FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Tuesday, July 6, 2021

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு செல்லிடப்பேசி, தையல் இயந்திரம் வழங்கல்


06.07.2021 நாகப்பட்டினம் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு கரோனா நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நாகை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் அ.அருண் தம்புராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் தாய்மார்கள் என 12 பேருக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள், பார்வையற்ற, காதுகேளாத, வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளிகள் 28 பேருக்கு ஸ்மார்ட் போன்கள், மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் மூலம், ஒருவருக்கு விபத்து மரணத்துக்கான உதவித்தொகை ரூ.1 லட்சத்துக்கான காசோலை என மொத்தம் 41 பயனாளிகளுக்கு ரூ.5.24 லட்சம் மதிப்பிலான கரோனா நிவாரண உதவிகளை ஆட்சியர் வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், தொழிலாளர் உதவி ஆணையர் பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.ய

No comments:

Post a Comment