FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Friday, May 31, 2013

இயற்கை மரணம்


தமிழக அரசின் திட்டம் – மாற்றுத் திறனாளிகளுக்கான சமூக பாதுகாப்பு திட்டங்கள்::::


திட்டத்தின் சுருக்கம்:

மாற்றுத் திறனாளிகளுக்கு இயற்கை மரணம் நேரிட்டால் அவர்களின் வாரிசுதாரர்களுக்கு ரூ.15,000/- வழங்கப்படும்.

திட்டத்தில் பயனடைய தகுதிகள்/நிபந்தனைகள்:

மாற்றுத் திறனாளிகள் நல வாரிய அடையாள அட்டை வைத்திருக்கும் மாற்றுத் திறனாளிகள்

தனிப்பட்ட விண்ணப்பப் படிவம் உள்ளதா?

ஆம். சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலரிடம் தனிப்பட்ட படிவம் உள்ளது.

இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள்:

இறப்புச் சான்றிதழ், வாரிசுதாரர் சான்றிதழ் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான   நல வாரிய  அடையாள அட்டை

தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்:

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலர்

உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர்:

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர்
எண்.15/1, மாதிரிப் பள்ளிச் சாலை, ஆயிரம் விளக்கு,
சென்னை-600 006.
தொலைபேசி எண்.044- 28290286 / 2829 0392/2829 0409

FINANCIAL ASSISTANCE ON THE NATURAL DEATH OF A DIFFERENTLY ABLED PERSON:


1. Gist of the Scheme A sum of Rs.15,000/- is given as assistance on the Natural Death of a Differently Abled person.
2. Eligibility Criteria Any Differently Abled person holding Identity card issued by the Welfare Board for the Differently Abled.
3. Whether form of application is prescribed Yes. Available with District Differently Abled Welfare Office.
4. Certificates to be furnished Death Certificate, Legal Heir Certificate and Identity card issued by the Welfare Board for the Differently Abled.
5. Officer to whom the application is to be submitted District Differently Abled Welfare Officer
6. Grievances if any to be addressed to State Commissioner for the Differently Abled, No.15/1, Model School Road, Thousand Lights, Chennai-600 006. Phone No. 28290409

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பள்ளி இல்லாததால்... சிக்கல் மாவட்டத்தில் காதுகேளாதோர், வாய் பேசாதோர் அவதி


மார்ச் 23,2013
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் காது கேளாதோர், வாய் பேசாதோருக்கான சிறப்பு பள்ளி இல்லாததால், மாற்றுத்திறனாளிகள் பேச்சு பயிற்சி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், இப்பயிற்சிக்காக மதுரை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு செல்வதால், பெற்றோருக்கு மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் செயல்பட்டு வருகிறது. புதன்தோறும் நடைபெறும் சிறப்பு முகாமில், டாக்டர்களால் ஊனத்தின் தன்மை கண்டறியப்பட்டு, தேசிய அடையாள அட்டை வழங்கப்படுகிறது. தவிர, கை கால் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள், காதொலி கருவி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகின்றன. கை, கால் குறைபாடு உடையவர்கள் பயிற்சி பெறும் வகையில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் "பிசியோதெரபிஸ்ட்' கூடம் உள்ளது. இதற்கான பயிற்சியாளர் இல்லாததால் முடங்கியுள்ளது. இதேபோல், ஆர்த்தோ டெக்னீசியன் (முடநீக்கு வல்லுணர்), பேச்சு பயிற்சியாளர் ( ஸ்பீச் தெரபிஸ்ட்) இல்லை. இதனால், மாற்றுத்திறனாளிகள் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மனவளர்ச்சி குன்றியவர்கள், சுயமாக தொழில் செய்து சம்பாதிக்கும் வகையில், அவர்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம், தேவிபட்டினத்தில் தொழிற் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 14 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மட்டுமே, பயிற்சி பெற்று வருகின்றனர். ஊதுபத்தி தயாரிப்பு, பேப்பர் கவர் தயாரிப்பு, சிப்பி மாலை தயாரித்தல், கூடை பின்னுதல், பினாயில் தயாரிப்பு உள்ளிட்ட கைத்தொழில் கற்றுத்தரப்படுகிறது. போதிய பயிற்சியாளர்கள் இல்லாததால் தொழில் கற்றுக் கொள்வதிலும் சிரமம் உள்ளது.மாவட்டத்தில், காதுகேளாதோர் மற்றும் வாய் பேசாதோருக்கான சிறப்பு பள்ளி இல்லை. இதனால், மாற்றுத்திறனாளிகள் பலர், டாக்டரின் ஆலோசனைப்படி மதுரை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் செயல்படும், சிறப்பு பள்ளிகளில் பயிற்சி பெறுகின்றனர். இதேபோன்று, பார்வையற்றோர் பள்ளியும் இங்கு இல்லை. இதனால், இவர்கள், பெற்றோருக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது. ராமநாதபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ராமகிருஷ்ணன் கூறியதாவது: முடநீக்கு வல்லுனர், பிசியோதெரபிஸ்ட், பேச்சு பயிற்சியாளர் உள்ளிட்ட முக்கிய பணியிடங்கள் நீண்ட நாட்களாக காலியாக உள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து, துறை இயக்குனர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது, என்றார்.காதுகேளாதோர், வாய் பேச இயலாதோருக்கு சிறப்பு பள்ளி அமைக்க எம்.எல்.ஏ.,க்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

மாற்றுத்திறனாளிகள் லைசென்ஸ் வாங்க என்ன செய்ய வேண்டும்




மாற்றுத்திறனாளிகள் வாகனம் ஓட்ட லைசென்ஸ் வாங்க முடியுமா? என்ற சந்தேகம் பலருக்கு எழுகிறது. இதுபற்றி வட்டார போக்குவரத்து அலுவலக  அதிகாரிகள் அளித்த விளக்கம் இங்கே... மாற்றுத்திறனாளி முதலில் அரசு மருத்துவரிடம் மாற்றுத்திறனாளிக்கான உறுதி சான்றிதழ் பெற வேண்டும்.  சான்றிதழில், அவர் எத்தனை சதவீதம் குறைபாடுகள் கொண்டவர் என்பது கட்டாயம் இருக்கவேண்டும்.?
மாற்றுத்திறனாளி முதலில் அரசு மருத்துவரிடம் மாற்றுத்திறனாளிக்கான உறுதி சான்றிதழ் பெற வேண்டும். சான்றிதழில், அவர் எத்தனை சதவீதம்  குறைபாடுகள் கொண்டவர் என்பது கட்டாயம் இருக்கவேண்டும். நாற்பது சதவீதத்துக்கும் கீழ் மாற்று திறனாளியாக இருப்பவருக்கும் ஓட்டுனர் உரிமம்  வழங்குவதில் சில விதிகள் உண்டு.
முதலில் அவர் வாகனத்தை போக்குவரத்து துறை அதிகாரிகள் முன்பு ஓட்டிக்காட்ட வேண்டும். சிக்னல் அல்லது வாகனத்தை நிறுத்த வேண்டி  வந்தால், அவரால் கால் ஊன்றி பேலன்ஸ் செய்து நிற்க முடிகிறதா? வாகனத்தின் எடையை அவரால் தாங்கிக்கொள்ள முடிகிறதா?  என்பதற்காகத்தான் இந்த டெஸ்ட்டுகள். இந்த டெஸ்ட்டுகளில் பாஸ் ஆன பின்புதான் பழகுனர் உரிமம் வழங்கப்படும். இந்த விதிமுறைகள் நான்கு  சக்கர வாகனங்களுக்கும் பொருந்தும்.
நாற்பது சதவீதத்துக்கு மேல் குறைபாடுகள் உள்ள மாற்றுதிறனாளிகள், இரண்டு சக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனம் ஓட்ட விரும்பினால்,  அராய் (ஏ.ஆர்.ஏ.ஐ) அனுமதி வாங்கிய நிறுவனங்களில், அவர்கள் சுலபமாக வாகனம் ஓட்டுவதற்கு ஏற்றதுபோல எளிமையாக மாற்றங்கள் செய்து  கொண்டுவர வேண்டும். அப்படி மாற்றி அமைத்த வாகனங்களில் கூடுதலாக ஏதாவது பாகம் அவர்கள் வசதிக்காக சேர்த்து இருக்கலாமே தவிர,  வாகனத்தில் உள்ள எந்த பாகத்தையும் நீக்கி இருக்கக்கூடாது.
இரண்டு சக்கர வாகனங்களை அராய் அனுமதி அல்லாமல், வேறு எங்காவது மெக்கானிக் செட்டில் மாற்றி அமைத்து வந்தால், கண்டிப்பாக  அவர்களுக்கு லைசென்ஸ் வழங்கப்பட மாட்டாது. அராய் அனுமதி வாங்கிய எந்த நிறுவனம் வாகனத்தை மாற்றி அமைத்ததோ அந்த நிறுவனத்திடம்  சான்றிதழ் பெற்று வருவது அவசியம். வாகனம் வாங்கும்போதே மாற்றுத்திறனாளியின் பெயரில்தான் வாங்கி இருக்க வேண்டும். லைசென்ஸ்  கொடுக்கும்போது வாகனத்தின் எண் குறிப்பிட்டுத்தான் லைசென்ஸ் வழங்கப்படும்.
அந்த வாகனத்தை தவிர, வேறு வாகனத்தை அவர்கள் ஓட்டக்கூடாது. மாற்றுத்திறனாளியின் கை, கால்களில் எந்த குறைபாடுகளும் இல்லாமல், காது  மட்டும் கேட்காமல் இருந்தாலும் லைசென்ஸ் வழங்கப்பட மாட்டாது. ஆனால், கருவி பொருத்தினால் கேட்கும் திறன் இருக்கும் என்றால்,  அவர்களுக்கும் சில சோதனைகள் செய்தபின்பு லைசென்ஸ் வழங்கப்படும். லைசென்ஸில் இவர்கள் காது கேட்கும் கருவி பொருத்தியவர் என்பதும்  குறிப்பிடப்படும்.

Thursday, May 30, 2013

காதுகேளாதோர் நீச்சலில் 5 தங்கம் வென்ற சென்னை வீராங்கனை சினேகாவுக்கு பாராட்டு


சென்னை, ஏப். 13-
தேசிய காதுகேளாதோர் நீச்சல் போட்டி அவுரங்கா பாத்தில் நடந்தது. இதில் பங்கேற்ற சென்னை வீராங்கனை ஆர்.சினேகா 50 மீட்டர் பட்டர்பிளை, 100 மீட்டர் பேக்ஸ்டிரோக், 100 மீட்டர் பிரீஸ்டைல், 200 மீட்டர் தனிநபர் மெட்லே ஆகிய 5 பந்தயங்களில் தங்கப்பதக்கம் வென்றார்.


15 வயதான சினேகா மயிலாப்பூரில் உள்ள சிவசாமி கலாலயா பள்ளியில் படித்து வருகிறார். சேப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கிளப் வளாகத்தில் செயல்பட்டு வரும் டர்ட்டிள் நீச்சல் பள்ளியில் பயிற்சியாளர் கிரீஷ்சிடம் பயிற்சி பெற்று வருகிறார். 5 தங்கப்பதக்கம் வென்ற சினேகாவுக்கு, டர்ட்டிள் நீச்சல் பள்ளி சார்பில் சென்னையில் பாராட்டு விழா நடந்தது.

Tuesday, May 21, 2013

மத்திய மாநில அரசுகளும் வங்கிகளும் பயனுள்ள பல கடன் திட்டங்களை வழங்குகின்றன. ஆவை என்னென்ன? எப்படிப் பெறுவது? தொடர்பு முகவரி?


தேசிய மாற்றுத்திறனாளிகள் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (NHFDC) National Handicapped Finance and Development Corporation) வழங்கும் கடன் உதவி:-

1)  மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் தொடங்க தேசிய மாற்றுத்திறனாளிகள் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் பலவித சலுகைக் கடன்களை வழங்குகிறது.
2)   விற்பனை, வியாபார நடவடிக்கைகளுக்கு 3 லட்சம் ரூபாய் வரையும், சேவைப்பிரிவுக்கு 5 லட்சம் ரூபாய் வரையும் கடன் பெறலாம். தொழில் செய்ய ஆட்டோ ரிக்சா, வேன் போன்ற வாகனங்கள் வாங்க, விவசாயப் பணிகளுக்கு 10 லட்சம் ரூபாய் வரை கடன் கிடைக்கும். பொருட்கள் உற்பத்தி, தயாரிப்புக்காக சிறு தொழிற்கூடங்கள் அமைக்க 25 லட்சம் ரூபாய் கடன் உதவி.
3)   மன்நலம் பாதிக்கப்பட்டவர்கள், செரிபிரல்கஃபேல்சி மற்றும் ஆட்டிசம் பாதிப்புக்கு ஆளானவர்கள் சுயதொழில் தொடங்க அவர்களின் வாழ்க்கைத்துணை, பெற்றோர் 5 லட்சம் ரூபாய் கடன் பெறலாம்.
4)   இந்தியாவில் படிக்க ரூ.7.50 லட்சம், வெளிநாடுகளில் படிக்க ரூ.15 லட்சம் வரை கல்விக்கடன்  கிடைக்கும்.
5)   நுண் கடன் திட்ட்த்தின் கீழ் (Micro Credit Scheme) தொண்டு நிறுவனங்களுக்கு ரூ.15 லட்சம், பயனாளர்களுக்கு ரூ.25 ஆயிரம் ரூபாய் வரை கடன் தரப்படும்.

நிபந்தனைகள்:
1)   இந்தியக் குடிமகனாக இருக்கவேண்டும். 40% அல்லது அதற்கு மேற்பட்ட அளவில் திறன் பாதிப்பு.
2)   18லிருந்து 60 வயதுக்கு உட்பட்டவராக இருக்கவேண்டும்.
3)   நகர் பகுதியில் வசிப்பவராக் இருந்தால் ரூ.5 லட்சத்துக்குக் குறைவாகவும், கிராமப் பகுதியில் வசிப்பவராக ரூ.3 லட்சத்துக்குக் குறைவாகவும் ஆண்டு வருமானம் இருக்கவேண்டும்.
4)   தொடர்புடைய கல்வி, தொழில்நுட்பச் சான்றிதழ்களை வைத்திருக்கவேண்டும். தேவையான் அனுபவமும் பெற்றிருக்கவேண்டும்.

வட்டி விகிதம்:
5)   50 ஆயிரம் ரூபாய் வரையிலான கடன் தொகைக்கு ஆண்டுக்கு 5%. 50 ஆயிரத்துக்கு மேல் 5 லட்சம் ரூபாய் வரை ஆண்டுக்கு 6%. 5 லட்சத்துக்கு மேல் ஆண்டுக்கு 8%.

திருப்பிச்செலுத்தும் காலம்:
6)   பொதுக் கடன்களை 10 ஆண்டுகளுக்குள் செலுத்தவேண்டும்.
7)   கல்விக் கடன்களை 7 ஆண்டுகளுக்குள் செலுத்தவேண்டும். (படிப்பு முடித்த 6 மாதங்கள் அல்லது வேலை கிடைத்த பிறகு எது முன்னதாகவோ அதிலிருந்து தவணை).

கடன் தள்ளுபடி:
1)   தேசிய மாற்றுத்திறனாளிகள் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் வழங்கும் கடன் திட்டங்களில் பெண்களுக்கு வட்டியில் 1 சதவிகிதமும், சில திட்டங்களுக்கு 0.5 சதவிகிதமும் சிறப்புத் தள்ளுபடி உண்டு.

எப்படி விண்ணப்பிப்பது?
1)   தேசிய மாற்றுத்திறனாளிகள் பொருளாதார மேம்பாட்டுக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநில முகவர்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். தமிழக முகவரி: தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி லிமிடெட் (TNSC Bank), 233, நேதாஷி சுபாஷ் சந்திரபோஷ் சாலை, சென்னை-600001. போன்: 044-25302300
2)   மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திலும் விண்ணப்பங்கள் பெறலாம்.


3)   கடன் உதவி பெற கால தாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய: முதன்மைச் செயலாளர்/ மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர், மாநில வள மற்றும் பயிற்சி மைய வளாகம், ஜவஹர்லால் நேரு உள்வட்ட சாலை, கே.கே.நகர், சென்னை-600078. போன்: 044-24719948, 044-24719949