FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Sunday, April 14, 2024

ஸ்ரீவில்லிபுத்தூர்: வாய் பேச முடியாத மனைவியிடம் பாலியல் சீண்டல்... புகார் அளித்த கணவர் குத்திக்கொலை

 


ஸ்ரீவில்லிபுத்தூரில் வாய் பேச முடியாத மனைவியிடம், பாலியல் சீண்டலில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட கணவர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் போலீஸார், 'விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார்பட்டித் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (45). இவர், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வழக்கறிஞரிடம் குமஸ்தாவாக வேலை பார்த்து வருகிறார். மாரிமுத்துவுக்கு, வாய் பேசமுடியாத மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்தநிலையில், கொளூர்பட்டியை சேர்ந்த வினோத் (30) என்பவர், மாரிமுத்துவின் மனைவியிடம் அடிக்கடி பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுகுறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீவில்லிப்புத்தூர் நகர் காவல் நிலையத்தில் மாரிமுத்து புகார் அளித்தார். அதன்பேரில் வினோத் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் மாரிமுத்து தனது வீட்டிலிருந்து ஸ்ரீவில்லிப்புத்தூர் கைகாட்டி கோயில் பஜாருக்கு நடந்து வந்துக்கொண்டிருந்தார்.

அப்போது ஐந்து கடை அருகே, மறைந்திருந்த வினோத், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாரிமுத்துவை வயிற்றில் குத்தியதாக கூறப்படுகிறது. இதில், குடல் சரிந்து மாரிமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து கொலையாளி வினோத் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக நகர் காவல்நிலையத்திற்கு தகவல் கிடைத்ததன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார், மாரிமுத்துவின் உடலை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் கொலை சம்பவம் குறித்த புகாரின்பேரில் நகர் காவல்நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான வினோத்தை தேடிப்பிடிக்க தனிப்படைகள் அமைத்துள்ளனர்' என்றனர். இந்த சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


No comments:

Post a Comment