FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Wednesday, March 31, 2021

தேர்தல் சந்தேகங்களுக்கு தீர்வு காண - மாற்றுத்திறனாளிகளுக்காக வீடியோ அழைப்பு எண் அறிமுகம் :



தி.மலை மாவட்டத்தில் 27 ஆயிரம் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும்,100 சதவீதம் வாக்குப்பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. அவர்களது வசதிக்காக தபால் வாக்குகளும், இந்த முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், நேரிடையாக சென்று வாக்களிக்க விரும்பும் வாக்காளர்களுக்காக, வாக்குச்சாவடி மையங்களில் சாய்வுதளம் மற்றும் சக்கர நாற்காலி வசதிகள் செய்து கொடுக்கப்படவுள்ளன.

இந்நிலையில், தேர்தல் தொடர்பான சந்தேகங்களை எளிதாக தெரிந்து கொள்வதற்காக 88707 00800 என்ற கட்டணம் இல்லாத சிறப்பு வீடியோ அழைப்பு உதவி எண் அறிமுகம் செய்யப்பட்டுள் ளது. இந்த எண்ணை 24 மணி நேரமும் மாற்றுத்திறனாளிகள் தொடர்பு கொள்ளலாம். காது கேளாத மாற்றுத்திறனாளி வாக்காளர்கள், வீடியோ அழைப்பில் தொடர்பு கொள்ளும்போது, அவர்களது சந்தேகங்களை, அவர்களும் புரிந்து கொள்ளும் வகையில் ‘சைகை மொழி பெயர்ப்பாளர் கள்’ மூலம் தகவல் தெரிவிக்கப் படவுள்ளது.

இதற்கிடையில், தேர்தலில் சிரமம் இல்லாமல் மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க, 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், தொகுதி வாரியாக கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், மாற்றுத் திறனாளிகள் தொண்டு நிறுவனம் மற்றும் மாற்றுத்திறனாளி ஒருவர் இடம் பெற்றுள்ளனர்.



1 comment:

  1. Zoom meeting
    Password number:-?
    Phone number:- 8015779149

    ReplyDelete