FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Thursday, October 17, 2024

மாற்றுத் திறனாளி மாணவர்களை கவனிக்க போதிய ஆசிரியர்களை நியமிக்க ஐகோர்ட் உத்தரவு




07 Oct 2024 07:34 PM
சென்னை: மாற்றுத்திறனாளி மாணவர்களை கவனித்துக்கொள்ள ஆசிரியர் - மாணவர் விகிதாச்சாரத்தை நிர்ணயி்த்து, அதனடிப்படையில் போதிய ஆசிரியர்களை நியமிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டையில் உள்ள காதுகேளாதோர் அரசு உயர் நிலைப் பள்ளியில் 48 காதுகேளாத மாற்றுத்திறனாளிகளும், 35 பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்களும் படித்து வருகின்றனர். பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், அந்த மாணவர்களையும் சேர்த்து கவனித்துக்கொள்ள வேண்டும் என காதுகேளாதோருக்கு பாடம் நடத்தி வரும் ஆசிரியையான காயத்ரிக்கு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும், 365 நாட்களும் விடுமுறையின்றி பணியாற்றி வரும் தனக்கு ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் விடுமுறை வழங்க உத்தரவிடக்கோரியும் ஆசிரியை காயத்ரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்களை கவனித்துக் கொள்ள சிவகங்கையில் இருந்து ஆனந்தன் என்ற ஆசிரியர் புதுக்கோட்டைக்கு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவி்க்கப்பட்டது.

அதையடுத்து, மனுதாரரான ஆசிரியை காயத்ரி கடந்த 2016-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் 365 நாட்களும் விடுமுறையில்லாமல் பணியாற்றி வருவதை சுட்டிக்காட்டிய நீதிபதி, ''ஆண்டு முழுவதும் விடுமுறை இல்லாமல் யாரும் பணியாற்ற முடியாது என்பதால், அரசு விடுமுறை நாட்களிலாவது மனுதாரருக்கு விடுப்பு வழங்குவதற்கான நடைமுறையை உருவாக்க வேண்டும்'' என அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், ''பள்ளிகளில் ஆசிரியர் - மாணவர் விகிதாச்சாரம் நிர்ணயிக்கப்படுவதைப் போல, இதுபோன்ற சிறப்பு பள்ளிகளிலும் ஆசிரியர் - மாணவர் விகிதாச்சாரத்தை நிர்ணயிக்க கொள்கை முடிவெடுப்பதுடன், அதனடிப்படையில் இந்த பள்ளிகளில் போதுமான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்'' என அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் அக்.24-க்கு தள்ளி வைத்தார்.

No comments:

Post a Comment