FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Wednesday, June 11, 2014

கோர்ட்டில் காது கேட்காத மற்றும் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண் கதறல்: பார்வையாளர்கள் கண்ணீர்

10.06.2014, பொள்ளாச்சி : குரூர கணவனின் கொடுமைகளை அனுபவித்து வாழ்க்கையை தொலைத்த, மாற்றுத் திறனாளி பெண் ஒருவர், பொள்ளாச்சி கோர்ட்டில் அளித்த விளக்கம், பார்வையாளர்களை கண் கலங்க வைத்தது.
பொள்ளாச்சி மீன்கரை ரோடு கண்ணப்பன் நகரை சேர்ந்தவர் அப்துல் ரகீம். இவரது மகள் சகிலா பானு,35. இவர் காது கேட்காத மற்றும் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவரை அப்துல் ரகீமின் சகோதரி மகன் அன்வர் பாட்சாவுக்கு, எட்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து வைத்தனர். அன்வர் பாட்சா ஊட்டியில் ஆட்டோ ஓட்டுநராக இருந்து வருகிறார். இவர்களுக்கு ஏழு மற்றும் ஐந்து வயதில் இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், குழந்தைகள் பிறந்தவுடன் அன்வர் பாட்சா, சகிலா பானுவை மிருகத்தனமாக அடித்து உதைத்து கொடுமைப்படுத்த துவங்கியுள்ளார். சீதனமாக கொடுக்கப்பட்ட 15 பவுன் தங்க நகையையும் விற்று செலவழித்துள்ளார். சரியாக வீட்டிற்கு வராமலும், குடும்பம் நடத்த பணம் கொடுக்காமலும், வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டும் பல வகைகளில் முறை தவறிய வாழ்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளார்.ஒரு கட்டத்தில் தன் மகள் படும் பாட்டை காண சகிக்காத அப்துல் ரகீம், அவரை தன்னுடன் பொள்ளாச்சிக்கு அழைத்து வந்துவிட்டார்.

இது குறித்து கடந்த ஆண்டு சகிலா பானு சமூகநலத்துறையில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணை பொள்ளாச்சி ஜே.எம்.,1 கேர்ட்டில் நடந்தது. மனைவியை நல்லபடியாக வைத்து பார்த்துக்கொள்ள, அன்வர் பாட்சாவை கோர்ட் அறிவுறுத்தியது. ஆனால் அன்வர் பாட்சா தன் மனைவியுடன் சேர்ந்து வாழ தயாராக இல்லை. இதையடுத்து அவரிடம் ஜீவனாம்சமும், சீதனமாக அளித்த 15 நகையையும் திருப்பி தரக்கேட்டு, சகிலா பானு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வாய்பேச முடியாத சகிலா பானு தரப்பின் கருத்தை கேட்டறிய, கோவை ஆர்.எஸ்.,புரம் காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதோர் பள்ளி ஆசிரியை ஜோஸ்பின் லாரன்ஸ் மேரி உதவிக்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.

நீதிமன்ற விசாரணையின் போது, தான் அனுபவித்த சித்ரவதைகளையும், குழந்தைகளை வளர்க்க படும் சிரமங்களையும் அவர் சைகையில் சொல்ல சொல்ல, அது ஆசிரியையால் மொழி பெயர்த்து சொல்லப்பட்டது. இதை கண்ட பார்வையாளர்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் கண்கலங்கினர்.
இவ்விசாரணைக்கு சகிலா பானுவின் கணவர் அன்வர் பாட்சா நேற்று வரவில்லை. வழக்கின் தீர்ப்பு இன்றைக்கு (10ம் தேதி) ஒத்தி வைக்கப்பட்டது.வயதான பெற்றோர் மற்றும் விவரம் அறியா குழந்தைகளுடன் வாழ்வை எதிர்கொள்ளப்போராடும், மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு தகுந்த நீதி கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

No comments:

Post a Comment