FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Monday, July 5, 2021

கொரோனா தொற்று குறித்து 12 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்திய காதுகேளாத மாற்றுத்திறனாளி

திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டம் ஆதியூரை சேர்ந்தவர் தினகரன் (வயது 21). காதுகேளாத மாற்றுத்திறனாளியான இவர் மோட்டார் சைக்கிள் பந்தய வீரர் ஆவார். கொரோனா தொற்று குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தனது மோட்டார் சைக்கிளில் முககவசம் அணிய வேண்டும், கைகளை அடிக்கடி கழுவ வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என கொரோனா தடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசாரங்களை அச்சடித்து ஓசூரில் இருந்த கடந்த ஏப்ரல் மாதம் 28-ந் தேதி விழிப்புணர்வு பிரசார பயணத்தை தொடங்கினார்.

தொடர்ந்து இந்திய எல்லையான லடாக் பகுதி வரை 12 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் மோட்டார்சைக்கிளில் சென்று அனைத்து பகுதிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி மீண்டும் கடந்த 15-ந் தேதி திருப்பத்தூருக்கு வந்து சேர்ந்தார்.

அவரை நேற்று முன்தினம் கலெக்டர் சிவன்அருள் பாராட்டி பொன்னாடை அணிவித்தார். மேலும் திருப்பத்தூர் மாவட்ட காது கேளாதோர் சங்க நிர்வாகிகளும் வாழ்த்து தெரிவித்தனர்.



No comments:

Post a Comment