FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Sunday, February 1, 2015

கிருஷ்ணகிரி DEAF மாற்றுத் திறனாளி சிறுமி பாலியல் பலாத்காரம்: அரசு அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

சென்னை, 31 January 2015
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளி சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாகக் கைது செய்யப்பட்ட நான்கு பேரை, சேலம் மத்திய சிறைக்கு ஒரு வாரத்துக்குள் மாற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியை தருமபுரி மாவட்ட அரசு மருத்துவமனை பெண் டாக்டர் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், இதுதொடர்பாக போலீஸார் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:

எனது இரண்டாவது மகள் வாய் பேசமுடியாத, காது கேட்கும் திறன் இழந்த மாற்றுத் திறனாளி. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 25-ஆம் தேதி தோட்டத்தில் இருந்த எனக்கு, சாப்பாடு எடுத்துக் கொண்டு வந்த எனது மகள் மீண்டும் வீடு திரும்பவில்லை.

அவளைத் தேடிய போது, சுயநினைவில்லாமல், உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்ட நிலையில் எனது மகள் சாலையில் மயங்கிக் கிடந்தார். இரவு என்பதால் மருத்துவமனைக்குச் செல்ல எங்களது கிராமத்தில் இருந்து போக்குவரத்து வசதி கிடையாது.

மறுநாள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, தன்னை பாலியல் பலாத்காரம் செய்தோரை எனது மகள் அடையாளம் காட்டினார்.

இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். ஆனால், நாங்கள் பொய் புகார் அளித்ததாக போலீஸார் எங்களை துன்புறுத்தினர்.

எனவே, எனது மகளை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரை சிபிஐ விசாரணை செய்ய உத்தரவிட வேண்டும். புகாரை வாங்க மறுத்து எங்களை துன்புறுத்திய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இடைக்கால இழப்பீடாக ரூ. 5 லட்சம் வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஏன் மாற்றக் கூடாது என சம்பந்தப்பட்ட பெண் காவல் ஆய்வாளருக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.

இந்த நிலையில் இந்த மனு நீதிபதி டி.எஸ்.சிவஞானம் முன்பு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது காவல் ஆய்வாளர் பதில் மனு தாக்கல் செய்தார்.

அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர், "பாதிக்கப்பட்ட மாற்றுத்தினாளி சிறுமி, கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி தேன்கனிக்கோட்டை மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜராகி பாலியல் கொடுமைக்கு முயற்சி நடந்ததாக ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்கள் 4 பேரும் தற்போது ஓசூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்தார்.

விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த இடைக்கால உத்தரவு: தருமபுரி மாவட்ட அரசு மருத்துவமனையின் பெண் டாக்டரால், மனுதாரரின் மகளை மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும்.

மேலும், இந்த வழக்கில் யாருடைய நிர்பந்தமும் ஏற்படக்கூடாது. அதனால், ஓசூர் கிளைச் சிறையில் உள்ள 4 பேரையும், சேலம் மத்திய சிறைக்கு ஒரு வாரத்துக்குள் போலீஸார் மாற்றம் செய்ய வேண்டும்.

மேலும், இது தொடர்பான அறிக்கையை பிப்ரவரி 13-ஆம் தேதி போலீஸார் தாக்கல் செய்ய வேண்டும். மனதளவிலும், பொருளாதார ரீதியிலும் மனுதாரர் பாதிக்கப்பட்டுள்ளதால், மாவட்ட ஆட்சியர் அவருக்கு உடனடியாக ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும். இந்தத் தொகை இழப்பீட்டுத் தொகை ஆகாது என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment