FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Wednesday, June 11, 2014

கோர்ட்டில் காது கேட்காத மற்றும் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண் கதறல்: பார்வையாளர்கள் கண்ணீர்

10.06.2014, பொள்ளாச்சி : குரூர கணவனின் கொடுமைகளை அனுபவித்து வாழ்க்கையை தொலைத்த, மாற்றுத் திறனாளி பெண் ஒருவர், பொள்ளாச்சி கோர்ட்டில் அளித்த விளக்கம், பார்வையாளர்களை கண் கலங்க வைத்தது.
பொள்ளாச்சி மீன்கரை ரோடு கண்ணப்பன் நகரை சேர்ந்தவர் அப்துல் ரகீம். இவரது மகள் சகிலா பானு,35. இவர் காது கேட்காத மற்றும் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவரை அப்துல் ரகீமின் சகோதரி மகன் அன்வர் பாட்சாவுக்கு, எட்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து வைத்தனர். அன்வர் பாட்சா ஊட்டியில் ஆட்டோ ஓட்டுநராக இருந்து வருகிறார். இவர்களுக்கு ஏழு மற்றும் ஐந்து வயதில் இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், குழந்தைகள் பிறந்தவுடன் அன்வர் பாட்சா, சகிலா பானுவை மிருகத்தனமாக அடித்து உதைத்து கொடுமைப்படுத்த துவங்கியுள்ளார். சீதனமாக கொடுக்கப்பட்ட 15 பவுன் தங்க நகையையும் விற்று செலவழித்துள்ளார். சரியாக வீட்டிற்கு வராமலும், குடும்பம் நடத்த பணம் கொடுக்காமலும், வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டும் பல வகைகளில் முறை தவறிய வாழ்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளார்.ஒரு கட்டத்தில் தன் மகள் படும் பாட்டை காண சகிக்காத அப்துல் ரகீம், அவரை தன்னுடன் பொள்ளாச்சிக்கு அழைத்து வந்துவிட்டார்.

இது குறித்து கடந்த ஆண்டு சகிலா பானு சமூகநலத்துறையில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணை பொள்ளாச்சி ஜே.எம்.,1 கேர்ட்டில் நடந்தது. மனைவியை நல்லபடியாக வைத்து பார்த்துக்கொள்ள, அன்வர் பாட்சாவை கோர்ட் அறிவுறுத்தியது. ஆனால் அன்வர் பாட்சா தன் மனைவியுடன் சேர்ந்து வாழ தயாராக இல்லை. இதையடுத்து அவரிடம் ஜீவனாம்சமும், சீதனமாக அளித்த 15 நகையையும் திருப்பி தரக்கேட்டு, சகிலா பானு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வாய்பேச முடியாத சகிலா பானு தரப்பின் கருத்தை கேட்டறிய, கோவை ஆர்.எஸ்.,புரம் காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதோர் பள்ளி ஆசிரியை ஜோஸ்பின் லாரன்ஸ் மேரி உதவிக்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.

நீதிமன்ற விசாரணையின் போது, தான் அனுபவித்த சித்ரவதைகளையும், குழந்தைகளை வளர்க்க படும் சிரமங்களையும் அவர் சைகையில் சொல்ல சொல்ல, அது ஆசிரியையால் மொழி பெயர்த்து சொல்லப்பட்டது. இதை கண்ட பார்வையாளர்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் கண்கலங்கினர்.
இவ்விசாரணைக்கு சகிலா பானுவின் கணவர் அன்வர் பாட்சா நேற்று வரவில்லை. வழக்கின் தீர்ப்பு இன்றைக்கு (10ம் தேதி) ஒத்தி வைக்கப்பட்டது.வயதான பெற்றோர் மற்றும் விவரம் அறியா குழந்தைகளுடன் வாழ்வை எதிர்கொள்ளப்போராடும், மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு தகுந்த நீதி கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

No comments:

Post a Comment