FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Thursday, January 29, 2015

மாற்றுத் திறனாளிகளுக்கு பல்லூடக பயிற்சி முகாம்

29.01.2015, விழுப்புரம்: 
விழுப்புரத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு பல்லூடக பயிற்சி மற்றும் இலக்க புகைப்பட பயிற்சி அளிக்கப் படுகிறது. விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் 2014-15ம் ஆண்டிற்கான ஒரு மாத பல்லூடக பயிற்சி மற்றும் இலக்க புகைப்பட பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதன்படி, கை- கால் பாதிக்கப்பட்ட மற்றும் செவித்திறன் குறையுடைய 200 மாற்றுத்திறனாளிகளுக்கு, பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

சென்னையில் உள்ள தேசிய திரைப்பட வளர்ச்சி கழகம் ஏற்பாடு செய்துள்ள பயிற்சியில் பங்கு பெற, 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 16 முதல் 40 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் பங்குபெறுவோருக்கு விடுதி வசதி மற்றும் பயிற்சி உதவித் தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

விருப்பமுள்ளவர்கள் ரேஷன் கார்டு நகல், கல்விச் சான்று நகல் மற்றும் மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை நகல், மொபைல்போன் எண் இணைத்து, கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் பிப்.,2ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இத்தகவலை விழுப்புரம் கலெக்டர் சம்பத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment