FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Friday, December 4, 2020

தூத்துக்குடி அருகே இன்னும் சில நாளில் திருமணம் செய்ய இருந்த காது கேளாத பெண் ஒருவர் வீட்டிலேயே தூக்குப் போட்டு இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

03.12.2020
தூத்துக்குடியை சேர்ந்தவர் சுடலையாண்டி. கடை வைத்து வியாபாரம் செய்து வரும் இவருக்கு 3 குழந்தைகள். சந்தன செல்வி (25), விஜயலட்சுமி (23) என்ற மகள்களும் இசக்கி தாஸ் (21)

. இதில் இரண்டாவது மகளான விஜயலட்சுமிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இன்னும் சில தினங்களில் திருமணம் நடக்க இருந்தது.

இந்நிலையில் நேற்று அதிகாலை சந்தன செல்வி எழுந்து அடுப்படிக்கு சென்ற போது அங்கு விஜயலட்சுமி புடவையில் தூக்குமாட்டி இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியான சந்தனலெட்சுமி அலறியடித்து வெளியே வந்து அழ ஆரம்பித்துள்ளார். இதையடுத்து அங்கு கூடிய அக்கம்ப்பக்கத்தினர் விஜயலட்சுமியின் உடலை கீழே இறக்கியுள்ளனர். மேலும் போலீஸாருக்கும் தகவல் சொல்லப்பட்டுள்ளது.

இந்த தற்கொலை குறித்து தகவலறிந்த போலிசார் அங்கு வந்து விசாரணை நடத்தினார். தனக்கு காது கேளாத பிரச்சனை இருந்ததால் திருமணம் வேண்டாம் என விஜயலட்சுமி சொல்லி வந்ததாகவும், ஆனால் பெற்றோரும் சகோதர சகோதரியும் அவரை சமாதானப்படுத்தி திருமணத்துக்கு சம்மதிக்க வைத்ததாகவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் திருமணம் நெருங்கிய நிலையில் விஜயலட்சுமி இந்த முடிவை எடுத்தது அனைவரையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.



No comments:

Post a Comment