FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Thursday, January 29, 2015

மாற்றுத் திறனாளிகளுக்கு பல்லூடக பயிற்சி முகாம்

29.01.2015, விழுப்புரம்: 
விழுப்புரத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு பல்லூடக பயிற்சி மற்றும் இலக்க புகைப்பட பயிற்சி அளிக்கப் படுகிறது. விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் 2014-15ம் ஆண்டிற்கான ஒரு மாத பல்லூடக பயிற்சி மற்றும் இலக்க புகைப்பட பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதன்படி, கை- கால் பாதிக்கப்பட்ட மற்றும் செவித்திறன் குறையுடைய 200 மாற்றுத்திறனாளிகளுக்கு, பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

சென்னையில் உள்ள தேசிய திரைப்பட வளர்ச்சி கழகம் ஏற்பாடு செய்துள்ள பயிற்சியில் பங்கு பெற, 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 16 முதல் 40 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் பங்குபெறுவோருக்கு விடுதி வசதி மற்றும் பயிற்சி உதவித் தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

விருப்பமுள்ளவர்கள் ரேஷன் கார்டு நகல், கல்விச் சான்று நகல் மற்றும் மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை நகல், மொபைல்போன் எண் இணைத்து, கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் பிப்.,2ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இத்தகவலை விழுப்புரம் கலெக்டர் சம்பத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment