FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Tuesday, May 21, 2013

மத்திய மாநில அரசுகளும் வங்கிகளும் பயனுள்ள பல கடன் திட்டங்களை வழங்குகின்றன. ஆவை என்னென்ன? எப்படிப் பெறுவது? தொடர்பு முகவரி?


தேசிய மாற்றுத்திறனாளிகள் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (NHFDC) National Handicapped Finance and Development Corporation) வழங்கும் கடன் உதவி:-

1)  மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் தொடங்க தேசிய மாற்றுத்திறனாளிகள் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் பலவித சலுகைக் கடன்களை வழங்குகிறது.
2)   விற்பனை, வியாபார நடவடிக்கைகளுக்கு 3 லட்சம் ரூபாய் வரையும், சேவைப்பிரிவுக்கு 5 லட்சம் ரூபாய் வரையும் கடன் பெறலாம். தொழில் செய்ய ஆட்டோ ரிக்சா, வேன் போன்ற வாகனங்கள் வாங்க, விவசாயப் பணிகளுக்கு 10 லட்சம் ரூபாய் வரை கடன் கிடைக்கும். பொருட்கள் உற்பத்தி, தயாரிப்புக்காக சிறு தொழிற்கூடங்கள் அமைக்க 25 லட்சம் ரூபாய் கடன் உதவி.
3)   மன்நலம் பாதிக்கப்பட்டவர்கள், செரிபிரல்கஃபேல்சி மற்றும் ஆட்டிசம் பாதிப்புக்கு ஆளானவர்கள் சுயதொழில் தொடங்க அவர்களின் வாழ்க்கைத்துணை, பெற்றோர் 5 லட்சம் ரூபாய் கடன் பெறலாம்.
4)   இந்தியாவில் படிக்க ரூ.7.50 லட்சம், வெளிநாடுகளில் படிக்க ரூ.15 லட்சம் வரை கல்விக்கடன்  கிடைக்கும்.
5)   நுண் கடன் திட்ட்த்தின் கீழ் (Micro Credit Scheme) தொண்டு நிறுவனங்களுக்கு ரூ.15 லட்சம், பயனாளர்களுக்கு ரூ.25 ஆயிரம் ரூபாய் வரை கடன் தரப்படும்.

நிபந்தனைகள்:
1)   இந்தியக் குடிமகனாக இருக்கவேண்டும். 40% அல்லது அதற்கு மேற்பட்ட அளவில் திறன் பாதிப்பு.
2)   18லிருந்து 60 வயதுக்கு உட்பட்டவராக இருக்கவேண்டும்.
3)   நகர் பகுதியில் வசிப்பவராக் இருந்தால் ரூ.5 லட்சத்துக்குக் குறைவாகவும், கிராமப் பகுதியில் வசிப்பவராக ரூ.3 லட்சத்துக்குக் குறைவாகவும் ஆண்டு வருமானம் இருக்கவேண்டும்.
4)   தொடர்புடைய கல்வி, தொழில்நுட்பச் சான்றிதழ்களை வைத்திருக்கவேண்டும். தேவையான் அனுபவமும் பெற்றிருக்கவேண்டும்.

வட்டி விகிதம்:
5)   50 ஆயிரம் ரூபாய் வரையிலான கடன் தொகைக்கு ஆண்டுக்கு 5%. 50 ஆயிரத்துக்கு மேல் 5 லட்சம் ரூபாய் வரை ஆண்டுக்கு 6%. 5 லட்சத்துக்கு மேல் ஆண்டுக்கு 8%.

திருப்பிச்செலுத்தும் காலம்:
6)   பொதுக் கடன்களை 10 ஆண்டுகளுக்குள் செலுத்தவேண்டும்.
7)   கல்விக் கடன்களை 7 ஆண்டுகளுக்குள் செலுத்தவேண்டும். (படிப்பு முடித்த 6 மாதங்கள் அல்லது வேலை கிடைத்த பிறகு எது முன்னதாகவோ அதிலிருந்து தவணை).

கடன் தள்ளுபடி:
1)   தேசிய மாற்றுத்திறனாளிகள் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் வழங்கும் கடன் திட்டங்களில் பெண்களுக்கு வட்டியில் 1 சதவிகிதமும், சில திட்டங்களுக்கு 0.5 சதவிகிதமும் சிறப்புத் தள்ளுபடி உண்டு.

எப்படி விண்ணப்பிப்பது?
1)   தேசிய மாற்றுத்திறனாளிகள் பொருளாதார மேம்பாட்டுக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநில முகவர்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். தமிழக முகவரி: தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி லிமிடெட் (TNSC Bank), 233, நேதாஷி சுபாஷ் சந்திரபோஷ் சாலை, சென்னை-600001. போன்: 044-25302300
2)   மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திலும் விண்ணப்பங்கள் பெறலாம்.


3)   கடன் உதவி பெற கால தாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய: முதன்மைச் செயலாளர்/ மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர், மாநில வள மற்றும் பயிற்சி மைய வளாகம், ஜவஹர்லால் நேரு உள்வட்ட சாலை, கே.கே.நகர், சென்னை-600078. போன்: 044-24719948, 044-24719949

No comments:

Post a Comment