FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Wednesday, December 16, 2020

வாய் பேசமுடியாத காஷ்மீர் சிறுவனுடன் அன்பை பரிமாறிய தமிழக ராணுவ வீரர்


‘நீ பெரிய ஆளானதும் என்னவா ஆகணும்’ எனக் கேட்கிறார் தமிழக ராணுவ வீரர் கமலேஷ் மணி. அதற்கு உங்களைப் போல் ஆக வேண்டும் என பதிலளிக்கிறான் வாய்பேச இயலாத காது கேளாத காஷ்மீர் சிறுவன் கோஹார். இவர்களுக்குள் என்ன உறவு? 2013ஆம் ஆண்டில் ராணுவத்தில் இணைந்த திருப்பத்தூரைச் சேர்ந்த கமலேஷ் மணிக்கு 2019ஆம் ஆண்டு முதல் காஷ்மீரில் பணி.

அங்கு டிராக்டர் ஓட்டுநருடைய ஏழைக் குடும்பத்தில் உள்ள 9 பேரில் 4 பேர் பேச இயலாத மாற்றுத் திறனாளிகள். அதில் ஒருவர்தான் ஓட்டுநரின் மகனான 16 வயது கோஹார் மீர். புன்சிரிப்போடு தமிழக ராணுவ வீரர் கமலேஷ் பகிர்ந்த ஒரு சாக்லேட், கோஹாரின் மனதில் இனம்புரியாத அன்பை விதைத்திருக்கிறது.

வெறும் இனிப்பு பரிமாற்றங்களோடு நின்றுவிடவில்லை இவர்களுக்கு இடையிலான உறவு. கோஹாருடைய பெற்றோரிடம் அனுமதி பெற்று சிறப்பாசியரைக் கொண்ட பள்ளியில் கோஹாரை சேர்த்திருக்கிறார் கமலேஷ்.

நாட்டின் இரு கடைக்கோடிகளைச் சேர்ந்தவர்களை இணைத்திருக்கிறது. இவர்களுக்கு இடையிலான இனம் புரியாத அன்பு. இந்த அன்பு, வார்த்தை விவரிப்புகளுக்கு அப்பாற்பட்டது.


No comments:

Post a Comment