FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Saturday, April 27, 2024

பிறவியிலேயே காது கேளாத பிள்ளைகளுக்குச் செவித்திறன் அளிக்கும் மரபணு சிகிச்சை



25.04.2024 ஷாங்காய்: சீன நிறுவனம் ஒன்று, பிறவியிலேயே காது கேளாத பிள்ளைகளுக்குக் கேட்கும் திறன் அளிக்கும் மரபணு சிசிச்சையை வெற்றிகரமாகச் சோதித்துள்ளது.

அந்தச் சிகிச்சை முறையின் வெற்றி குறித்து புதன்கிழமை (ஜனவரி 24) ஆய்வாளர்கள் பகிர்ந்துகொண்டனர்.

ஆறு பிள்ளைகளுக்குச் சிகிச்சை அளித்ததில் ஐந்து குழந்தைகளுக்குச் செவித்திறன் கிட்டியதாகக் கூறப்படுகிறது.

சிகிச்சை முடிந்த ஆறு மாதங்களில் அவர்களது பேசும் திறனிலும் முன்னேற்றம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

‘ரெஃப்ரெஷ்ஜீன் தெரப்பியூட்டிக்ஸ்’ நிறுவனம் மேற்கொண்ட இந்த சிகிச்சை முறை குறித்த ஆய்வுக் கட்டுரை ‘தி லேன்சட்’ சஞ்சிகையில் வெளியாகியுள்ளது.

“இந்த ஆய்வின் முடிவுகள் உண்மையாகவே சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. குழந்தைகளின் கேட்கும் திறனும் பேச்சுத் திறனும் ஒவ்வொரு வாரமும் வியப்பளிக்கும் வகையில் மேம்பட்டதைக் கண்டோம்,” என்று ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் மாஸ் கண், காது மருத்துவக் கல்விக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் செங் யி சென் கூறினார்.

சோதனை சிகிச்சையில் கலந்துகொண்ட குழந்தைகள் அனைவருமே ‘ஓட்டோஃபெர்லின்’ எனும் மரபணுவில் ஏற்பட்ட மாற்றத்தால் பிறவியிலேயே காது கேளாதவர்கள்.

மனிதர்கள் செவிமடுக்கும் ஒலிச் சமிக்ஞைகளை காதிலிருந்து மூளைக்குக் கொண்டுசெல்ல, ‘ஓட்டோஃபெர்லின்’ புரதம் நன்றாகச் செயல்படுவது அவசியம்.

‘ஓட்டோஃபெர்லின்’ மரபணுவைச் சுமந்து செல்லும் தீங்கு விளைவிக்காத கிருமி ஒன்றை அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகளின் காதின் உட்புறம் செலுத்தி இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

சோதனையில் பங்குபெற்ற ஆறு பிள்ளைகளில் ஐவருக்குக் கேட்கும் திறன் கிட்டிய நிலையில், ஆறாவது குழந்தைக்கு ஏன் இன்னும் காது கேட்கவில்லை என்று தெளிவாகத் தெரியவில்லை.

இந்த சிகிச்சை முறைக்கு குறுகியகாலத்திற்கு லேசான பக்க விளைவுகள் மட்டுமே இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


No comments:

Post a Comment