FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Monday, July 5, 2021

கன்னியாஸ்திரி தூக்குப்போட்டு தற்கொலை

01.07.2021 சென்னை,
சென்னை தேனாம்பேட்டை ஜி.என்.செட்டி சாலையில் காது கேளாதோர் மற்றும் பார்வையற்றவர்களுக்கான பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அருள் பெமினா (வயது 55) என்பவர் கடந்த 25 ஆண்டுகளாக தமிழ் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.

கன்னியாஸ்திரியான இவர், அந்த பள்ளியிலேயே தங்கி இருந்து, கடந்த 2 ஆண்டுகளாக மன அழுத்தத்துக்கான சிகிச்சையும் பெற்று வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு அவர் தான் தங்கிருந்த அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த தேனாம்பேட்டை போலீசார், அருள் பெமினாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் அறையில் இருந்த கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர்.

அந்த கடிதத்தில் அவர், “எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. மன அழுத்தம் காரணமாக இரவில் தூக்கம் வராததால் தற்கொலை செய்து கொள்கிறேன்” என எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






No comments:

Post a Comment