FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Sunday, April 14, 2024

ஸ்ரீவில்லிபுத்தூர்: வாய் பேச முடியாத மனைவியிடம் பாலியல் சீண்டல்... புகார் அளித்த கணவர் குத்திக்கொலை

 


ஸ்ரீவில்லிபுத்தூரில் வாய் பேச முடியாத மனைவியிடம், பாலியல் சீண்டலில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட கணவர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் போலீஸார், 'விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார்பட்டித் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (45). இவர், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வழக்கறிஞரிடம் குமஸ்தாவாக வேலை பார்த்து வருகிறார். மாரிமுத்துவுக்கு, வாய் பேசமுடியாத மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்தநிலையில், கொளூர்பட்டியை சேர்ந்த வினோத் (30) என்பவர், மாரிமுத்துவின் மனைவியிடம் அடிக்கடி பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுகுறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீவில்லிப்புத்தூர் நகர் காவல் நிலையத்தில் மாரிமுத்து புகார் அளித்தார். அதன்பேரில் வினோத் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் மாரிமுத்து தனது வீட்டிலிருந்து ஸ்ரீவில்லிப்புத்தூர் கைகாட்டி கோயில் பஜாருக்கு நடந்து வந்துக்கொண்டிருந்தார்.

அப்போது ஐந்து கடை அருகே, மறைந்திருந்த வினோத், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாரிமுத்துவை வயிற்றில் குத்தியதாக கூறப்படுகிறது. இதில், குடல் சரிந்து மாரிமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து கொலையாளி வினோத் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக நகர் காவல்நிலையத்திற்கு தகவல் கிடைத்ததன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார், மாரிமுத்துவின் உடலை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் கொலை சம்பவம் குறித்த புகாரின்பேரில் நகர் காவல்நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான வினோத்தை தேடிப்பிடிக்க தனிப்படைகள் அமைத்துள்ளனர்' என்றனர். இந்த சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


No comments:

Post a Comment