங்களை அழகாக ஆசீர்வதிக்கட்டும்” என பதிவிட்டுள்ளார். மற்றொரு நபர் ‘தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக ஜாக் கேட்க முடிந்தது மகிழ்ச்சி’ என பதிவிட்டுள்ளார். இவ்வாறு பலரும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.


No comments:

Post a Comment