FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Sunday, December 20, 2020

பாகிஸ்தானில் இருந்து திரும்பி 5 ஆண்டுகளாக பெற்றோரை தேடும் இந்திய இளம்பெண் மராட்டியம் வந்து தேடுகிறார்

18.12.2020 மும்பை,

மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் வசித்து வருபவர் கீதா (வயது 30). இவர், வாய் பேச முடியாத, காது கேளாதவர் ஆவார். 20 ஆண்டுகளுக்கு முன்பு, 10 வயது சிறுமியாக இருந்தபோது, பாகிஸ்தானில் உள்ள லாகூர் ரெயில் நிலையத்தில் சம்ஜதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் தன்னந்தனியாக தவித்துவந்த அவரை, அங்குள்ள ஒரு தொண்டு நிறுவனம் ஒன்று தத்தெடுத்து வளர்த்தது.

இந்தநிலையில் முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜின் முயற்சியால், கடந்த 2015-ம் ஆண்டு அவர் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டார். அவரை இந்தியாவின் மகள் என சுஷ்மா சுவாராஜ் வர்ணித்தார். மேலும் அவரது குடும்பத்தை கண்டுபிடிக்க அனைத்து உதவிகளையும் அரசு செய்யும் என உறுதி அளித்தார்.

தற்போது இந்தூரில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்தின் பராமரிப்பில் கீதா இருக்கிறார்.

இந்தியாவுக்கு வந்து 5 ஆண்டுகளாக அவர் தனது பெற்றோரை தேடிவருகிறார். இதற்கிடையே பல தம்பதிகள் கீதாவின் பெற்றோர் என கூறி அணுகினர். ஆனால் அவர்களால் நிரூபிக்க முடியாதால் அவர்களை கீதா தனது பெற்றோராக ஏற்றுக்கொள்ளவில்லை. இருப்பினும் நம்பிக்கை குறையாமல் தனது குடும்பத்தை கண்டறியும் பாசப்போராட்டத்தில் கீதா இறங்கியுள்ளார்.

இந்தநிலையில் அவர் தன் வீட்டைப்பற்றி சொன்ன அடையாளங்களை வைத்து, மராட்டிய மாநிலம் நாந்தெட் நகருக்கு அவரை தொண்டு நிறுவனம் நேற்று முன்தினம் அழைத்துச் சென்றது. அங்கு பல இடங்களில் தேடியும் வீட்டையோ, பெற்றோரையே கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அவர் ஏமாற்றம் அடைந்தாலும் தொடர்ந்து இங்கேயே தங்கி பெற்றோரை தடும் முயற்சியில் இறங்கியுள்ளார். அவருக்கு வேண்டிய உதவிகளை செய்ய தொண்டு நிறுவனம் முன்வந்துள்ளது.



No comments:

Post a Comment