FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Tuesday, July 6, 2021

மாற்றுத்திறனாளிகள் 58 பேருக்கு ரூ.5.54 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் :

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, எம்எல்ஏ பூண்டி கே.கலைவாணன் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கி, ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் பேசியது: மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 25 பேருக்கு தலா ரூ.5,287 மதிப்புள்ள மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள் மற்றும் காதுகேளாத, வாய் பேசாத மாற்றுத்திறனாளிகள் 33 பேருக்கு தலா ரூ.12,799 மதிப்பிலான ஸ்மார்ட் செல்போன்கள் வழங்கப்பட்டன. இதன்படி, மொத்தம் 58 பயனாளிகளுக்கு ரூ.5,54,542 மதிப்பிலான உபகரணங்கள் வழங்கப்பட்டன என்றார்.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் செ.பொன்னம்மாள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment