FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Friday, May 31, 2013

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பள்ளி இல்லாததால்... சிக்கல் மாவட்டத்தில் காதுகேளாதோர், வாய் பேசாதோர் அவதி


மார்ச் 23,2013
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் காது கேளாதோர், வாய் பேசாதோருக்கான சிறப்பு பள்ளி இல்லாததால், மாற்றுத்திறனாளிகள் பேச்சு பயிற்சி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், இப்பயிற்சிக்காக மதுரை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு செல்வதால், பெற்றோருக்கு மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் செயல்பட்டு வருகிறது. புதன்தோறும் நடைபெறும் சிறப்பு முகாமில், டாக்டர்களால் ஊனத்தின் தன்மை கண்டறியப்பட்டு, தேசிய அடையாள அட்டை வழங்கப்படுகிறது. தவிர, கை கால் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள், காதொலி கருவி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகின்றன. கை, கால் குறைபாடு உடையவர்கள் பயிற்சி பெறும் வகையில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் "பிசியோதெரபிஸ்ட்' கூடம் உள்ளது. இதற்கான பயிற்சியாளர் இல்லாததால் முடங்கியுள்ளது. இதேபோல், ஆர்த்தோ டெக்னீசியன் (முடநீக்கு வல்லுணர்), பேச்சு பயிற்சியாளர் ( ஸ்பீச் தெரபிஸ்ட்) இல்லை. இதனால், மாற்றுத்திறனாளிகள் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மனவளர்ச்சி குன்றியவர்கள், சுயமாக தொழில் செய்து சம்பாதிக்கும் வகையில், அவர்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம், தேவிபட்டினத்தில் தொழிற் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 14 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மட்டுமே, பயிற்சி பெற்று வருகின்றனர். ஊதுபத்தி தயாரிப்பு, பேப்பர் கவர் தயாரிப்பு, சிப்பி மாலை தயாரித்தல், கூடை பின்னுதல், பினாயில் தயாரிப்பு உள்ளிட்ட கைத்தொழில் கற்றுத்தரப்படுகிறது. போதிய பயிற்சியாளர்கள் இல்லாததால் தொழில் கற்றுக் கொள்வதிலும் சிரமம் உள்ளது.மாவட்டத்தில், காதுகேளாதோர் மற்றும் வாய் பேசாதோருக்கான சிறப்பு பள்ளி இல்லை. இதனால், மாற்றுத்திறனாளிகள் பலர், டாக்டரின் ஆலோசனைப்படி மதுரை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் செயல்படும், சிறப்பு பள்ளிகளில் பயிற்சி பெறுகின்றனர். இதேபோன்று, பார்வையற்றோர் பள்ளியும் இங்கு இல்லை. இதனால், இவர்கள், பெற்றோருக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது. ராமநாதபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ராமகிருஷ்ணன் கூறியதாவது: முடநீக்கு வல்லுனர், பிசியோதெரபிஸ்ட், பேச்சு பயிற்சியாளர் உள்ளிட்ட முக்கிய பணியிடங்கள் நீண்ட நாட்களாக காலியாக உள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து, துறை இயக்குனர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது, என்றார்.காதுகேளாதோர், வாய் பேச இயலாதோருக்கு சிறப்பு பள்ளி அமைக்க எம்.எல்.ஏ.,க்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

No comments:

Post a Comment