FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Sunday, February 1, 2015

கிருஷ்ணகிரி DEAF மாற்றுத் திறனாளி சிறுமி பாலியல் பலாத்காரம்: அரசு அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

சென்னை, 31 January 2015
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளி சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாகக் கைது செய்யப்பட்ட நான்கு பேரை, சேலம் மத்திய சிறைக்கு ஒரு வாரத்துக்குள் மாற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியை தருமபுரி மாவட்ட அரசு மருத்துவமனை பெண் டாக்டர் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், இதுதொடர்பாக போலீஸார் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:

எனது இரண்டாவது மகள் வாய் பேசமுடியாத, காது கேட்கும் திறன் இழந்த மாற்றுத் திறனாளி. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 25-ஆம் தேதி தோட்டத்தில் இருந்த எனக்கு, சாப்பாடு எடுத்துக் கொண்டு வந்த எனது மகள் மீண்டும் வீடு திரும்பவில்லை.

அவளைத் தேடிய போது, சுயநினைவில்லாமல், உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்ட நிலையில் எனது மகள் சாலையில் மயங்கிக் கிடந்தார். இரவு என்பதால் மருத்துவமனைக்குச் செல்ல எங்களது கிராமத்தில் இருந்து போக்குவரத்து வசதி கிடையாது.

மறுநாள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, தன்னை பாலியல் பலாத்காரம் செய்தோரை எனது மகள் அடையாளம் காட்டினார்.

இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். ஆனால், நாங்கள் பொய் புகார் அளித்ததாக போலீஸார் எங்களை துன்புறுத்தினர்.

எனவே, எனது மகளை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரை சிபிஐ விசாரணை செய்ய உத்தரவிட வேண்டும். புகாரை வாங்க மறுத்து எங்களை துன்புறுத்திய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இடைக்கால இழப்பீடாக ரூ. 5 லட்சம் வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஏன் மாற்றக் கூடாது என சம்பந்தப்பட்ட பெண் காவல் ஆய்வாளருக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.

இந்த நிலையில் இந்த மனு நீதிபதி டி.எஸ்.சிவஞானம் முன்பு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது காவல் ஆய்வாளர் பதில் மனு தாக்கல் செய்தார்.

அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர், "பாதிக்கப்பட்ட மாற்றுத்தினாளி சிறுமி, கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி தேன்கனிக்கோட்டை மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜராகி பாலியல் கொடுமைக்கு முயற்சி நடந்ததாக ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்கள் 4 பேரும் தற்போது ஓசூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்தார்.

விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த இடைக்கால உத்தரவு: தருமபுரி மாவட்ட அரசு மருத்துவமனையின் பெண் டாக்டரால், மனுதாரரின் மகளை மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும்.

மேலும், இந்த வழக்கில் யாருடைய நிர்பந்தமும் ஏற்படக்கூடாது. அதனால், ஓசூர் கிளைச் சிறையில் உள்ள 4 பேரையும், சேலம் மத்திய சிறைக்கு ஒரு வாரத்துக்குள் போலீஸார் மாற்றம் செய்ய வேண்டும்.

மேலும், இது தொடர்பான அறிக்கையை பிப்ரவரி 13-ஆம் தேதி போலீஸார் தாக்கல் செய்ய வேண்டும். மனதளவிலும், பொருளாதார ரீதியிலும் மனுதாரர் பாதிக்கப்பட்டுள்ளதால், மாவட்ட ஆட்சியர் அவருக்கு உடனடியாக ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும். இந்தத் தொகை இழப்பீட்டுத் தொகை ஆகாது என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment