FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Saturday, April 27, 2024

பிறவியிலேயே காது கேளாத பிள்ளைகளுக்குச் செவித்திறன் அளிக்கும் மரபணு சிகிச்சை



25.04.2024 ஷாங்காய்: சீன நிறுவனம் ஒன்று, பிறவியிலேயே காது கேளாத பிள்ளைகளுக்குக் கேட்கும் திறன் அளிக்கும் மரபணு சிசிச்சையை வெற்றிகரமாகச் சோதித்துள்ளது.

அந்தச் சிகிச்சை முறையின் வெற்றி குறித்து புதன்கிழமை (ஜனவரி 24) ஆய்வாளர்கள் பகிர்ந்துகொண்டனர்.

ஆறு பிள்ளைகளுக்குச் சிகிச்சை அளித்ததில் ஐந்து குழந்தைகளுக்குச் செவித்திறன் கிட்டியதாகக் கூறப்படுகிறது.

சிகிச்சை முடிந்த ஆறு மாதங்களில் அவர்களது பேசும் திறனிலும் முன்னேற்றம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

‘ரெஃப்ரெஷ்ஜீன் தெரப்பியூட்டிக்ஸ்’ நிறுவனம் மேற்கொண்ட இந்த சிகிச்சை முறை குறித்த ஆய்வுக் கட்டுரை ‘தி லேன்சட்’ சஞ்சிகையில் வெளியாகியுள்ளது.

“இந்த ஆய்வின் முடிவுகள் உண்மையாகவே சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. குழந்தைகளின் கேட்கும் திறனும் பேச்சுத் திறனும் ஒவ்வொரு வாரமும் வியப்பளிக்கும் வகையில் மேம்பட்டதைக் கண்டோம்,” என்று ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் மாஸ் கண், காது மருத்துவக் கல்விக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் செங் யி சென் கூறினார்.

சோதனை சிகிச்சையில் கலந்துகொண்ட குழந்தைகள் அனைவருமே ‘ஓட்டோஃபெர்லின்’ எனும் மரபணுவில் ஏற்பட்ட மாற்றத்தால் பிறவியிலேயே காது கேளாதவர்கள்.

மனிதர்கள் செவிமடுக்கும் ஒலிச் சமிக்ஞைகளை காதிலிருந்து மூளைக்குக் கொண்டுசெல்ல, ‘ஓட்டோஃபெர்லின்’ புரதம் நன்றாகச் செயல்படுவது அவசியம்.

‘ஓட்டோஃபெர்லின்’ மரபணுவைச் சுமந்து செல்லும் தீங்கு விளைவிக்காத கிருமி ஒன்றை அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகளின் காதின் உட்புறம் செலுத்தி இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

சோதனையில் பங்குபெற்ற ஆறு பிள்ளைகளில் ஐவருக்குக் கேட்கும் திறன் கிட்டிய நிலையில், ஆறாவது குழந்தைக்கு ஏன் இன்னும் காது கேட்கவில்லை என்று தெளிவாகத் தெரியவில்லை.

இந்த சிகிச்சை முறைக்கு குறுகியகாலத்திற்கு லேசான பக்க விளைவுகள் மட்டுமே இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


No comments:

Post a Comment