FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Tuesday, July 6, 2021

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு செல்லிடப்பேசி, தையல் இயந்திரம் வழங்கல்


06.07.2021 நாகப்பட்டினம் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு கரோனா நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நாகை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் அ.அருண் தம்புராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் தாய்மார்கள் என 12 பேருக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள், பார்வையற்ற, காதுகேளாத, வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளிகள் 28 பேருக்கு ஸ்மார்ட் போன்கள், மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் மூலம், ஒருவருக்கு விபத்து மரணத்துக்கான உதவித்தொகை ரூ.1 லட்சத்துக்கான காசோலை என மொத்தம் 41 பயனாளிகளுக்கு ரூ.5.24 லட்சம் மதிப்பிலான கரோனா நிவாரண உதவிகளை ஆட்சியர் வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், தொழிலாளர் உதவி ஆணையர் பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.ய

No comments:

Post a Comment