FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Sunday, April 14, 2024

ஸ்ரீவில்லிபுத்தூர்: வாய் பேச முடியாத மனைவியிடம் பாலியல் சீண்டல்... புகார் அளித்த கணவர் குத்திக்கொலை

 


ஸ்ரீவில்லிபுத்தூரில் வாய் பேச முடியாத மனைவியிடம், பாலியல் சீண்டலில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட கணவர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் போலீஸார், 'விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார்பட்டித் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (45). இவர், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வழக்கறிஞரிடம் குமஸ்தாவாக வேலை பார்த்து வருகிறார். மாரிமுத்துவுக்கு, வாய் பேசமுடியாத மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்தநிலையில், கொளூர்பட்டியை சேர்ந்த வினோத் (30) என்பவர், மாரிமுத்துவின் மனைவியிடம் அடிக்கடி பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுகுறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீவில்லிப்புத்தூர் நகர் காவல் நிலையத்தில் மாரிமுத்து புகார் அளித்தார். அதன்பேரில் வினோத் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் மாரிமுத்து தனது வீட்டிலிருந்து ஸ்ரீவில்லிப்புத்தூர் கைகாட்டி கோயில் பஜாருக்கு நடந்து வந்துக்கொண்டிருந்தார்.

அப்போது ஐந்து கடை அருகே, மறைந்திருந்த வினோத், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாரிமுத்துவை வயிற்றில் குத்தியதாக கூறப்படுகிறது. இதில், குடல் சரிந்து மாரிமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து கொலையாளி வினோத் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக நகர் காவல்நிலையத்திற்கு தகவல் கிடைத்ததன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார், மாரிமுத்துவின் உடலை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் கொலை சம்பவம் குறித்த புகாரின்பேரில் நகர் காவல்நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான வினோத்தை தேடிப்பிடிக்க தனிப்படைகள் அமைத்துள்ளனர்' என்றனர். இந்த சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


No comments:

Post a Comment