FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Sunday, December 20, 2020

பாகிஸ்தானில் இருந்து திரும்பி 5 ஆண்டுகளாக பெற்றோரை தேடும் இந்திய இளம்பெண் மராட்டியம் வந்து தேடுகிறார்

18.12.2020 மும்பை,

மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் வசித்து வருபவர் கீதா (வயது 30). இவர், வாய் பேச முடியாத, காது கேளாதவர் ஆவார். 20 ஆண்டுகளுக்கு முன்பு, 10 வயது சிறுமியாக இருந்தபோது, பாகிஸ்தானில் உள்ள லாகூர் ரெயில் நிலையத்தில் சம்ஜதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் தன்னந்தனியாக தவித்துவந்த அவரை, அங்குள்ள ஒரு தொண்டு நிறுவனம் ஒன்று தத்தெடுத்து வளர்த்தது.

இந்தநிலையில் முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜின் முயற்சியால், கடந்த 2015-ம் ஆண்டு அவர் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டார். அவரை இந்தியாவின் மகள் என சுஷ்மா சுவாராஜ் வர்ணித்தார். மேலும் அவரது குடும்பத்தை கண்டுபிடிக்க அனைத்து உதவிகளையும் அரசு செய்யும் என உறுதி அளித்தார்.

தற்போது இந்தூரில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்தின் பராமரிப்பில் கீதா இருக்கிறார்.

இந்தியாவுக்கு வந்து 5 ஆண்டுகளாக அவர் தனது பெற்றோரை தேடிவருகிறார். இதற்கிடையே பல தம்பதிகள் கீதாவின் பெற்றோர் என கூறி அணுகினர். ஆனால் அவர்களால் நிரூபிக்க முடியாதால் அவர்களை கீதா தனது பெற்றோராக ஏற்றுக்கொள்ளவில்லை. இருப்பினும் நம்பிக்கை குறையாமல் தனது குடும்பத்தை கண்டறியும் பாசப்போராட்டத்தில் கீதா இறங்கியுள்ளார்.

இந்தநிலையில் அவர் தன் வீட்டைப்பற்றி சொன்ன அடையாளங்களை வைத்து, மராட்டிய மாநிலம் நாந்தெட் நகருக்கு அவரை தொண்டு நிறுவனம் நேற்று முன்தினம் அழைத்துச் சென்றது. அங்கு பல இடங்களில் தேடியும் வீட்டையோ, பெற்றோரையே கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அவர் ஏமாற்றம் அடைந்தாலும் தொடர்ந்து இங்கேயே தங்கி பெற்றோரை தடும் முயற்சியில் இறங்கியுள்ளார். அவருக்கு வேண்டிய உதவிகளை செய்ய தொண்டு நிறுவனம் முன்வந்துள்ளது.



No comments:

Post a Comment