FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Wednesday, March 31, 2021

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு நாடகம்

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு நாடகத்தில் பங்கேற்ற காதுகேளாத மாற்றுத்திறனாளிகள்

15.03.2021
திருவண்ணாமலை: சட்டப்பேரவைத் தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி திருவண்ணாமலை அடுத்த சம்மந்தனூர் ரங்கம்மாள் நினைவு காதுகேளாதோர் பள்ளியில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தி.மலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். அப்போது அவர் பேசும் போது, “திருவண்ணாமலை மாவட்டத்தில் 27 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். அவர்களுக்கு தபால் வாக்கு அளிக்கும் வசதியையும் தேர்தல் ஆணையம் ஏற்படுத்தி கொடுத்துள்ளது. 18 வயது நிறைவு பெற்ற அனைத்து மாற்றுத் திறனாளிகளும் தபால் வாக்கு அல்லது வாக்குச்சாவடிக்கு நேரில் சென்று தவறாமல் வாக்களிக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் வாக்களிக்கும் முறை மற்றும் விவி பாட் இயந்திரம் மூலம் வாக்கை உறுதி செய்வது குறித்து எடுத்துரைக்கப்பட்டது. அதன் பிறகு, 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் விழிப்புணர்வு குறித்த நாடகம் நடைபெற்றது. அதில், பங்கேற்றவர்களுடன் தேர்தல் அதிகாரிகள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமாரசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.


No comments:

Post a Comment