FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Wednesday, December 16, 2020

வாய் பேசமுடியாத காஷ்மீர் சிறுவனுடன் அன்பை பரிமாறிய தமிழக ராணுவ வீரர்


‘நீ பெரிய ஆளானதும் என்னவா ஆகணும்’ எனக் கேட்கிறார் தமிழக ராணுவ வீரர் கமலேஷ் மணி. அதற்கு உங்களைப் போல் ஆக வேண்டும் என பதிலளிக்கிறான் வாய்பேச இயலாத காது கேளாத காஷ்மீர் சிறுவன் கோஹார். இவர்களுக்குள் என்ன உறவு? 2013ஆம் ஆண்டில் ராணுவத்தில் இணைந்த திருப்பத்தூரைச் சேர்ந்த கமலேஷ் மணிக்கு 2019ஆம் ஆண்டு முதல் காஷ்மீரில் பணி.

அங்கு டிராக்டர் ஓட்டுநருடைய ஏழைக் குடும்பத்தில் உள்ள 9 பேரில் 4 பேர் பேச இயலாத மாற்றுத் திறனாளிகள். அதில் ஒருவர்தான் ஓட்டுநரின் மகனான 16 வயது கோஹார் மீர். புன்சிரிப்போடு தமிழக ராணுவ வீரர் கமலேஷ் பகிர்ந்த ஒரு சாக்லேட், கோஹாரின் மனதில் இனம்புரியாத அன்பை விதைத்திருக்கிறது.

வெறும் இனிப்பு பரிமாற்றங்களோடு நின்றுவிடவில்லை இவர்களுக்கு இடையிலான உறவு. கோஹாருடைய பெற்றோரிடம் அனுமதி பெற்று சிறப்பாசியரைக் கொண்ட பள்ளியில் கோஹாரை சேர்த்திருக்கிறார் கமலேஷ்.

நாட்டின் இரு கடைக்கோடிகளைச் சேர்ந்தவர்களை இணைத்திருக்கிறது. இவர்களுக்கு இடையிலான இனம் புரியாத அன்பு. இந்த அன்பு, வார்த்தை விவரிப்புகளுக்கு அப்பாற்பட்டது.


No comments:

Post a Comment