FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Thursday, March 4, 2021

ஆயிரத்தில் ஒரு குழந்தைக்கு காது கேளாமை பிரச்சினை : அரசு ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர் தகவல்



சென்னை 03.03.2021
இந்தியாவில் பிறக்கும் 1,000 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு காது கேளாமை பிரச்சினை உள்ளது என்று சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை காது, மூக்கு, தொண்டை (இஎன்டி) துறை தலைவர் கவுரி சங்கர் தெரிவித்தார்.

உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலின்படி ஆண்டுதோறும் மார்ச் 3-ம் தேதி ‘உலக செவித்திறன் தினம்’ கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் செவித்திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு காது, மூக்கு, தொண்டை துறைத் தலைவர் கவுரி சங்கர் முன்னிலை வகித்தார். மருத்துவமனை டீன் பி.பாலாஜி, கல்லூரியின் துணை முதல்வர் ஜமிலா ஆகியோர் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, மெட்ராஸ் இஎன்டி ஃபவுண்டேஷன் இயக்குநர் மோகன் காமேஷ்வரன் ஆகியோர், பிறவியிலேயே காது கேளாத குழந்தைகளுக்கு ‘காக்ளியர் இம்பிளாண்ட்’ கருவி பொருத்துவது குறித்து விரிவாகப் பேசினார். நிகழ்ச்சியில் பங்கேற்ற எம்என்ஜே குரூப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜெ.சுல்தான், ஏழை குழந்தைகளுக்கு பொருத்துவதற்காக தலா ரூ.10 ஆயிரம் மதிப்புடைய 100 காது கேட்கும் கருவிகளை மருத்துவமனைக்கு வழங்கினார்.

காது, மூக்கு, தொண்டை துறைத் தலைவர் கவுரி சங்கர் பேசும்போது, “இந்தியாவில் காது கேளாமை பிரச்சினை அதிகரித்து வருகிறது. பிறக்கும் 1,000 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு பிறவியிலேயே காது கேளாமை பிரச்சினை உள்ளது. ‘காக்ளியர் இம்பிளாண்ட்’ கருவி பொருத்துவதன் மூலம் அந்த குழந்தைகளுக்கு காது கேட்கும் திறனை கொண்டு வரலாம். பின்னர் பேச்சு பயிற்சியின் மூலம் குழந்தைகள் பேசத் தொடங்கிவிடும்” என்றார்.




No comments:

Post a Comment