FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Thursday, March 4, 2021

ஆயிரத்தில் ஒரு குழந்தைக்கு காது கேளாமை பிரச்சினை : அரசு ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர் தகவல்



சென்னை 03.03.2021
இந்தியாவில் பிறக்கும் 1,000 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு காது கேளாமை பிரச்சினை உள்ளது என்று சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை காது, மூக்கு, தொண்டை (இஎன்டி) துறை தலைவர் கவுரி சங்கர் தெரிவித்தார்.

உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலின்படி ஆண்டுதோறும் மார்ச் 3-ம் தேதி ‘உலக செவித்திறன் தினம்’ கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் செவித்திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு காது, மூக்கு, தொண்டை துறைத் தலைவர் கவுரி சங்கர் முன்னிலை வகித்தார். மருத்துவமனை டீன் பி.பாலாஜி, கல்லூரியின் துணை முதல்வர் ஜமிலா ஆகியோர் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, மெட்ராஸ் இஎன்டி ஃபவுண்டேஷன் இயக்குநர் மோகன் காமேஷ்வரன் ஆகியோர், பிறவியிலேயே காது கேளாத குழந்தைகளுக்கு ‘காக்ளியர் இம்பிளாண்ட்’ கருவி பொருத்துவது குறித்து விரிவாகப் பேசினார். நிகழ்ச்சியில் பங்கேற்ற எம்என்ஜே குரூப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜெ.சுல்தான், ஏழை குழந்தைகளுக்கு பொருத்துவதற்காக தலா ரூ.10 ஆயிரம் மதிப்புடைய 100 காது கேட்கும் கருவிகளை மருத்துவமனைக்கு வழங்கினார்.

காது, மூக்கு, தொண்டை துறைத் தலைவர் கவுரி சங்கர் பேசும்போது, “இந்தியாவில் காது கேளாமை பிரச்சினை அதிகரித்து வருகிறது. பிறக்கும் 1,000 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு பிறவியிலேயே காது கேளாமை பிரச்சினை உள்ளது. ‘காக்ளியர் இம்பிளாண்ட்’ கருவி பொருத்துவதன் மூலம் அந்த குழந்தைகளுக்கு காது கேட்கும் திறனை கொண்டு வரலாம். பின்னர் பேச்சு பயிற்சியின் மூலம் குழந்தைகள் பேசத் தொடங்கிவிடும்” என்றார்.




No comments:

Post a Comment