FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Wednesday, March 31, 2021

செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி மையம் :

25.03.2021
தென்காசி: செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க உதவி செய்வதற்கு வசதியாக மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் தென்காசி ஆட்சியர் அலுவலக தேர்தல் பிரிவில் காணொலி உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை, மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான சமீரன் தொடங்கிவைத்து, செயல்முறை விளக்கத்தை பார்வையிட்டார்.

மாற்றுத் திறனாளிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பதற்காக 9443621416 என்ற தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. காது கேளாத மாற்றுத்திறனாளிகள் தங்களுக்குரிய சந்தேகங்களை இந்த எண்ணில் வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் தொடர்புகொண்டு சைகைகள் மூலம் தெரிந்துகொள்ளலாம். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் உதவி மையம் காலை 10 மணி முதல் மாலை 5 வரை செயல்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment