FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Tuesday, June 24, 2014

மனைவிக்காக போராடும் மாற்றுத்திறனாளி கணவர்!

திருநெல்வேலி, 24 June 2014,
திருநெல்வேலி முதன்மை கல்வி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை தனது ஆசிரியை மனைவிக்கு சொந்த மாவட்டத்துக்கு இடமாறுதல் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாற்றுத் திறனாளி கணவர் தர்னாவில் ஈடுபட்டார்.

வள்ளியூர் ஒன்றியம், வடக்கன்குளம் அருகே புதியம்புத்தூர் கிராமத்தை சேர்ந்த செல்லையா மகன் நெல்சன் (53). மாற்றுத்திறனாளி. இவரது மனைவி சு. ஆடலின் ரெஜினாபாய். இவருக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு இடைநிலை ஆசிரியராக கரூர் மாவட்டம், கரூர் வட்டாரம், அரசக்கவுண்டனூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணி நியமனம் கிடைத்தது.பணியில் சேர்ந்து 5 வருடமாகியும், ஆடலின்ரெஜினாபாய்க்கு பணியிட மாறுதல் கிடைக்கவில்லையாம். 3 ஆண்டுக்கு பிறகு பணியிட மாறுதல் அளிக்க வேண்டும் என்ற விதி இருந்தபோதிலும் அவருக்கு கல்வித்துறை அதிகாரிகள் பணியிட மாறுதல் அளிக்கவில்லையாம்.

இதனை அடுத்து அவரது கணவர் நெல்சன், முதல்வர், கல்வித்துறை அமைச்சர், அதிகாரிகளுக்கு தனது மனைவி ஆடலின்ரெஜினாபாய்க்கு சொந்த மாவட்டமான திருநெல்வேலிக்கு பணியிட மாறுதல் வழங்க வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தாராம். எனினும் கல்வித்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனிடையே தனது மனைவிக்கு பணியிட மாறுதல் அளிக்குமாறு வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை திருநெல்வேலி முதன்மை கல்வி அலுவலகத்திற்கு வந்த நெல்சன், அலுவலகம் முன்பு அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டார். மாற்றுத்திறனாளியான தனக்கும், தனது குழந்தைக்கும் ஆதரவாக இருக்கும் வகையில் மனைவிக்கு பணியிட மாறுதல் அளிக்க வேண்டும் என நெல்சன் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

No comments:

Post a Comment