FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Saturday, April 27, 2024

பிறவியிலேயே காது கேளாத பிள்ளைகளுக்குச் செவித்திறன் அளிக்கும் மரபணு சிகிச்சை



25.04.2024 ஷாங்காய்: சீன நிறுவனம் ஒன்று, பிறவியிலேயே காது கேளாத பிள்ளைகளுக்குக் கேட்கும் திறன் அளிக்கும் மரபணு சிசிச்சையை வெற்றிகரமாகச் சோதித்துள்ளது.

அந்தச் சிகிச்சை முறையின் வெற்றி குறித்து புதன்கிழமை (ஜனவரி 24) ஆய்வாளர்கள் பகிர்ந்துகொண்டனர்.

ஆறு பிள்ளைகளுக்குச் சிகிச்சை அளித்ததில் ஐந்து குழந்தைகளுக்குச் செவித்திறன் கிட்டியதாகக் கூறப்படுகிறது.

சிகிச்சை முடிந்த ஆறு மாதங்களில் அவர்களது பேசும் திறனிலும் முன்னேற்றம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

‘ரெஃப்ரெஷ்ஜீன் தெரப்பியூட்டிக்ஸ்’ நிறுவனம் மேற்கொண்ட இந்த சிகிச்சை முறை குறித்த ஆய்வுக் கட்டுரை ‘தி லேன்சட்’ சஞ்சிகையில் வெளியாகியுள்ளது.

“இந்த ஆய்வின் முடிவுகள் உண்மையாகவே சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. குழந்தைகளின் கேட்கும் திறனும் பேச்சுத் திறனும் ஒவ்வொரு வாரமும் வியப்பளிக்கும் வகையில் மேம்பட்டதைக் கண்டோம்,” என்று ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் மாஸ் கண், காது மருத்துவக் கல்விக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் செங் யி சென் கூறினார்.

சோதனை சிகிச்சையில் கலந்துகொண்ட குழந்தைகள் அனைவருமே ‘ஓட்டோஃபெர்லின்’ எனும் மரபணுவில் ஏற்பட்ட மாற்றத்தால் பிறவியிலேயே காது கேளாதவர்கள்.

மனிதர்கள் செவிமடுக்கும் ஒலிச் சமிக்ஞைகளை காதிலிருந்து மூளைக்குக் கொண்டுசெல்ல, ‘ஓட்டோஃபெர்லின்’ புரதம் நன்றாகச் செயல்படுவது அவசியம்.

‘ஓட்டோஃபெர்லின்’ மரபணுவைச் சுமந்து செல்லும் தீங்கு விளைவிக்காத கிருமி ஒன்றை அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகளின் காதின் உட்புறம் செலுத்தி இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

சோதனையில் பங்குபெற்ற ஆறு பிள்ளைகளில் ஐவருக்குக் கேட்கும் திறன் கிட்டிய நிலையில், ஆறாவது குழந்தைக்கு ஏன் இன்னும் காது கேட்கவில்லை என்று தெளிவாகத் தெரியவில்லை.

இந்த சிகிச்சை முறைக்கு குறுகியகாலத்திற்கு லேசான பக்க விளைவுகள் மட்டுமே இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


No comments:

Post a Comment