FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Sunday, February 1, 2015

கிருஷ்ணகிரி DEAF மாற்றுத் திறனாளி சிறுமி பாலியல் பலாத்காரம்: அரசு அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

சென்னை, 31 January 2015
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளி சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாகக் கைது செய்யப்பட்ட நான்கு பேரை, சேலம் மத்திய சிறைக்கு ஒரு வாரத்துக்குள் மாற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியை தருமபுரி மாவட்ட அரசு மருத்துவமனை பெண் டாக்டர் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், இதுதொடர்பாக போலீஸார் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:

எனது இரண்டாவது மகள் வாய் பேசமுடியாத, காது கேட்கும் திறன் இழந்த மாற்றுத் திறனாளி. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 25-ஆம் தேதி தோட்டத்தில் இருந்த எனக்கு, சாப்பாடு எடுத்துக் கொண்டு வந்த எனது மகள் மீண்டும் வீடு திரும்பவில்லை.

அவளைத் தேடிய போது, சுயநினைவில்லாமல், உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்ட நிலையில் எனது மகள் சாலையில் மயங்கிக் கிடந்தார். இரவு என்பதால் மருத்துவமனைக்குச் செல்ல எங்களது கிராமத்தில் இருந்து போக்குவரத்து வசதி கிடையாது.

மறுநாள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, தன்னை பாலியல் பலாத்காரம் செய்தோரை எனது மகள் அடையாளம் காட்டினார்.

இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். ஆனால், நாங்கள் பொய் புகார் அளித்ததாக போலீஸார் எங்களை துன்புறுத்தினர்.

எனவே, எனது மகளை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரை சிபிஐ விசாரணை செய்ய உத்தரவிட வேண்டும். புகாரை வாங்க மறுத்து எங்களை துன்புறுத்திய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இடைக்கால இழப்பீடாக ரூ. 5 லட்சம் வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஏன் மாற்றக் கூடாது என சம்பந்தப்பட்ட பெண் காவல் ஆய்வாளருக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.

இந்த நிலையில் இந்த மனு நீதிபதி டி.எஸ்.சிவஞானம் முன்பு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது காவல் ஆய்வாளர் பதில் மனு தாக்கல் செய்தார்.

அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர், "பாதிக்கப்பட்ட மாற்றுத்தினாளி சிறுமி, கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி தேன்கனிக்கோட்டை மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜராகி பாலியல் கொடுமைக்கு முயற்சி நடந்ததாக ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்கள் 4 பேரும் தற்போது ஓசூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்தார்.

விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த இடைக்கால உத்தரவு: தருமபுரி மாவட்ட அரசு மருத்துவமனையின் பெண் டாக்டரால், மனுதாரரின் மகளை மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும்.

மேலும், இந்த வழக்கில் யாருடைய நிர்பந்தமும் ஏற்படக்கூடாது. அதனால், ஓசூர் கிளைச் சிறையில் உள்ள 4 பேரையும், சேலம் மத்திய சிறைக்கு ஒரு வாரத்துக்குள் போலீஸார் மாற்றம் செய்ய வேண்டும்.

மேலும், இது தொடர்பான அறிக்கையை பிப்ரவரி 13-ஆம் தேதி போலீஸார் தாக்கல் செய்ய வேண்டும். மனதளவிலும், பொருளாதார ரீதியிலும் மனுதாரர் பாதிக்கப்பட்டுள்ளதால், மாவட்ட ஆட்சியர் அவருக்கு உடனடியாக ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும். இந்தத் தொகை இழப்பீட்டுத் தொகை ஆகாது என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment