FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Wednesday, August 13, 2025

காது கேளாத மற்றும் வாய் பேசாதவர்களுக்கு உதவித்தொகை ரூ.6 ஆயிரமாக வழங்கணும் ஓசூர் மாநாட்டில் தீர்மானம்


ஓசூரில் நடந்த தமிழ்நாடு காதுகேளாதோர் கூட்டமைப்பின் மாநாட்டில், மாநில தலைவர் பழனிசாமியை, அதிமுக துணை பொதுச்செயலாளர் முனுசாமி கவுரவித்தார். அருகில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி, கூட்டமைப்பின் சேர்மன் சுரேஷ் பாபு.

ஓசூர், ஆக.12
தமிழ்நாடு காதுகேளாதோர் கூட்ட மைப்பின் மாநில மாநாடு, 40வது ஆண்டு ரூபி ஜூப்ளி விழா மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட காதுகேளாதோர் சங்க 15வது ஆண்டு விழா ஒசூர் மாநகராட்சி மத்திகிரி டைட்டன் டவுன்ஷிப்பில் நேற்று நடந்தது. கூட்டமைப்பின் சேர்மன் சுரேஷ் பாபு தலைமை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளர்களாக அதிமுக துணை பொதுச்செயலாளரும், வேப்பனஹள்ளி எம்எல்ஏவுமான முனுசாமி, முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர். கூட்டமைப்பின் மாநில தலைவர் பழனிசாமி, பொதுச் செயலாளர் ஜெய்சங்கர் உட்பட மாநிலத்தின் 38 மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் மற்றும் 100க்கும் ன காது கேளாத, வாய் பேச அதிகமான இயலாத மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். மாற்றுத்திறனாளிகளான காது கேளா தோர் மற்றும் வாய் பேசாதவர்களுக்கு அரசின் சார்பில் வழங்கப்பட்டு வரும் பல்வேறு சலுகைகள் முழுமையாக சென்றடையவில்லை.

எனவே முழுமையாக சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.500 ஆக இருந்ததை ரூ.1,500 என உயர்த்தி தமிழக அரசு அறிவித்தது.

இதனை வரவேற்றுள்ள நிலையில் இந்த உதவித்தொகை சிறு நிபந்தனைகளின் காரணமாக குறிப்பிட்ட ஒரு சிலர் மட்டுமே பயனடையும் நிலை உள்ளதால் அனைவரும் பயனடையும் வகையில்  நிபந்தனைகளை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதை தொடர்ந்து நிருபர்களிடம் தமிழ் நாடு நாடு காதுகேளாதோர் கூட்டமைப்பின் சேர்மன் சுரேஷ் பாபு கூறியதாவது, காது கேளாதவர்களுக்கு இப்போது, அறிவிக்கப்பட்டுள்ள உதவித்தொகை ரூ,1,500 யாருக்கும் சென்றடையவில்லை. எந்த மாநிலத்திலும் இல்லாத சிறு, சிறு நிபந்தனைகளால் பயனடைய இயலாத நிலை உள்ளது. எனவே அறிவிக்கப்பட்டுள்ள ரூ.1,500 உதவித்தொகை அனைத்து காது கேளாதவர்களுக்கும் சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடகா மாநிலத்தில் காது கேளாத மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுவதுபோல், தமிழகத்திலும் உதவித் தொகையை ரூ.6 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment