FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Friday, May 31, 2013

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பள்ளி இல்லாததால்... சிக்கல் மாவட்டத்தில் காதுகேளாதோர், வாய் பேசாதோர் அவதி


மார்ச் 23,2013
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் காது கேளாதோர், வாய் பேசாதோருக்கான சிறப்பு பள்ளி இல்லாததால், மாற்றுத்திறனாளிகள் பேச்சு பயிற்சி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், இப்பயிற்சிக்காக மதுரை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு செல்வதால், பெற்றோருக்கு மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் செயல்பட்டு வருகிறது. புதன்தோறும் நடைபெறும் சிறப்பு முகாமில், டாக்டர்களால் ஊனத்தின் தன்மை கண்டறியப்பட்டு, தேசிய அடையாள அட்டை வழங்கப்படுகிறது. தவிர, கை கால் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள், காதொலி கருவி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகின்றன. கை, கால் குறைபாடு உடையவர்கள் பயிற்சி பெறும் வகையில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் "பிசியோதெரபிஸ்ட்' கூடம் உள்ளது. இதற்கான பயிற்சியாளர் இல்லாததால் முடங்கியுள்ளது. இதேபோல், ஆர்த்தோ டெக்னீசியன் (முடநீக்கு வல்லுணர்), பேச்சு பயிற்சியாளர் ( ஸ்பீச் தெரபிஸ்ட்) இல்லை. இதனால், மாற்றுத்திறனாளிகள் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மனவளர்ச்சி குன்றியவர்கள், சுயமாக தொழில் செய்து சம்பாதிக்கும் வகையில், அவர்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம், தேவிபட்டினத்தில் தொழிற் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 14 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மட்டுமே, பயிற்சி பெற்று வருகின்றனர். ஊதுபத்தி தயாரிப்பு, பேப்பர் கவர் தயாரிப்பு, சிப்பி மாலை தயாரித்தல், கூடை பின்னுதல், பினாயில் தயாரிப்பு உள்ளிட்ட கைத்தொழில் கற்றுத்தரப்படுகிறது. போதிய பயிற்சியாளர்கள் இல்லாததால் தொழில் கற்றுக் கொள்வதிலும் சிரமம் உள்ளது.மாவட்டத்தில், காதுகேளாதோர் மற்றும் வாய் பேசாதோருக்கான சிறப்பு பள்ளி இல்லை. இதனால், மாற்றுத்திறனாளிகள் பலர், டாக்டரின் ஆலோசனைப்படி மதுரை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் செயல்படும், சிறப்பு பள்ளிகளில் பயிற்சி பெறுகின்றனர். இதேபோன்று, பார்வையற்றோர் பள்ளியும் இங்கு இல்லை. இதனால், இவர்கள், பெற்றோருக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது. ராமநாதபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ராமகிருஷ்ணன் கூறியதாவது: முடநீக்கு வல்லுனர், பிசியோதெரபிஸ்ட், பேச்சு பயிற்சியாளர் உள்ளிட்ட முக்கிய பணியிடங்கள் நீண்ட நாட்களாக காலியாக உள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து, துறை இயக்குனர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது, என்றார்.காதுகேளாதோர், வாய் பேச இயலாதோருக்கு சிறப்பு பள்ளி அமைக்க எம்.எல்.ஏ.,க்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

No comments:

Post a Comment