FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Wednesday, December 16, 2020

வாய் பேசமுடியாத காஷ்மீர் சிறுவனுடன் அன்பை பரிமாறிய தமிழக ராணுவ வீரர்


‘நீ பெரிய ஆளானதும் என்னவா ஆகணும்’ எனக் கேட்கிறார் தமிழக ராணுவ வீரர் கமலேஷ் மணி. அதற்கு உங்களைப் போல் ஆக வேண்டும் என பதிலளிக்கிறான் வாய்பேச இயலாத காது கேளாத காஷ்மீர் சிறுவன் கோஹார். இவர்களுக்குள் என்ன உறவு? 2013ஆம் ஆண்டில் ராணுவத்தில் இணைந்த திருப்பத்தூரைச் சேர்ந்த கமலேஷ் மணிக்கு 2019ஆம் ஆண்டு முதல் காஷ்மீரில் பணி.

அங்கு டிராக்டர் ஓட்டுநருடைய ஏழைக் குடும்பத்தில் உள்ள 9 பேரில் 4 பேர் பேச இயலாத மாற்றுத் திறனாளிகள். அதில் ஒருவர்தான் ஓட்டுநரின் மகனான 16 வயது கோஹார் மீர். புன்சிரிப்போடு தமிழக ராணுவ வீரர் கமலேஷ் பகிர்ந்த ஒரு சாக்லேட், கோஹாரின் மனதில் இனம்புரியாத அன்பை விதைத்திருக்கிறது.

வெறும் இனிப்பு பரிமாற்றங்களோடு நின்றுவிடவில்லை இவர்களுக்கு இடையிலான உறவு. கோஹாருடைய பெற்றோரிடம் அனுமதி பெற்று சிறப்பாசியரைக் கொண்ட பள்ளியில் கோஹாரை சேர்த்திருக்கிறார் கமலேஷ்.

நாட்டின் இரு கடைக்கோடிகளைச் சேர்ந்தவர்களை இணைத்திருக்கிறது. இவர்களுக்கு இடையிலான இனம் புரியாத அன்பு. இந்த அன்பு, வார்த்தை விவரிப்புகளுக்கு அப்பாற்பட்டது.


No comments:

Post a Comment