FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Tuesday, June 24, 2014

மனைவிக்காக போராடும் மாற்றுத்திறனாளி கணவர்!

திருநெல்வேலி, 24 June 2014,
திருநெல்வேலி முதன்மை கல்வி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை தனது ஆசிரியை மனைவிக்கு சொந்த மாவட்டத்துக்கு இடமாறுதல் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாற்றுத் திறனாளி கணவர் தர்னாவில் ஈடுபட்டார்.

வள்ளியூர் ஒன்றியம், வடக்கன்குளம் அருகே புதியம்புத்தூர் கிராமத்தை சேர்ந்த செல்லையா மகன் நெல்சன் (53). மாற்றுத்திறனாளி. இவரது மனைவி சு. ஆடலின் ரெஜினாபாய். இவருக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு இடைநிலை ஆசிரியராக கரூர் மாவட்டம், கரூர் வட்டாரம், அரசக்கவுண்டனூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணி நியமனம் கிடைத்தது.பணியில் சேர்ந்து 5 வருடமாகியும், ஆடலின்ரெஜினாபாய்க்கு பணியிட மாறுதல் கிடைக்கவில்லையாம். 3 ஆண்டுக்கு பிறகு பணியிட மாறுதல் அளிக்க வேண்டும் என்ற விதி இருந்தபோதிலும் அவருக்கு கல்வித்துறை அதிகாரிகள் பணியிட மாறுதல் அளிக்கவில்லையாம்.

இதனை அடுத்து அவரது கணவர் நெல்சன், முதல்வர், கல்வித்துறை அமைச்சர், அதிகாரிகளுக்கு தனது மனைவி ஆடலின்ரெஜினாபாய்க்கு சொந்த மாவட்டமான திருநெல்வேலிக்கு பணியிட மாறுதல் வழங்க வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தாராம். எனினும் கல்வித்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனிடையே தனது மனைவிக்கு பணியிட மாறுதல் அளிக்குமாறு வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை திருநெல்வேலி முதன்மை கல்வி அலுவலகத்திற்கு வந்த நெல்சன், அலுவலகம் முன்பு அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டார். மாற்றுத்திறனாளியான தனக்கும், தனது குழந்தைக்கும் ஆதரவாக இருக்கும் வகையில் மனைவிக்கு பணியிட மாறுதல் அளிக்க வேண்டும் என நெல்சன் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

No comments:

Post a Comment