FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Friday, May 31, 2013

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பள்ளி இல்லாததால்... சிக்கல் மாவட்டத்தில் காதுகேளாதோர், வாய் பேசாதோர் அவதி


மார்ச் 23,2013
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் காது கேளாதோர், வாய் பேசாதோருக்கான சிறப்பு பள்ளி இல்லாததால், மாற்றுத்திறனாளிகள் பேச்சு பயிற்சி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், இப்பயிற்சிக்காக மதுரை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு செல்வதால், பெற்றோருக்கு மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் செயல்பட்டு வருகிறது. புதன்தோறும் நடைபெறும் சிறப்பு முகாமில், டாக்டர்களால் ஊனத்தின் தன்மை கண்டறியப்பட்டு, தேசிய அடையாள அட்டை வழங்கப்படுகிறது. தவிர, கை கால் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள், காதொலி கருவி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகின்றன. கை, கால் குறைபாடு உடையவர்கள் பயிற்சி பெறும் வகையில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் "பிசியோதெரபிஸ்ட்' கூடம் உள்ளது. இதற்கான பயிற்சியாளர் இல்லாததால் முடங்கியுள்ளது. இதேபோல், ஆர்த்தோ டெக்னீசியன் (முடநீக்கு வல்லுணர்), பேச்சு பயிற்சியாளர் ( ஸ்பீச் தெரபிஸ்ட்) இல்லை. இதனால், மாற்றுத்திறனாளிகள் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மனவளர்ச்சி குன்றியவர்கள், சுயமாக தொழில் செய்து சம்பாதிக்கும் வகையில், அவர்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம், தேவிபட்டினத்தில் தொழிற் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 14 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மட்டுமே, பயிற்சி பெற்று வருகின்றனர். ஊதுபத்தி தயாரிப்பு, பேப்பர் கவர் தயாரிப்பு, சிப்பி மாலை தயாரித்தல், கூடை பின்னுதல், பினாயில் தயாரிப்பு உள்ளிட்ட கைத்தொழில் கற்றுத்தரப்படுகிறது. போதிய பயிற்சியாளர்கள் இல்லாததால் தொழில் கற்றுக் கொள்வதிலும் சிரமம் உள்ளது.மாவட்டத்தில், காதுகேளாதோர் மற்றும் வாய் பேசாதோருக்கான சிறப்பு பள்ளி இல்லை. இதனால், மாற்றுத்திறனாளிகள் பலர், டாக்டரின் ஆலோசனைப்படி மதுரை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் செயல்படும், சிறப்பு பள்ளிகளில் பயிற்சி பெறுகின்றனர். இதேபோன்று, பார்வையற்றோர் பள்ளியும் இங்கு இல்லை. இதனால், இவர்கள், பெற்றோருக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது. ராமநாதபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ராமகிருஷ்ணன் கூறியதாவது: முடநீக்கு வல்லுனர், பிசியோதெரபிஸ்ட், பேச்சு பயிற்சியாளர் உள்ளிட்ட முக்கிய பணியிடங்கள் நீண்ட நாட்களாக காலியாக உள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து, துறை இயக்குனர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது, என்றார்.காதுகேளாதோர், வாய் பேச இயலாதோருக்கு சிறப்பு பள்ளி அமைக்க எம்.எல்.ஏ.,க்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

No comments:

Post a Comment