FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Sunday, April 14, 2024

ஸ்ரீவில்லிபுத்தூர்: வாய் பேச முடியாத மனைவியிடம் பாலியல் சீண்டல்... புகார் அளித்த கணவர் குத்திக்கொலை

 


ஸ்ரீவில்லிபுத்தூரில் வாய் பேச முடியாத மனைவியிடம், பாலியல் சீண்டலில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட கணவர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் போலீஸார், 'விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார்பட்டித் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (45). இவர், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வழக்கறிஞரிடம் குமஸ்தாவாக வேலை பார்த்து வருகிறார். மாரிமுத்துவுக்கு, வாய் பேசமுடியாத மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்தநிலையில், கொளூர்பட்டியை சேர்ந்த வினோத் (30) என்பவர், மாரிமுத்துவின் மனைவியிடம் அடிக்கடி பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுகுறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீவில்லிப்புத்தூர் நகர் காவல் நிலையத்தில் மாரிமுத்து புகார் அளித்தார். அதன்பேரில் வினோத் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் மாரிமுத்து தனது வீட்டிலிருந்து ஸ்ரீவில்லிப்புத்தூர் கைகாட்டி கோயில் பஜாருக்கு நடந்து வந்துக்கொண்டிருந்தார்.

அப்போது ஐந்து கடை அருகே, மறைந்திருந்த வினோத், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாரிமுத்துவை வயிற்றில் குத்தியதாக கூறப்படுகிறது. இதில், குடல் சரிந்து மாரிமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து கொலையாளி வினோத் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக நகர் காவல்நிலையத்திற்கு தகவல் கிடைத்ததன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார், மாரிமுத்துவின் உடலை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் கொலை சம்பவம் குறித்த புகாரின்பேரில் நகர் காவல்நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான வினோத்தை தேடிப்பிடிக்க தனிப்படைகள் அமைத்துள்ளனர்' என்றனர். இந்த சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


No comments:

Post a Comment