FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Sunday, June 8, 2014

உணவுப் பொருள்களை தயாரிக்க சிறப்புப் பயிற்சி

சென்னை, 08 June 2014
சென்னை கிண்டியில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி நிலையத்தில் ஜூன் 9-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை உணவுப் பொருள்களையும் சிறு ரசாயனப் பொருள்களையும் தயாரிப்பதற்கான சிறப்புப் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக அந்நிலையத்தின் கூடுதல் ஆலோசகர் எஸ்.சிவஞானம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

உணவுப் பொருள் தாயரிப்பு பயிற்சி ஜூன் 9-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறும். பயிற்சியில் துரித உணவுப் பொருள்கள், ஊறுகாய், மசாலா பொருள்கள், பதப்படுத்தப்பட்ட பழம் மற்றும் காய்கறிகள் உள்ளிட்டவற்றை தயார் செய்யும் செய்யும் முறைகள் மற்றும் தரக்கட்டுப்பாடு பற்றிய விவரங்கள் அளிக்கப்படுகின்றன.

இதேபோல், மதியம் 2 மணி முதல் 5.30 மணி வரை கிளீனிங் பவுடர், சோப்பு ஆயில், மெழுவர்த்தி, கற்பூரம், சொட்டு நீலம் உள்ளிட்ட பொருள்களைத் தயார் செய்யும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த இரண்டு பயிற்சிகளுக்கும் கட்டணம் ரூ. 3000.

மேலும், இப்பயிற்சியில் தொழில் தொடங்குவதற்கான ஆலோசனைகள், திட்ட அறிக்கை தயார் செய்யும் முறைகள், வங்கி கடன் பற்றிய விவரங்கள், விற்பனை வாய்ப்புகள் பற்றிய விவரங்கள் ஆகியவையும் அளிக்கப்படும்.

பயிற்சியில், 18 வயது நிரம்பிய ஆண்கள் மற்றும் பெண்கள் சேரலாம். எஸ்.சி,எஸ்.டி பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு பயிற்சி கட்டணத்தில் 50 சதவீத சலுகை உண்டு. பயிற்சியின் இறுதியில் அரசு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 99403 18891, 97907 54446 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment