FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Sunday, February 1, 2015

கிருஷ்ணகிரி DEAF மாற்றுத் திறனாளி சிறுமி பாலியல் பலாத்காரம்: அரசு அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

சென்னை, 31 January 2015
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளி சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாகக் கைது செய்யப்பட்ட நான்கு பேரை, சேலம் மத்திய சிறைக்கு ஒரு வாரத்துக்குள் மாற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியை தருமபுரி மாவட்ட அரசு மருத்துவமனை பெண் டாக்டர் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், இதுதொடர்பாக போலீஸார் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:

எனது இரண்டாவது மகள் வாய் பேசமுடியாத, காது கேட்கும் திறன் இழந்த மாற்றுத் திறனாளி. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 25-ஆம் தேதி தோட்டத்தில் இருந்த எனக்கு, சாப்பாடு எடுத்துக் கொண்டு வந்த எனது மகள் மீண்டும் வீடு திரும்பவில்லை.

அவளைத் தேடிய போது, சுயநினைவில்லாமல், உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்ட நிலையில் எனது மகள் சாலையில் மயங்கிக் கிடந்தார். இரவு என்பதால் மருத்துவமனைக்குச் செல்ல எங்களது கிராமத்தில் இருந்து போக்குவரத்து வசதி கிடையாது.

மறுநாள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, தன்னை பாலியல் பலாத்காரம் செய்தோரை எனது மகள் அடையாளம் காட்டினார்.

இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். ஆனால், நாங்கள் பொய் புகார் அளித்ததாக போலீஸார் எங்களை துன்புறுத்தினர்.

எனவே, எனது மகளை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரை சிபிஐ விசாரணை செய்ய உத்தரவிட வேண்டும். புகாரை வாங்க மறுத்து எங்களை துன்புறுத்திய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இடைக்கால இழப்பீடாக ரூ. 5 லட்சம் வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஏன் மாற்றக் கூடாது என சம்பந்தப்பட்ட பெண் காவல் ஆய்வாளருக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.

இந்த நிலையில் இந்த மனு நீதிபதி டி.எஸ்.சிவஞானம் முன்பு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது காவல் ஆய்வாளர் பதில் மனு தாக்கல் செய்தார்.

அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர், "பாதிக்கப்பட்ட மாற்றுத்தினாளி சிறுமி, கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி தேன்கனிக்கோட்டை மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜராகி பாலியல் கொடுமைக்கு முயற்சி நடந்ததாக ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்கள் 4 பேரும் தற்போது ஓசூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்தார்.

விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த இடைக்கால உத்தரவு: தருமபுரி மாவட்ட அரசு மருத்துவமனையின் பெண் டாக்டரால், மனுதாரரின் மகளை மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும்.

மேலும், இந்த வழக்கில் யாருடைய நிர்பந்தமும் ஏற்படக்கூடாது. அதனால், ஓசூர் கிளைச் சிறையில் உள்ள 4 பேரையும், சேலம் மத்திய சிறைக்கு ஒரு வாரத்துக்குள் போலீஸார் மாற்றம் செய்ய வேண்டும்.

மேலும், இது தொடர்பான அறிக்கையை பிப்ரவரி 13-ஆம் தேதி போலீஸார் தாக்கல் செய்ய வேண்டும். மனதளவிலும், பொருளாதார ரீதியிலும் மனுதாரர் பாதிக்கப்பட்டுள்ளதால், மாவட்ட ஆட்சியர் அவருக்கு உடனடியாக ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும். இந்தத் தொகை இழப்பீட்டுத் தொகை ஆகாது என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சிறார் பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்து தமிழக காவல்துறைக்கு போதிய விழிப்புணர்வு இல்லை: பிருந்தா காரத் - தி இந்து

குழந்தை பாதுகாப்பு விதிகளை மதிக்காத காவல்துறை - பிருந்தாகாரத் குற்றச்சாட்டு


Friday, January 30, 2015

NYC mayor's vibrant deaf interpreter creates his own storm

30.01.2015, NEW YORK (AP) — They were hanging on his every word — and gesture, body movement, and definitely the facial expressions.

Jonathan Lamberton, New York City Mayor Bill de Blasio's sign language interpreter, is getting a blizzard of attention for his highly animated ways that were on full display during recent weather briefings.

Standing a short distance away as de Blasio delivered serious warnings about impending snow, Lamberton, a certified deaf interpreter, was a whirlwind of movement — big gestures, incorporating his whole body, along with a variety of facial movements.

It was enough to get the 38-year-old man a whole lot of buzz — on social media, websites, even on the "Daily Show," where host Jon Stewart crowned him "Best Silent Mayoral Hype Man" and said, "That is some New York sign language."

It's actually American Sign Language, but the way Lamberton speaks it makes the difference. Born deaf to deaf parents, he grew up communicating in ASL, essentially making it his native tongue. So when he signs, it's with the full range of expressiveness deaf people use with each other, he said Wednesday in an online chat with The Associated Press.

"I think ASL has typically been depicted to the public in the 'nicer' form that hearing people are able to use, and that deaf people typically use with hearing people," Lamberton said. "The ASL that deaf people use among each other hasn't been seen on screen much so I think that's part of the reason people reacted so strongly."

A sign language intrepeter signs as New York City Mayor Bill de Blasio, center, hold a press confere …

Lamberton said the way he signs is more accessible to a wider swath of deaf people. The freelance interpreter first worked with the city a few months ago when Ebola was being discussed. He works with a hearing partner who translates what is being said into ASL, which Lamberton then puts into a form that's broadly understandable. At some of the recent mayoral briefings, that partner happened to be his wife.

He hasn't been following the media commentary about him too much, he said, and has been focused on doing his job, but said he appreciated the opportunity to inform the wider hearing world more fully about ASL.

"A lot of people seem to be enjoying my work and while that's well and nice, I'm not there for their entertainment or to steal anyone's show, I'm there to communicate critical information to the deaf community," he said. "But people are seeing how beautiful ASL can be, and I'm happy about that."

தோல் ஆராய்ச்சி மையத்தில் உதவியாளர் பணி


சென்னையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான Central Leather Research Institute-ல் காலியாக உள்ள குரூப் 'C' பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: 1/2015

பணி: Junior Stenographer Group-C
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும் மற்றும் தட்டச்சில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant (General) Grade-III
காலியிடங்கள்: 07
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்

பணி: Assistant (Finance & Accounts) Grade-III
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: வணிகவியல் பிரிவில் +2 தேர்ச்சியுடன் ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant (Stores &Purchase) Grade -III
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை பாரத ஸ்டேட் வங்கியின் ஏதாவதொரு கிளையில் ஆன்லைன் முறையில் செலுத்தவும். செலுத்திய பிறகு அதற்குரிய இ-ரசீது பெற்றுக் கொள்ளவும்.

எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: www.clri.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Senior Controller of Administration, CSIR-Central Leather Research Institute, Sadar Patel Road, Adyar, Chennai - 600020.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 16.02.2015

மேலும் தேர்வு செய்யப்படும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.clri.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Click here

+2 மாணவர்களே... ஒருங்கிணைந்த எம்.எஸ்சி படிக்க விருப்பமா? NEST தேர்வுக்குத் தயாராகுங்க!



புவனேஸ்வரில் உள்ள, National Institute of Science and Education and Research (NISER), மும்பையில் உள்ள Centre for Excellence in Basic Sciences (CBS) போன்ற புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள் +2 முடித்த மாணவர்களைத் தேர்வு செய்து 5ஆண்டு ஒருங்கிணைந்த M.Sc படிப்பை வழங்குகின்றன.

இப்படிப்புகளுக்கு மாணவர்களைத் தேர்வு செய்வதற்காக NEST (National Entrance Screening Test) என்ற தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது. இத்தேர்வு பற்றி விரிவாக விளக்குகிறார், கல்வியாளரும் ‘ஸ்டூடண்ட்ஸ் விஷன் அகாடமி’யின் இயக்நனருமான ஆர்.ராஜராஜன்.

‘‘NISER என்பது, இந்திய அரசின் அணு ஆற்றல் துறையின் கீழ் இயங்கும் சுய அதிகாரம் உள்ள நிறுவனம். இந்நிறுவனம் ஒருங்கிணைந்த உயிரியல், வேதியியல், இயற்பியல், கணிதம், மானிடவியல் மற்றும் சமூக அறிவியல் துறைகளில் M.Sc., Ph.D போன்ற படிப்புகளை வழங்குகிறது.


CBS என்பது நடுவண் அரசின் அணு ஆற்றல் துறையும், மும்பை பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் கல்வி நிறுவனம். இந்நிறுவனம் அடிப்படை அறிவியல் துறைகளுக்கான ஒருங்கிணைந்த M.Sc படிப்புகளையும், இவை தொடர்பான ஆய்வுப் படிப்புகளையும் தருகிறது. இந்த இரு நிறுவனங்களுமே உறைவிட கல்வி நிறுவனங்களாகும்.

இந்த நிறுவனங்களில் M.Sc பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் மத்திய அரசின் ‘இன்ஸ்பையர்’ திட்டத்தின் கீழ் ஊக்கத் தொகையாக மாதம்தோறும் ரூ.5000, திட்ட அறிக்கைக்காக ரூ.20,000 வழங்கப்படும். இறுதி செமஸ்டர் வரை மிகச்சிறந்த மதிப்பெண்களை பெறுபவர்கள், ‘பாபா அட்டாமிக் எனர்ஜி பயிற்சிப் பள்ளி’யில் நேரடி சேர்க்கைக்கான வாய்ப்பினைப் பெறுவார்கள்.

இந்தப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ழிணிஷிஜி நுழைவுத்தேர்வு மூலம் நடத்தப்படும். யாரெல்லாம் இந்தத் தேர்வை எழுதலாம்?

+2வில் உயிரியல், வேதியியல், கணிதம், இயற்பியல் பிரிவுகளை எடுத்துப் படித்து, மொத்தம் 60% மதிப்பெண்களை எடுத்த பொதுப்பிரிவினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்கள் இத்தேர்வை எழுத விண்ணப்பிக்கலாம். ஆதிதிராவிடர், மலைவாழ் மக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் குறைந்தது 55% எடுத்திருக்க வேண்டும். கிரேடு முறையிலான மதிப்பீட்டினை மாணவர்கள் பெற்றிருப்பின், இதற்கு சமமான விழுக்காட்டிற்கான சான்றிதழை, சம்பந்தப்பட்ட துறையிலிருந்து மாணவர்கள் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். ற்போது +2 படித்து பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களும் இந்த தேர்வை எழுத விண்ணப்பிக்கலாம்.

வயதுத் தகுதி:
பொது மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 1995ம் ஆண்டு அல்லது அதற்குப் பின் பிறந்திருக்க வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 ஆண்டு வயதுச் சலுகை உண்டு.

இந்த படிப்புக்கு ழிமிஷிணிஸி நிறுவனத்தில் 102 இடங்களும், சிஙிஷி நிறுவனத்தில் 47 இடங்களும் உண்டு. அரசு விதிப்படி இடஒதுக்கீடுகளும் உண்டு.

NEST நுழைவுத்தேர்வு, சென்னை, மதுரை, பெங்களூரு, ஐதராபாத், திருவனந்தபுரம், விசாகப்பட்டினம் உள்ளிட்ட 52 இடங்களில் நடத்தப்படும். நுழைவுத்தேர்வில் தேர்வு பெற்ற மாணவர்கள் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டு, அதன் அடிப்படையில் சேர்க்கை வழங்கப்படும்.

தேர்வு எந்த அடிப்படையில் நடக்கும்?
சரியான விடையைத் தேர்வு செய்யும் முறையில் நடக்கும் இந்தத் தேர்வில் மொத்தம் 5 பிரிவுகள் உண்டு. ஒவ்வொரு பிரிவிற்கும் 60 மதிப்பெண்கள் வழங்கப்படும். பிரிவு I பொதுப்பிரிவாகும். அனைத்து மாணவர்களும் கட்டாயமாக விடையளிக்க வேண்டிய பகுதி இது. இப்பிரிவில் தவறான விடைக்கு மதிப்பெண் குறைக்கப்பட மாட்டாது.

இப்பிரிவிற்கு குறிப்பிட்ட பாடத்திட்டம் தரப்படவில்லை என்றாலும், வானியல், உயிரியல், வேதியியல், கணிதம், இயற்பியல், கணினியியல் பாடங்களில் பொது அறிவு பயிற்சி வேண்டும். அறிவியல் பாடங்களுக்கான காம்ப்ரிஹென்ஷன் (Comprehension) பகுதியும் இடம்பெறும். கணிதத்தைப் பொறுத்தவரை பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தின் அடிப்படையில் வினாக்கள் அமையும்.

II, III, IV, V பிரிவுகளைப் பொறுத்தவரை உயிரியல், வேதியியல், இயற்பியல், கணிதப் பாடங்களை உள்ளடக்கியிருக்கும். பிரிவு இரண்டு முதல் ஐந்து வரையிலான பிரிவுகளுக்கு தவறான விடைக்கு மதிப்பெண் குறைக்கப்படும். பொதுவாக காம்ப்ரிஹென்ஷன், அனாலிடிகல் திறமை இவற்றை சோதிக்கும் வகையில் இத்தேர்வு அமையும். சில வினாக்களுக்கு, விடையில் ஒன்று அல்லது அதற்கு மேலான சரியான விடைகள் இருக்கலாம். அனைத்தும் சரியான விடையுள்ள எண்ணை மாணவர்கள் தேர்வு செய்தால் அதற்கு மதிப்பெண் வழங்கப்படும்.

பழைய வினாத்தாள்களை www.nestexam.in இணையதளத்தில் டவுன்லோடு செய்துகொள்ளலாம்.

எப்படி விண்ணப்பிப்பது?
www.nestexam.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக் கட்டணம், பொது மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 700 ரூபாய். பெண்கள், மாற்றுத்திறனாளிகள், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 350 ரூபாய்.

விண்ணப்பிக்க இறுதி நாள்: 7.4.2015.

தேர்வுக்கான ஹால் டிக்கெட் 15.4.2015 அன்று முதல் இணையதளத்தில் கிடைக்கும்.

தேர்வு 20.5.2015 சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும்.

முடிவுகள் 19.6.2015 அன்று வெளிவரும்.

மேலும் விவரங்களுக்கு

The Chief Coordinator, NEST 2015,
NISER, Institute of Physics Campus,
Sachivalaya Marg, Sainik School (PO),
Bhubaneswar 751 005, Odisha



Thursday, January 29, 2015

சமையலர் பணிகளுக்கு பதிவு மூப்பு அறிவிப்பு

29.01.2015, மதுரை :
 மதுரை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத் துறையில் சமையலர் பணியிடங்களுக்கு பதிவு மூப்பு அறிவிப்பு விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குனர் சுப்பிரமணியன் கூறியுள்ளதாவது: இப்பணிக்கு ஆதிதிராவிடர் அருந்ததியினர்/பொது-22.1.15, பழங்குடியினர்/பொது-22.1.15 வரை பதிவு செய்தோர் முன்னுரிமை பிரிவினர். அருந்ததியர்/பொது-30.12.96, அருந்ததியர்/ஆதிதிராவிடர் மாற்றுத்திறனாளிகள்-27.12.12, அருந்ததியர்/ஆதிதிராவிடர் காது கேளாதோர்-29.4.1990 வரை பதிவு செய்தோர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் ஜன., 30ம் தேதி சான்றிதழ்களுடன் வந்து பதிவு மூப்பை சரி பார்க்கலாம், என தெரிவித்துள்ளார்.

மாற்றுத் திறனாளிகளுக்கு பல்லூடக பயிற்சி முகாம்

29.01.2015, விழுப்புரம்: 
விழுப்புரத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு பல்லூடக பயிற்சி மற்றும் இலக்க புகைப்பட பயிற்சி அளிக்கப் படுகிறது. விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் 2014-15ம் ஆண்டிற்கான ஒரு மாத பல்லூடக பயிற்சி மற்றும் இலக்க புகைப்பட பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதன்படி, கை- கால் பாதிக்கப்பட்ட மற்றும் செவித்திறன் குறையுடைய 200 மாற்றுத்திறனாளிகளுக்கு, பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

சென்னையில் உள்ள தேசிய திரைப்பட வளர்ச்சி கழகம் ஏற்பாடு செய்துள்ள பயிற்சியில் பங்கு பெற, 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 16 முதல் 40 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் பங்குபெறுவோருக்கு விடுதி வசதி மற்றும் பயிற்சி உதவித் தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

விருப்பமுள்ளவர்கள் ரேஷன் கார்டு நகல், கல்விச் சான்று நகல் மற்றும் மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை நகல், மொபைல்போன் எண் இணைத்து, கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் பிப்.,2ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இத்தகவலை விழுப்புரம் கலெக்டர் சம்பத் தெரிவித்துள்ளார்.

Wednesday, January 28, 2015

XVII World Congress of the World Federation of the Deaf