FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Sunday, April 14, 2024

முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் இலவச சிகிச்சை; காது கேட்கும், பேசும் திறன் பெற்ற 10 குழந்தைகள்:திண்டுக்கல் ஜி.ஹெச் டாக்டர்கள் சாதனை

 


3-2024
திண்டுக்கல்: பிறவியிலேயே காது கேட்காத, வாய் பேசாத 10 குழந்தைகளுக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனை டாக்டர்கள் சிறப்பு சிகிச்சை அளித்து காது கேட்கும், பேசும் திறனை வர வைத்து சாதனை படைத்துள்ளனர். தமிழகத்தில் 23 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிறவியிலேயே செவி உணர்வு இல்லாத மற்றும் வாய் பேச இயலாத குழந்தைகளுக்கு தனிப்பிரிவு அமைத்து சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த சிகிச்சைக்கான செலவு ₹7 லட்சமாகும். இந்த முழு செலவையும் தமிழ்நாடு முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் அரசு ஏற்றுக் கொண்டு இலவசமாக சிகிச்சை அளித்து வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் பழநி, நிலக்கோட்டை, தாடிக்கொம்பு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 10 குழந்தைகள் காது கேட்காத, வாய் பேச முடியாத குறைபாடுகளால் பாதிக்கப்பட்டதை கண்டறிந்தனர். இவர்களை திண்டுக்கல் அரசு மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை பிரிவில் அனுமதித்து எம்ஆர்ஐ ஸ்கேன் மூலம் சோதனை செய்து அதிலுள்ள குறைபாடுகளை கண்டறிந்து அறுவை சிகிச்சை செய்தனர். பின்னர் செவி, பேச்சு திறன் பெற்ற டாக்டர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் ஓராண்டு காலத்தில் குழந்தைகள் சரளமாக பேச முடிந்ததுடன், காது கேட்கும் திறனையும் பெற்றுள்ளனர்.

இதுகுறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் வீரமணி கூறுகையில், ‘பிறவியிலேயே காது கேட்காத, வாய் பேச முடியாத 10 குழந்தைகளுக்கு தலா ₹7 லட்சம் வீதம் ₹70 லட்சம் செலவில் ‘காக்ளியர் இம்பிளான்ட்’ என்னும் நவீன அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் அந்த குழந்தைகளுக்கு ஒரு வருட காலம் செவி, பேச்சு பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது அந்த குழந்தைகள் நன்கு காது கேட்கும் மற்றும் பேச்சு திறனை பெற்றுள்ளனர்’’ என்றார்.




No comments:

Post a Comment