FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Thursday, March 4, 2021

ஆயிரத்தில் ஒரு குழந்தைக்கு காது கேளாமை பிரச்சினை : அரசு ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர் தகவல்



சென்னை 03.03.2021
இந்தியாவில் பிறக்கும் 1,000 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு காது கேளாமை பிரச்சினை உள்ளது என்று சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை காது, மூக்கு, தொண்டை (இஎன்டி) துறை தலைவர் கவுரி சங்கர் தெரிவித்தார்.

உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலின்படி ஆண்டுதோறும் மார்ச் 3-ம் தேதி ‘உலக செவித்திறன் தினம்’ கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் செவித்திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு காது, மூக்கு, தொண்டை துறைத் தலைவர் கவுரி சங்கர் முன்னிலை வகித்தார். மருத்துவமனை டீன் பி.பாலாஜி, கல்லூரியின் துணை முதல்வர் ஜமிலா ஆகியோர் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, மெட்ராஸ் இஎன்டி ஃபவுண்டேஷன் இயக்குநர் மோகன் காமேஷ்வரன் ஆகியோர், பிறவியிலேயே காது கேளாத குழந்தைகளுக்கு ‘காக்ளியர் இம்பிளாண்ட்’ கருவி பொருத்துவது குறித்து விரிவாகப் பேசினார். நிகழ்ச்சியில் பங்கேற்ற எம்என்ஜே குரூப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜெ.சுல்தான், ஏழை குழந்தைகளுக்கு பொருத்துவதற்காக தலா ரூ.10 ஆயிரம் மதிப்புடைய 100 காது கேட்கும் கருவிகளை மருத்துவமனைக்கு வழங்கினார்.

காது, மூக்கு, தொண்டை துறைத் தலைவர் கவுரி சங்கர் பேசும்போது, “இந்தியாவில் காது கேளாமை பிரச்சினை அதிகரித்து வருகிறது. பிறக்கும் 1,000 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு பிறவியிலேயே காது கேளாமை பிரச்சினை உள்ளது. ‘காக்ளியர் இம்பிளாண்ட்’ கருவி பொருத்துவதன் மூலம் அந்த குழந்தைகளுக்கு காது கேட்கும் திறனை கொண்டு வரலாம். பின்னர் பேச்சு பயிற்சியின் மூலம் குழந்தைகள் பேசத் தொடங்கிவிடும்” என்றார்.




No comments:

Post a Comment