FLASH NEWS: உங்கள் சுதந்திரம் உங்களுக்கே திருப்பி தரப்படும்... புதிய கட்சியை தொடங்கி எலான் மஸ்க் அறிவிப்பு ***** ஈரானில் சர்வதேச விமானங்கள் மீண்டும் இயக்கம் ***** அமெரிக்காவில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு ***** ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில்... இந்தியா-டிரினிடாட் அண்டு டுபாகோ இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ***** உக்ரைன் மீது ஒரே நாளில் 550 டிரோன்களை ஏவிய ரஷியா ***** இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500 சதவீதம் வரி.. அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் ***** ஜப்பானில் 2 வாரங்களில் 900 முறை நிலநடுக்கம் ***** அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம் ***** காஷ்மீரில் அமர்நாத் பக்தர்கள் சென்ற 5 பஸ்கள் அடுத்தடுத்து மோதல்; 36 பேர் காயம் ***** தொழிலாளர்களின் பணி நேரம் 10 மணி நேரமாக அதிகரிப்பு -தெலுங்கானா அரசு உத்தரவு ***** கேரளாவில் 2 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள்; 3 மாவட்டங்களில் உஷார் நிலை *****

Sunday, April 14, 2024

முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் இலவச சிகிச்சை; காது கேட்கும், பேசும் திறன் பெற்ற 10 குழந்தைகள்:திண்டுக்கல் ஜி.ஹெச் டாக்டர்கள் சாதனை

 


3-2024
திண்டுக்கல்: பிறவியிலேயே காது கேட்காத, வாய் பேசாத 10 குழந்தைகளுக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனை டாக்டர்கள் சிறப்பு சிகிச்சை அளித்து காது கேட்கும், பேசும் திறனை வர வைத்து சாதனை படைத்துள்ளனர். தமிழகத்தில் 23 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிறவியிலேயே செவி உணர்வு இல்லாத மற்றும் வாய் பேச இயலாத குழந்தைகளுக்கு தனிப்பிரிவு அமைத்து சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த சிகிச்சைக்கான செலவு ₹7 லட்சமாகும். இந்த முழு செலவையும் தமிழ்நாடு முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் அரசு ஏற்றுக் கொண்டு இலவசமாக சிகிச்சை அளித்து வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் பழநி, நிலக்கோட்டை, தாடிக்கொம்பு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 10 குழந்தைகள் காது கேட்காத, வாய் பேச முடியாத குறைபாடுகளால் பாதிக்கப்பட்டதை கண்டறிந்தனர். இவர்களை திண்டுக்கல் அரசு மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை பிரிவில் அனுமதித்து எம்ஆர்ஐ ஸ்கேன் மூலம் சோதனை செய்து அதிலுள்ள குறைபாடுகளை கண்டறிந்து அறுவை சிகிச்சை செய்தனர். பின்னர் செவி, பேச்சு திறன் பெற்ற டாக்டர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் ஓராண்டு காலத்தில் குழந்தைகள் சரளமாக பேச முடிந்ததுடன், காது கேட்கும் திறனையும் பெற்றுள்ளனர்.

இதுகுறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் வீரமணி கூறுகையில், ‘பிறவியிலேயே காது கேட்காத, வாய் பேச முடியாத 10 குழந்தைகளுக்கு தலா ₹7 லட்சம் வீதம் ₹70 லட்சம் செலவில் ‘காக்ளியர் இம்பிளான்ட்’ என்னும் நவீன அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் அந்த குழந்தைகளுக்கு ஒரு வருட காலம் செவி, பேச்சு பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது அந்த குழந்தைகள் நன்கு காது கேட்கும் மற்றும் பேச்சு திறனை பெற்றுள்ளனர்’’ என்றார்.




No comments:

Post a Comment