FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Sunday, June 8, 2014

உணவுப் பொருள்களை தயாரிக்க சிறப்புப் பயிற்சி

சென்னை, 08 June 2014
சென்னை கிண்டியில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி நிலையத்தில் ஜூன் 9-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை உணவுப் பொருள்களையும் சிறு ரசாயனப் பொருள்களையும் தயாரிப்பதற்கான சிறப்புப் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக அந்நிலையத்தின் கூடுதல் ஆலோசகர் எஸ்.சிவஞானம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

உணவுப் பொருள் தாயரிப்பு பயிற்சி ஜூன் 9-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறும். பயிற்சியில் துரித உணவுப் பொருள்கள், ஊறுகாய், மசாலா பொருள்கள், பதப்படுத்தப்பட்ட பழம் மற்றும் காய்கறிகள் உள்ளிட்டவற்றை தயார் செய்யும் செய்யும் முறைகள் மற்றும் தரக்கட்டுப்பாடு பற்றிய விவரங்கள் அளிக்கப்படுகின்றன.

இதேபோல், மதியம் 2 மணி முதல் 5.30 மணி வரை கிளீனிங் பவுடர், சோப்பு ஆயில், மெழுவர்த்தி, கற்பூரம், சொட்டு நீலம் உள்ளிட்ட பொருள்களைத் தயார் செய்யும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த இரண்டு பயிற்சிகளுக்கும் கட்டணம் ரூ. 3000.

மேலும், இப்பயிற்சியில் தொழில் தொடங்குவதற்கான ஆலோசனைகள், திட்ட அறிக்கை தயார் செய்யும் முறைகள், வங்கி கடன் பற்றிய விவரங்கள், விற்பனை வாய்ப்புகள் பற்றிய விவரங்கள் ஆகியவையும் அளிக்கப்படும்.

பயிற்சியில், 18 வயது நிரம்பிய ஆண்கள் மற்றும் பெண்கள் சேரலாம். எஸ்.சி,எஸ்.டி பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு பயிற்சி கட்டணத்தில் 50 சதவீத சலுகை உண்டு. பயிற்சியின் இறுதியில் அரசு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 99403 18891, 97907 54446 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment