FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Tuesday, July 6, 2021

மாற்றுத்திறனாளிகள் 58 பேருக்கு ரூ.5.54 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் :

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, எம்எல்ஏ பூண்டி கே.கலைவாணன் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கி, ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் பேசியது: மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 25 பேருக்கு தலா ரூ.5,287 மதிப்புள்ள மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள் மற்றும் காதுகேளாத, வாய் பேசாத மாற்றுத்திறனாளிகள் 33 பேருக்கு தலா ரூ.12,799 மதிப்பிலான ஸ்மார்ட் செல்போன்கள் வழங்கப்பட்டன. இதன்படி, மொத்தம் 58 பயனாளிகளுக்கு ரூ.5,54,542 மதிப்பிலான உபகரணங்கள் வழங்கப்பட்டன என்றார்.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் செ.பொன்னம்மாள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment