FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Saturday, August 12, 2023

நீண்ட நாட்களாக கிடைக்காத செவித்திறன் சான்றிதழ் கிடைத்ததால் மகிழ்ச்சியில் திளைத்த மாணவர்கள்!



ஆடியோகிராம் டெஸ்ட் சான்றிதழ் தஞ்சாவூர் செவித்திறன் குறைபாடு உள்ளவருக்காக இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு நீண்ட காலமாகக் கிடைக்காமல் இருந்த நிலையில் தற்போது மருத்துவ முகாம் மூலம் கிடைத்துள்ளது. இதன் மூலம் பேருந்து மற்றும் ரயிலில் இலவசமாகச் செல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தஞ்சாவூர்: தமிழ்நாடு முழுவதும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா அரசு சார்பிலும், திமுக கட்சியின் பல்வேறு அணிகள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், தஞ்சாவூர் மேம்பாலம் பகுதியில் செவித்திறன் குறைபாடு உள்ளவருக்காக இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் பயிலக்கூடிய செவித்திறன் குறைபாடு உள்ள பள்ளி மாணவர்களுக்குத் தஞ்சாவூர் மத்திய மாவட்ட திமுக மருத்துவ அணி சார்பில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்த மருத்துவ முகாமில் மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளரும், துணை மேயருமான டாக்டர் அஞ்சுகம் பூபதி தலைமையில் மருத்துவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்குப் பல்வேறு மருத்துவப் பரிசோதனை செய்து, அவர்களுக்கு மருந்து, மாத்திரைகளை வழங்கினர்.

அப்போது, பள்ளி மாணவர்கள் தங்களது உடல் நலக்குறைபாட்டை மருத்துவர்களிடம் சைகை மொழியில் தெரிவித்தனர். இதனைப் பள்ளி ஆசிரியர்கள் புரிந்து கொண்டு மருத்துவர்களுக்கு விளக்கம் அளித்தனர். அதன் அடிப்படையில் மருத்துவர்கள் பரிசோதனை செய்து மருந்துகளை வழங்கினர்.

மேலும் பள்ளியில் பயிலும் 130 மாணவ, மாணவியர்களுக்கு அரசு மருத்துவர்கள் மூலம் "ஆடியோகிராம் டெஸ்ட்(செவித்திறன் சோதனை)" செய்யப்பட்டு அவர்களுக்கு உரியச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்தச் சான்றிதழ் மூலம் "மாணவர்கள் மற்றும் அவருடன் செல்பவர்கள் பேருந்து மற்றும் ரயிலில் இலவசமாகச் செல்ல வாய்ப்பு" ஏற்பட்டுள்ளது.

இந்த ஆடியோகிராம் டெஸ்ட் சான்றிதழ் பள்ளி மாணவர்களுக்கு நீண்ட காலமாகக் கிடைக்காமல் இருந்த நிலையில் இந்த மருத்துவ முகாம் மூலம் பள்ளி மாணவர்களுக்கு தற்போது ஆடியோகிராம் டெஸ்ட் சான்றிதழ் கிடைத்துள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் மற்றும் அவரது பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலும் பள்ளி மாணவர்களுடன் பயணிப்பவர்களின் செலவும் குறைந்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகரன், தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் நீலமேகம், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, மருத்துவர்கள் மோகன்ராஜ், ராஜ் மோகன், வசந்தகுமார், விக்னேஷ் உள்ளிட்ட மருத்துவர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment