FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Thursday, January 29, 2015

மாற்றுத் திறனாளிகளுக்கு பல்லூடக பயிற்சி முகாம்

29.01.2015, விழுப்புரம்: 
விழுப்புரத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு பல்லூடக பயிற்சி மற்றும் இலக்க புகைப்பட பயிற்சி அளிக்கப் படுகிறது. விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் 2014-15ம் ஆண்டிற்கான ஒரு மாத பல்லூடக பயிற்சி மற்றும் இலக்க புகைப்பட பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதன்படி, கை- கால் பாதிக்கப்பட்ட மற்றும் செவித்திறன் குறையுடைய 200 மாற்றுத்திறனாளிகளுக்கு, பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

சென்னையில் உள்ள தேசிய திரைப்பட வளர்ச்சி கழகம் ஏற்பாடு செய்துள்ள பயிற்சியில் பங்கு பெற, 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 16 முதல் 40 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் பங்குபெறுவோருக்கு விடுதி வசதி மற்றும் பயிற்சி உதவித் தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

விருப்பமுள்ளவர்கள் ரேஷன் கார்டு நகல், கல்விச் சான்று நகல் மற்றும் மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை நகல், மொபைல்போன் எண் இணைத்து, கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் பிப்.,2ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இத்தகவலை விழுப்புரம் கலெக்டர் சம்பத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment