FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Sunday, February 1, 2015

கிருஷ்ணகிரி DEAF மாற்றுத் திறனாளி சிறுமி பாலியல் பலாத்காரம்: அரசு அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

சென்னை, 31 January 2015
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளி சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாகக் கைது செய்யப்பட்ட நான்கு பேரை, சேலம் மத்திய சிறைக்கு ஒரு வாரத்துக்குள் மாற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியை தருமபுரி மாவட்ட அரசு மருத்துவமனை பெண் டாக்டர் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், இதுதொடர்பாக போலீஸார் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:

எனது இரண்டாவது மகள் வாய் பேசமுடியாத, காது கேட்கும் திறன் இழந்த மாற்றுத் திறனாளி. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 25-ஆம் தேதி தோட்டத்தில் இருந்த எனக்கு, சாப்பாடு எடுத்துக் கொண்டு வந்த எனது மகள் மீண்டும் வீடு திரும்பவில்லை.

அவளைத் தேடிய போது, சுயநினைவில்லாமல், உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்ட நிலையில் எனது மகள் சாலையில் மயங்கிக் கிடந்தார். இரவு என்பதால் மருத்துவமனைக்குச் செல்ல எங்களது கிராமத்தில் இருந்து போக்குவரத்து வசதி கிடையாது.

மறுநாள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, தன்னை பாலியல் பலாத்காரம் செய்தோரை எனது மகள் அடையாளம் காட்டினார்.

இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். ஆனால், நாங்கள் பொய் புகார் அளித்ததாக போலீஸார் எங்களை துன்புறுத்தினர்.

எனவே, எனது மகளை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரை சிபிஐ விசாரணை செய்ய உத்தரவிட வேண்டும். புகாரை வாங்க மறுத்து எங்களை துன்புறுத்திய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இடைக்கால இழப்பீடாக ரூ. 5 லட்சம் வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஏன் மாற்றக் கூடாது என சம்பந்தப்பட்ட பெண் காவல் ஆய்வாளருக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.

இந்த நிலையில் இந்த மனு நீதிபதி டி.எஸ்.சிவஞானம் முன்பு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது காவல் ஆய்வாளர் பதில் மனு தாக்கல் செய்தார்.

அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர், "பாதிக்கப்பட்ட மாற்றுத்தினாளி சிறுமி, கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி தேன்கனிக்கோட்டை மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜராகி பாலியல் கொடுமைக்கு முயற்சி நடந்ததாக ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்கள் 4 பேரும் தற்போது ஓசூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்தார்.

விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த இடைக்கால உத்தரவு: தருமபுரி மாவட்ட அரசு மருத்துவமனையின் பெண் டாக்டரால், மனுதாரரின் மகளை மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும்.

மேலும், இந்த வழக்கில் யாருடைய நிர்பந்தமும் ஏற்படக்கூடாது. அதனால், ஓசூர் கிளைச் சிறையில் உள்ள 4 பேரையும், சேலம் மத்திய சிறைக்கு ஒரு வாரத்துக்குள் போலீஸார் மாற்றம் செய்ய வேண்டும்.

மேலும், இது தொடர்பான அறிக்கையை பிப்ரவரி 13-ஆம் தேதி போலீஸார் தாக்கல் செய்ய வேண்டும். மனதளவிலும், பொருளாதார ரீதியிலும் மனுதாரர் பாதிக்கப்பட்டுள்ளதால், மாவட்ட ஆட்சியர் அவருக்கு உடனடியாக ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும். இந்தத் தொகை இழப்பீட்டுத் தொகை ஆகாது என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment