FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Monday, July 5, 2021

கொரோனா தொற்று குறித்து 12 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்திய காதுகேளாத மாற்றுத்திறனாளி

திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டம் ஆதியூரை சேர்ந்தவர் தினகரன் (வயது 21). காதுகேளாத மாற்றுத்திறனாளியான இவர் மோட்டார் சைக்கிள் பந்தய வீரர் ஆவார். கொரோனா தொற்று குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தனது மோட்டார் சைக்கிளில் முககவசம் அணிய வேண்டும், கைகளை அடிக்கடி கழுவ வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என கொரோனா தடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசாரங்களை அச்சடித்து ஓசூரில் இருந்த கடந்த ஏப்ரல் மாதம் 28-ந் தேதி விழிப்புணர்வு பிரசார பயணத்தை தொடங்கினார்.

தொடர்ந்து இந்திய எல்லையான லடாக் பகுதி வரை 12 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் மோட்டார்சைக்கிளில் சென்று அனைத்து பகுதிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி மீண்டும் கடந்த 15-ந் தேதி திருப்பத்தூருக்கு வந்து சேர்ந்தார்.

அவரை நேற்று முன்தினம் கலெக்டர் சிவன்அருள் பாராட்டி பொன்னாடை அணிவித்தார். மேலும் திருப்பத்தூர் மாவட்ட காது கேளாதோர் சங்க நிர்வாகிகளும் வாழ்த்து தெரிவித்தனர்.



No comments:

Post a Comment